Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் மீதான தாக்குதல் தொடரும் இனவழிப்பு

Featured Replies

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல்

தொடர்ச்சியாக  ,திட்டமிடப்பட்ட வகையில் பல்கலைகழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலானது , தொடரும்  இனவழிப்பு அவலங்களின்  மற்றுமோர்  வடிவம்,

கட ந்த வருடம் அக்டோபர் மாதம் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் பத்திற்கும் மேற்பட்டோரால் தலையில்  தாக்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இம்முறையும் இரு வேறு பீடங்களை சேர்ந்த மாணவர் ஒன்றியத் தலைவர்கள் இருவர், ஏனைய ஜந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டுளார்கள் .இவர்கள் அனைவரும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளில் முன் நின்று செயற்பட்டிருக்கிறார்கள்.இவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களோடு  இருப்பவர்களாலேயே  காவல் துறைக்கும் ,புலனாய்வுப் பிரிவினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் சாத்தியங்கள் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஆளும் அரச மட்டங்களிலிருந்து இது வரைக்கும் இது பற்றிய எந்த கண்டனங்களும் வராமை தமிழ் மக்களின் மனங்களில் பெரும் கேள்வியினை தோற்றுவித்துள்ளமை தவிர்க்க முடியாதுள்ளது.

 

முதலில் இங்கே ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு இனத்தினை அழிப்பது என்பது வெறுமனே உயிர்களை படுகொலை செய்வது மட்டும் கிடையாது.மாறாக அந்த இனத்தின் வேர்களான பண்பாடுகள்,அடையாளங்கள் ,தொன்மைச் சான்றுகள்,இனவிருத்தி,மொழி,கல்வி என்பனவற்றின் மூலங்கள் திட்டமிட்டு அளிக்கப்படும். அந்த வகையில் பல உயிர் மூல,உயிரற்ற அடையாளங்கள் இருந்த இடம் தெரியாமல் தமிழீழத்தில் சிதைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் ஒவ்வொரு தலைப்பில் நின்றும் ஆய்வு செய்யப்பட்டு பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.  இலங்கையின்  பணப் பயிர்ச் செய்கை யாவும்  தென்னிலங்கையோடு முடக்கப்பட்டமையும்,முக்கிய உற்பத்திப் பொருட்களின் அரச வருமானங்கள் யாவும் தமிழ் மக்களிற்கு எந்தக் காலத்திலும் பகிர்ந்தளிக்கபடாத நிலையில், ஈழத்தமிழ் மக்கள் தமது வாழ்விற்கு முற்று முழுதாக தங்கியிருந்தது அவர்களின் நிலங்களிலும், கல்வியிலும் மட்டுமே.

 

ஆனால் 2009 ல் இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்கள் தமிழ் மக்கள் உயிர்களை  மட்டுமன்றி, அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான நிலங்களின் பெரும் பகுதியையும் காவு கொண்டு நிற்கிறது. இராணுவத்தினால் கையகப்படுத்தாது எஞ்சி இருக்கும் மீதி நிலங்கள் மனிதர் வாழ முடியாதவாறு ,படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எலும்புக் கூடுகளால்  நிறைந்து கிடக்கிறது. அந்த வரிசையில்  இன்னமும் அவர்களிடம் நிறைந்திருப்பதும் ,அவர்கள் பற்றி நிற்பதும் ஒரேயொரு விடயத்தினை மட்டும் தான். அது ஈழத்தமிழ் மக்களின் கல்வியும், அதற்கு மூலமாக தமிழர் பிரதேசத்தில் புத்திஜீவிகளை உருவாக்கிய யாழ்ப்பான பல்கலைக் கழகமும் தான்.

கிழக்குமாகாண த்தில், பல்கலைக்கழகம் அதன் ஆணி வேர் சிதைக்கப்பட்டு, மாணவர்கள் கடந்த காலங்களில் பல நிலைகளில் அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள். அரசியல் அங்கே ஊடுருவியிருந்தமையை  நாம் எல்லோரும் அறிவோம். பட்டதாரி மாணவர்களுக்கென அரசினால் கொண்டு வரப்பட்ட எந்த வேலை வாய்ப்புக்களும், எந்த சமூக நிவர்த்தி  திட்டங்களும் சரியான முறையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை. 

இந்த வகையான விடயங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போதும் ,படிக்கும் போதும் வழக்கம் போல் அடக்குமுறை ,தமிழர்களுக்கு உரிமைகள் வழங்க மறுத்தல் போன்ற  இலங்கை  அரசின் நீண்ட கால செயற்பாடுகளில் ஒன்றாக தெரிந்தாலும்,இதன் உள்ளே அடங்கியிருப்பது வேறு விடயம்.

தொடர்ச்சியாக கல்விச் சமூகத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதும்,அவர்களை அச்சுறுத்தல் நிலையில் வைத்திருப்பதன் மூலமும் ,படித்த தமிழ் பட்டதாரிகளை நீண்ட காலம் எந்த நியமனங்களையும் வழங்காது புறக்கணிப்பதன் மூலமும் உளவியல் ரீதியிலான தாக்கத்தினை அவர்கள் மனங்களில் ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். இதன்மூலம்

கல்வி மான்களாக  இருந்தாலும் எதிர் காலச் தமிழ்ச் சமூகம் அடிப்படையில் எல்லாவற்றுக்கும் கையேந்தும் சமூகமாக மாற்றப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரச  இராணுவ நிர்வாகம் உறுதியாக உள்ளதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்நிலையில் இம்முறை யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களும், கைதும்   நிலத்தில்  இருக்கும் மக்களை விட,  புலத்தில்   வாழும் தமிழீழ மக்களுக்கு காத்திரமான  பல செய்திகளை சொல்லி நிற்கிறது.

எமது மாணவர்களை இவர்கள் இவ்வளவு அராஜகமாக தாக்குவதும் ,அவர்களின் கல்விச் செயற்பாடுகளை முடக்குவதும் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

தமிழீழத் தாய்மார்கள் தமிழீழத்தில் பிறந்ததை விட வேறு என்ன பாவம் செய்தார்கள்? பெற்ற பிள்ளைகளை,அதுவும் பல்லாயிரக்கணக் கில்  போரிலும், போராட்டத்திலும், சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் என்று பறி கொடுத்து விட்டு பரிதவித்து அலைகிறார்கள். பெற்ற பிள்ளை இருக்கிறானா இல்லையா என்று கூடத் தெரியாமல் துடிக்கிறார்கள்.செய்திகளில் வரும் கண்ணீ ரோடும் கண்களும், வலி இறுகிய அந்த தாய்மார்களின் முகங்களும்  பார்க்க முடியவில்லை. இவ்வளவு நிலைகளிலும் இருந்து காப்பாற்றி அவர்களை படிக்க வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே,நடு இரவுகளில் வந்து கதவைத் தட்டி கைது செய்யும் போது அந்த தாய்மார்களின் நிலை என்னவாக இருக்கும்?அவர்களின் துயர் என்னவாக இருக்கும்?

 

புலம் பெயர் நாடுகள் முழுவதும் எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தினை அவர்கள் படிக்கும் மாணவர் சமூகத்திடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும். கண்டன அறிக்கைகளும்,ஆர்ப்பாட்டங்களும்,பேரணிகளும் கடந்து, இவ்விடயம் இன்னுமோர் பரிமாணத்தில் அவசியமாகவும் , உடனடியாகவும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் பல்கலைக்கழக மாணவ சமுதாயம், எங்கள் மாணவர்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் இந்த அக்கிரமங்கள் பற்றி அறிவுறுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.அங்கிருக்கும் அந்த கல்விச் சமூகத்தினை காக்க வேண்டிய பொறுப்பும் ,கடமையும் இங்கிருக்கும் கல்விச் சமுதாயத்திற்கு நிறையவே உண்டு. மாணவர்களுக்கும்,  கல்விச் -

சமூகத்திற்கும்  நடக்கும் அக்கிரமங்களை சர்வதேச சமூகத்தின்  பார்வைக்கு  கொண்டு  வர வேண்டியதும்,ஆதரவாக​ குரல் கொடுக்க​ வேண்டியதும் எங்கள் கடமையாகும்.

இம்முறை அந்த மாணவர்களின் அவலக் குரல் புலம்பெயர் சமுதாயத்தினை நோக்கி எழுப்பப் பட்டிருப்பதனை நாம் அனைவரும் கவனத்தில் கொள்வோம்.

எனவே இதனை வெறும் மாணவர் விடயமாக பார்க்காது,

‘ தமிழ் மக்கள் மத்தியில் உள்ளஅறிவு சார் சமூகத்தின் குரல்வளையை  நசுக்கும்  ஒரு  நடவடிக்கை என்றே கொள்ளப்பட​ வேண்டும். இது   பொது விடயம் என்பதனாலும், மாணவர்களை தாக்குதல் என்பது ​ எந்த ஒரு நிலையிலும் அனுமதிக்கப்பட​ முடியாத​ ஒரு விடயமென்பதனாலும்,  இலங்கை  இனவாத அரசினால் தமிழ்கல்விச் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக​ மேற்கொள்ளப்படும்  தாக்குதல் ,அச்சுறுத்தல்  கைது செய்தல்,தடுத்து வைத்தல் போன்றவற்றினால் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள் மிகக் கொடுமையாக மீறுவது, கலாச்சார  பண்பாட்டியல் இனவழிப்பின் மற்றுமொரு  வடிவமென்பதனை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

ரஜனி.எஸ் 

tamilarts.heritage@gmail.com

03.12.2012

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல்

 

புலம் பெயர் நாடுகள் முழுவதும் எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தினை அவர்கள் படிக்கும் மாணவர் சமூகத்திடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும். கண்டன அறிக்கைகளும்,ஆர்ப்பாட்டங்களும்,பேரணிகளும் கடந்து, இவ்விடயம் இன்னுமோர் பரிமாணத்தில் அவசியமாகவும் , உடனடியாகவும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் பல்கலைக்கழக மாணவ சமுதாயம், எங்கள் மாணவர்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் இந்த அக்கிரமங்கள் பற்றி அறிவுறுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.அங்கிருக்கும் அந்த கல்விச் சமூகத்தினை காக்க வேண்டிய பொறுப்பும் ,கடமையும் இங்கிருக்கும் கல்விச் சமுதாயத்திற்கு நிறையவே உண்டு. 

 

மாணவ சமூகத்திற்கு ஆதரவான புலம்பெயர் போராட்டங்கள் :

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.