Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் வலுக்கிறது

Featured Replies

இலங்கையில் அரசுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்து வருகிறது.


தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரச தரப்புக்கு ஆதரவாகவும், நீதித்துறையில் அரசின் தலையீட்டை எதிர்த்து தலைமை நீதிபதிக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் இன்று-செவ்வாய்கிழமை(4.12.12) கொழும்பில் நடைபெற்றன.

 

தம் மீதான குற்றச்சாட்டை விசாரித்து வரும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன்னர் தலைமை நீதிபதி இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார். அடுத்த விசாரணை இம்மாதம் நாளை மறுதினம்(6.12.12) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று கூறி, அவர் மீது அரச தரப்பு 14 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும், நிதி முறைகேடுகள் எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் தனது வழக்கறிஞர்கள் மூலம் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற தேர்வுக் குழுவினர் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை ஷிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

ஆனால் தான் பதவி விலகப் போவதில்லை என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமான தீர்ப்புகளை வழங்கி வருவதற்காக அரச தரப்பால் இலக்கு வைக்கப்படுகிறது என்று, தலைமை நீதிபதியின் ஆதரவாளரும், அரசியல் சாசன வழக்கறிஞருமான ஜெ சி வெலியாமுன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் இருக்கும் அனைத்து அமைப்புகளிலும், இதுவரை நீதித்துறை மட்டுமே சுயாதீனமான அமைப்பாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டும் அவர், அதன் காரணமாகவே இவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் கூறுகிறார்.
 

எனினும் உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக, அரசுக்கு ஆதரவானவர்கள், தலைமை நீதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு நாட்டின் மன்னரைப் போல பலம் வாய்ந்தவர் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.


எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் இரு தூண்களாக இருக்கும் நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது.

 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121204_lankajudiciaryrow.shtml

 

121204105444_shirani_bandaranayake_cji_5

 

 

 

தலைமை நீதிபதிக்கு ஆதரவளிக்கும் மாதுலவாவே சோபித தேரர்

 

 

121204124744_jaffna_political_protest3_5

 

        தலைமை நீதிபதிக்கு எதிராக அரச ஆதரவாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம்

 

 

Edited by akootha

  • தொடங்கியவர்

  • தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பிரதம நீதியரசருக்கு மதிய போசன உணவு வழங்க முன்வந்த போதும் பிரதம நீதியரசர் அதனை நிராகரித்து விட்டார்.
  • மதிய போசனத்தின் பின் 2.45 மணிக்கு பிரதம நீதியரசர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். உதவி படைக்கல சேவிதர் பிரதம நீதியரசரை நாடாளுமன்ற தொகுதி வாசலில் வரவேற்றார். சென்ற தடவை போலன்றி கடமையிருந்து பொலிஸார் இம்முறை பிரதம நீதியரசருக்கு மரியாதை செலுத்தினர்.
  • இதேவேளை தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை அவதானிப்பதற்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுமதி கோரியிருந்தது. அதற்கான அனுமதியை வழங்குவதற்கு தெரிவுக்குழு மறுத்துவிட்டது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54117-2012-12-04-17-24-03.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.