Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை கைவிட்டது ஐ.நா.

Featured Replies

ஈழத்தமிழர்களை கைவிட்டது ஐ.நா.


ஈழத்தில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஆனால் போரினால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், இழந்தவைகள் எத்தனை என்ற முழுமையான விவரம் இன்னமும் சர்வதேசத்திடம் கிடைக்கவில்லை.


இறுதிப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் சர்வதேசப் போர் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

 

இன்று நிலைமை மாறி இலங்கை அரச படைகளின் கால்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. 

 

இந்தநிலைமை மாற வேண்டும். தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். மீண்டும் தமிழர்களுடைய பிரதேசம் கட்டி எழுப்பப்பட வேண்டும். தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்த மாவீரர் நாளில் உறுதி கொள்வோம்.

 

ஈழத்தில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஆனால் போரினால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், இழந்தவைகள் எத்தனை என்ற முழுமையான விடயம் இன்னமும் சர்வதேசத்திடம் கிடைக்கவில்லை.


இறுதிப்போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் சர்வதேசப்போர் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

 

இதுபற்றி ஆராய இந்தோனேஷியாவின் மர்சுகி தருஷ்மனைத் தலைவராகவும், தென்னாபிரிக்காவில் யாஸ்மீன் சூகா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா. சிறப்புக் குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்தார். அந்தக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் கட்ட அறிக்கையை அளித்தது.


அந்த அறிக்கையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதிப் போரின்போது ஐ.நா. தனது கடமையைச் சரியாகச் செய்வதற்குத் தவறியிருந்தது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் ஐ.நா. எவ்வாறு தவறிழைத்தது என்பதை ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் இறுதி அறிக்கை ஐ.நாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலேயே 128 பக்கத் தகவல்கள் அகற்றப்பட்டதாகக் கூறி பி.பி.சி. செய்தி சேவை கசியவிட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.நாவை நோக்கி சர்வதேச சமூகத்தின் பார்வை திரும்பியது.


இறுதிப் போரின் போது ஐ.நா. கடமை தவறியதாகக் கூறும் அந்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும் பின்னர் பகிரங்கமாக வெளியிட்டார். ஆனாலும் அந்த அறிக்கையில் பல சரத்துக்கள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதற்கிடையில் இலங்கை விவகாரத்தில் ஐ.நா. கடமை தவறியதை ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து பான் கீ முனையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது.


இதற்கிடையில் இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும் சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளைத் தணிக்கை செய்ததாக ஐ.நா. அமைப்பின் உயர் அதிகாரி சுகனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

 

சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றைப் பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. சபை விட்ட தவறுகளை எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடக்கூடாது என்ற உறுதியை வழங்க வேண்டும்.


இலங்கை அரசு திட்டமிட்டு போரை நடத்தியது. இதனால் போர் வலயத்தில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்கள் வெளிவராது போயின என்று சனல் 4 தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசு தொடங்கும்போது சாட்சியங்களை இல்லாமல் செய்யும் பணிகளையும் திட்டமிட்டு நடத்தியது.

 

ஆனால் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களை அரச படைகள் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றது தொடக்கம் இசைப்பிரியா உட்பட பெண் போராளிகளை மானபங்கப்படுத்திய பின் சுட்டுக் கொன்றது வரை வெளிச்சத்துக்கு வந்தன.


முள்ளி வாய்க்காலில் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்தும் என்ன பயன் ஏற்பட்டது. போரை எதிர்கொண்ட நாடுகளில் இப்படியான துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே அதேபோல் தான் முள்ளிவாய்க்காலிலும் இடம் பெற்றது என்று சொல்லிவிடலாம்.

 

ஆனால் போரை எதிர் கொண்ட நாடுகள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டன. இலங்கையில் மட்டும் தான் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மீண்டும் இன்னுமொரு போராட்டத்துக்கான வழியினை ஏற்படுத்தி விடுவதற்கான செயற்பாடுகளிலேயே இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.


இறுதிப்போர் இடம்பெற்றிருந்த போது வடக்கிலிருந்து ஊடகங்கள் முதல் கட்டமாக வெளியேற்றப்பட்டன. சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. அதன் பின்னர் சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. இந்த நிலையிலேயே ஐ.நா. சபையும் அங்கிருந்து விலகிக்கொண்டது.

 

இதன்போதே வன்னியில் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வெளிவராது போயின. வன்னியில் இறுதிப்போரில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை என்றுமே மறக்க முடியாது. வன்னியில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


இலங்கை அரசு எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ள புள்ளி விவரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வன்னியில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 தமிழர்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் போரின்போது வன்னியி லிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டனர்.

 

அவர்களுடன் ஒப்பிடும்போது ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேரைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன? ஒருவேளை அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது மாயமா கியோ இருக்கலாம் என்று அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அரசும் சர்வதேசமும் தமிழர்களுடைய பிரச்சினையில் கை யாண்ட விதம் தமிழர்களுடைய வரலாற் றில் என்றுமே மறக்க முடியாதவை. முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த இறுதி இடமாக இருந்தால் தமிழர்களின் தீர்வு விடயத்தில் அக்கறை கொண்டு அதனைச் செயற்படுத்த முன்வர வேண்டும். இல்லாது போயின் முள்ளி வாய்க்கால் இன்னுமொரு போருக்கான ஆரம்ப இடமாக இருக்கும் என்பது வெளிப்படையாகும். இதனை எவராலும் தடுக்க முடியாது போய்விடும் என்பதை உணர்வார்களா?

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5783942906759437

 

 

  • தொடங்கியவர்

ஐக்கிய நாடுகள் சபையானது துணை பொது செயலாளர் நாயகம் ஜேன் ஹெலியசன் தலைமையில் மதிப்பாய்வு குழுவொன்றை அமைக்கவுள்ளது என இன்டர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது சார்லஸ் பெட்ரி அறிக்கை அல்லது 2009  ஆம் ஆண்டில் இலங்கையில் ஐ.நா. நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கே  மதிப்பாய்வு குழுவை அமைக்கவுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்ரிக்கி தெரிவித்துள்ளார்.

 

 

சார்லஸ் பெட்ரியின் அறிக்கை ஐ.நா. தலைமையகத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னர்  கையளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112510

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.