Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

400 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வீசா வழங்கியது அவுஸ்திரேலியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Australia-seithy-2012-150.jpg

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உள்ள 400 புகலிடக் கோரிக்கையாளர் வீசா அனுமதி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இணைப்பு வீசா வழங்கப்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கே இவ்வாறான இணைப்பு வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் டார்வினிலிருந்து வெளியேறி விக்டோரியா, குயின்ஸ்லான்ட் போன்ற இடங்களில் குடியமர்வார்கள் என்றும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் இவர்களுக்கு இணைப்பு வீசா வழங்கப்பட்டிருப்பதுடன், இவர்களுக்கு அடிப்படையான சில நலன்புரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுமென அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

  

இணைப்பு வீசாக்கள் வழங்கப்படுமென கடந்த வருடம் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து இதுவரை 8500 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இந்த இணைப்பு வீசாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்து 56 இலங்கையர்கள் மனுத் தாக்கல் செய்திருப்பதால் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது எனக் கூறுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான காரணங்களைக் கூறியிருப்பதால் அவர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், அவர்களின் விசாரணைகள் முடியும் வரை திருப்பி அனுப்பமுடியாது எனக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்விதமிருக்க படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களில் 46 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்குத் தாமாகவே முன்வந்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் 56 பேரின் நாடு கடத்தலுக்கு எதிராக சிட்னி நீதிமன்றம் தடையுத்தரவு விதித்தமையை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் உள்ள தமிழர்களின் அமைப்பான தமிழ்ச்சங்க சம்மேளனம் வரவேற்றுள்ளது. எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை பேச்சாளரின் கருத்தை சம்மேளனம் கண்டித்துள்ளது. குறித்த நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏனைய சட்டவிரோத அகதிகளை வெளியேற்றுவது தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை என்று குடிவரவுத்துறை பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். இந்தக்கருத்து உண்மையான இலங்கை தமிழ் அகதிகளின் விடயத்தில் பாதிப்பை தரக் கூடியது என்று தமிழ் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. எனவே இலங்கையின் உண்மையான தமிழ் அகதிகளின் விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உரிய முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=71538&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.