Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழீழ முழக்கத்துடன் மீண்டும் சிலிர்த்து எழும் தமிழ் இளையோர்"

Featured Replies

"தமிழீழ முழக்கத்துடன் மீண்டும் சிலிர்த்து எழும் தமிழ் இளையோர்"

 

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதற்கான அக, புற நிலைகளை இலங்கைத் தீவில் உருவாக்கிய பெருமை சிங்கள வன்கொடுமையாளர்களையே சாரும்.

 

அது மட்டுமல்லாமல், இலங்கைத் தீவில் தமது வர்நிலையை மேம்படுத்துவதற்கான தேவைகளைக் குறிவைத்து அமைதி வாழ்வு வாழ்ந்த ஈழத் தமிழர்களைப் புலியாகப் பாயவைத்த பெருமையும் சிங்கள இனவாதிகளுக்கே சேரும்.

 

 

சிங்கள இனவாத, வன்கொடுமைகளுக்கு ஈழத் தமிழர்கள் அனைத்தையும் இழந்து நின்ற முள்ளிவாய்க்காலின் பின்னரான காலங்களிலும் சிங்கள இனவாதம் தன்னை மறு ஆய்விற்கு உள்ளாக்கவில்லை. மாறாக, பெரும் இன அழிப்புப் போர் ஒன்றினால் பெற்ற வெற்றியின் போதையில், அதை இன்னொரு மகாவம்ச வெற்றியாகக் கணித்துக்கொண்ட சிங்கள இனவாதம், அதே பாதையில் பயணித்துத் தன் மகாவம்ச இலக்கை அடைவதற்கு முயற்சி செய்கின்றது.

 

இதுவே, இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான ஒரு காலத்தை சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்க முடியாது போனதற்குக் காரணமாக அமைந்தது. இனப் போரின் உச்ச நாட்களில் பெற்ற வெற்றியின் பலன்களை எல்லாம், தமிழினத்தை அடிமைப்படுத்துவதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திக்கொண்டதால், போரின் முடிவில் இலங்கைத் தீவில் சமாதானத்தை உருவாக்க இயலவில்லை.

 

இது உலக வரலாற்றின் நியமங்களை மீறிய சிங்கள இனவாத நிகழ்ச்சிநிரல் மட்டுமே இப்போதும் தமிழ் மக்களுக்கான தேசத்தை உருவாக்கும் உந்து சக்தியாக இருக்கின்றது. அதற்கான நியாயங்களை சர்வதேச அரங்குகளிலும் கையளித்து வருகின்றது. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம், அதனை வேகமாகப் பின் நகர்த்தித் தன் மகாவம்சக் கற்பனைக்குள் புதைத்துவிட முயற்சி செய்கின்றது.

 

சிங்கள இனவாதம், தனது நிகழ்ச்சிநிரலுடன் வரலாற்றை நகர்த்துவதற்கு எத்தகைய விலையைச் செலுத்தவும் தயாராக உள்ளது. அந்த இனவாத சிந்தனைக்குள் மூழ்கடிக்கப்பட்ட சிங்கள மக்களும் தங்கள் மகாவம்சக் கனவுக்காக எதையும் இழக்கச் சித்தமாக இருக்கின்றார்கள். அது சாத்தியம்தானா... என்பது குறித்த எந்த வினாவும் அவர்களிடம் கிடையாது.

 

எனவேதான், இலங்கைத் தீவின் அத்தனை வளங்களையும் ஊதிப் பெருக்கவைத்த சிங்களப் படைகளுக்குப் பெரும் தீனியாக வழங்கப்படுவதை தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றைச் சொல்லுடன் திருப்திபட்டுக் கொள்கின்றனர் சிங்கள மக்கள். இரண்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைத் தீவில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் உள்ளனர். அதிலும், தற்போது இரண்டு இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட யாழ். குடாநாட்டில் மட்டும் இருபதாயிரத்திற்கும் அதிகமான படையினர் நிலைகொண்டுள்ளனர். குறிப்பாகச் சொன்னால், ஒவ்வொரு பத்துத் தமிழனையும் ஒரு சிங்களப் படையினன் குறி பார்த்து நிற்க வைக்கப்பட்டுள்ளான்.

 

சிங்கள இனவாதம் நினைப்பது போல், சில தமிழ் கைத் தடிகள் சொல்வது போல் இது பலத்துக்கான அறிகுறி அல்ல. மிகப் பெரிய பலவீனமும் அதிலிருந்துதான் உருப்பெறப் போகின்றது. ஒவ்வொரு செயலுக்கும், அதே அளவு எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் இங்கேதான் தன் வேலையைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. உயிரியலில் இதைக் கூர்ப்படைவது என்று சொல்வார்கள். பழக்கப்பட்டு விட்டால், எந்த ஆபத்தும் பயத்தை உருவாக்கி விடாது.

 

இதுவே, இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலமை. சிங்கள தேசத்தின் எல்லையற்ற அடக்குமுறை தமிழ் இளைஞர்களது மனப் பயங்களை அறுத்தெறியத் தொடங்கியுள்ளது. அதுதான், யாழ். பல்கலைக் கழகத்தில் நடந்தேறியுள்ளது. அந்த மாணவர்களுக்கு நன்றாகவே தெரியும், அடுத்தது என்வென்று. தாக்குதலையும், கைதுகளையும், தடுப்புக் காவல்களையும், சித்திரவதைகளையும் எதிர்பார்க்காத நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் களத்தில் குதிக்கவில்லை.

 

சிங்களப் படைகளால் தொடர்ந்து காயப்படுத்தல்களுக்குள்ளான தமிழ்ச் சமுதாயத்தின் மாணவர்களது இந்தத் துணிவு சிங்கள தேசத்திற்கு ஒரு பெரும் செய்தியைத் தெரிவிக்கின்றது.

 

சுதந்திர இலங்கையில் 83 வரை அடி வாங்கிய தமிழர்கள் எப்படிப் புலிகளாக உருவெடுத்தார்களோ... அப்படி ஒரு கொதி நிலைக்குள் யாழ். சமூகம் தள்ளப்பட்டுள்ளது. வரப்போகும் ஒரு பிரளயத்தின் கட்டியமாகவே யாழ். பல்கலை மாணவர்களது போராட்டத்தை நோக்கவேண்டும்.

 

சிங்கள தேசம் தன் இராணுவ பலத்தில் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமே அதனைத் தொடர்ந்து காப்பாற்றப் போவதில்லை. முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நடாத்தி அந்த வெற்றிக் களிப்புடன் மூன்று வருடங்களைத்தான் சிங்கள தேசம் கடந்திருக்கின்றது. இந்த மூன்று வருடங்களிலும், சர்வதேச நாடுகள் மத்தியிலும், சர்வதேச அரங்கங்களிலும் வேகமான சரிவுகளை எதிர்கொண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்களுக்கு யாழ். பல்கலை மாணவர்கள் விவகாரம் மேலும் பல சங்கடங்களை உருவாக்கும்.

 

யாழ். பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல்களும், கைதுகளும், அதன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களும் தீயாகப் பரவி, புலம்பெயர் தமிழர் தளங்களிலும் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது சிங்கள தேசத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தவே போகின்றது. தமிழீழ முழக்கத்துடன் மீண்டும் சிலிர்த்து எழுகின்றனர் தமிழ் இளையோர்.

 

- அகத்தியன்

 

http://www.sankathi24.com/news/24971/64/.aspx

 

 

Edited by akootha

  • தொடங்கியவர்

மகிந்த குடும்பத்திற்கு ஆபத்து வீட்டிற்கு உள்ளே இருந்து தான் வரும்.

  • தொடங்கியவர்

அமெரிக்கா, குறிப்பாக ஒபாமா ஆட்சி, தனக்கு நாடுகளில் மாற்றம் வேண்டும் என்றால் "உள்ளால்" மாற்றங்களை செய்து வருகின்றது.

 

இறுதியாக, பர்மா / மியான்மார். இதுவும் சீனாவின் காட்டுப்பட்டுக்குள் இருந்த நாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.