Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்களை அழித்தாலும் உணர்வுகளை அழிக்க முடியாது

Featured Replies

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாக காணப்படுகின்ற வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக உரிமையானது இன்றை வரைக்கும் பறிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகிறது.

 

யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்ட நிலையிலும் வட பகுதில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் துயரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை அவை இன்னும் நீண்டு விரிந்து கொண்டுதான் செல்கின்றது.

தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற்று விட்டனர் அவர்களுடைய நிலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியிலுள்ள அரசு சர்வதேச நாடுகளுக்கு கூறி வருகின்றது ஆனால் நிலைமை தலை கீழாகவே காணப்படுகிறது.

இன்று வடக்கில் எந்தவிதமான செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நிம்மதியாக செய்ய முடியாத ஒரு நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.

வட மாகாணத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்ப்பட்ட இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக குடும்பச் சண்டை முதல் ஜனநாயக ரீதியான போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்தாலும் சிங்கள படையினரும் புலனாய்வுத் துறையினரும் தமது தலையீட்டை முன்வைக்கின்றனர்.


யுத்தம் தந்த வலிகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டு வரும் நிலையில் இராணுவத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்திற்கு இழுத்துச் செல்லும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியிலுள்ள மகிந்த அரசும் சரி இனிவருகின்ற அரசும் சரி தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கும் என்பது சந்தேகத்திற்குரிய நிதர்சனம் ஏனெனில் அரசு என்பதைத்தாண்டி சிம்மாசனத்தை பிடிக்கும் அனைத்து கட்சிகளுமே பேரினவாதக் கட்ட்சிகள் என்பது யராலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியாக மக்களின் விருப்பு வெறுப்புகளை அரசும், சர்வதேசமும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அங்கு நடைபெறுகின்ற தேர்தலை வைத்து கணித்துக் கொள்ளலாம்

ஆனால் வடக்கினை பெறுத்தவரை யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது ஆனால் தேர்தல் ஒன்றை நடத்தப் பயப்படுகிறது.

காரணம் வடக்கில் தேர்தல் ஒன்று நடைபெற்றால் நிச்சயமாக அரசாங்கம் தோல்வியினை தழுவும் இதனால் அரசு வடக்கில் சுயாதினமாக இயங்க முடியாது சிங்கள குடியோற்றங்களை தமிழர் பூமி எங்கும் சுதந்திரமாக செய்ய முடியாது

மற்றும் தமிழர்களின் பூர்விக நிலங்களை இராணுவ முகாங்களுக்காக பறிக்க முடியாது இவ்வாறு தான் நினைத்த ஏகாதிபத்திய செயற்ப்பாடுகளை செய்ய முடியாது போய்விடும் என சிங்கள அரசு நினைக்கின்றது
இதற்காகவே அரசு தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அஞ்சுகின்றது.

ஆக மொத்தத்தில் இலங்கை அரசாங்கம் வடக்கில் தாங்களே ஆட்சியினை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என இவ் அரசாங்கம் கூறியுள்ளது.

ஆக மொத்தத்தில் வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கூறி வந்தாலும் உண்மையில் பிரதான வீதிகளுக்கு காப்பெட் போடுவதைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்.

இவ்வாறு வீதிகளை புனரமைப்பு செய்தால் தமிழ் மக்களுடைய வாழ்வு மறுசீரமைக்கப்படும் என இந்த அரசாங்கம் கனவு காண்கிறது இது வெறும் பகல் கனவாகவே அமையும்

வடக்கில் வாழும் தமிழ் மக்கள் உண்மையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை அனுசரித்து அரசாங்கத்துடன் உள்ளார்கள் என்பதை நிறூபிக்க வேண்டும் என்றால் நிச்சயமாக வடக்கில் தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும்.

இது ஒருபுறமிருக்க கடந்த 27ம் 28ம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக சூழலில் நடைபெற்ற செயல்கள் இன்னெரு விடுதலைப் போராட்டத்தை வலிந்து திணிப்பதாக தான் உள்ளது.

பல்கலைக்கழகங்களிலிருந்து தான் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள், புரட்சிகளும் உருவெடுத்துள்ளன அந்த வகையில் யாழ் பல்கலைக்கழகமும் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு என்றுமே ஊன்றுகோலாகாத் தான் திகழ்ந்து வருகின்றது.விடுதலைப் போராட்டங்கள் தாமாக தோன்றுவதில்லை எங்கெல்லாம் அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றதே அங்கெல்லாம் விடுதலைப் போராட்டங்கள் முழுவீச்சுடன் உருவாகும் என்பதுதான் வரலாறு.

அந்த வரலாற்றை படிக்காத மூடர்களே இவ்வாறான காடைத் தனங்களில் ஈடுபடுகின்றார்கள். கடந்த 27ம் திகதி இடம்பெற்ற மாணவ மாணவியர் விடுதிக்குக் அத்துமீறி நுளைந்த சம்பவத்தினை கண்டிக்கும் முகமாக அடுத்த நாள் பல்கலைக்கழக மாணவர்கள் முகத்தில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதற்கு இரும்புக் கம்பிகளும், துப்பாக்கி பிடிகளும் தான் பரிசு என்றால் ஆயுதப் போராட்டத்திற்குத் தான் இவர்கள் வலிந்து இழுக்கின்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைதியான போராட்டத்திற்கு சிங்கள இராணுவமும், பொலீசாரும் இணைந்து நடத்திய தாக்குதலில் மாணவிகள் உட்பட 20ற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் காயமடைந்தமையும் அதன் பின்பு மாணவ தலைவர்கள் மீதான கைதுகளும் தமிழர்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்புக்களை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே உண்மை

இந்த வெறுப்புக்கள் மாணவர் மீதான அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பூராகவும் செறிந்து வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக கடந்த செவ்வாய் கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது இது ஏனைய போராட்டங்களிலிருந்து சற்று வேறுபட்டு ஒரு எழுச்சியுடன் இடம்பெற்றது என பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது .


ஆக மொத்தத்தில் "தமிழரின் உயிரினை அழிக்கலாம் உணர்வுகளை அழிக்க முடியாது" என்ற தெளிவான உண்மையினை சர்வதேசத்திற்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் சொல்லி நிற்கின்றது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2630843111459692

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.