Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிமுக நிர்வாகிகள் 250 பேர் அதிமுகவில்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மதிமுக நிர்வாகிகள் 250 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று அதிமுகவில் இணைந்த நிலையில், சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா இனோவா காரை பரிசாக  வழங்கினார்.
 
மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்,அக்கட்சித்தலைவர்  வைகோவுடன் ஏற்பட்ட மோதலால், கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். இதனையடுத்து  அவர் அக்கட்சியிலிருந்து விலகி, சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில்  சேர்ந்தார்.
 
அவருக்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாஞ்சில் சம்பத் பொதுக்  கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
 
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் மதிமுகவில் உள்ள தன் ஆதரவாளர்கள் 250 பேரை   இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்துக்கு வந்தனர்.
 

 

அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தங்களை  இணைத்துக் கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத்துக்கு இனோவா கார் ஒன்று  பரிசாக கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட்  டங்களில் பேசுவதற்கு வசதியாக அவருக்கு இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த காரின் சாவியை ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்திடம் வழங்கினார்.தனக்கு கார் பரிசு வழங்கியதற்காக ஜெயலலிதாவுக்கு நாஞ்சில் சம்பத் நன்றி  தெரிவித்தார்.
 
அதன்பிறகு அதிமுக வில் இணைந்த 250 மதிமுக நிர்வாகிகளை ஜெயலலிதா வரவேற்று  வாழ்த்து தெரிவித்தார்.

அவர்கள் மத்தியில் பேசிய அவர்," நீங்கள் வந்த இடம் நல்ல இடம்.எத்தகைய  நம்பிக்கையுடன் இன்று கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண்  போகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நம்முடைய லட்சியம், கல்லாமை இல்லாமை இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்க  வேண்டும். மக்களுக்காக இயங்குகிற ஒரு இயக்கம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு  கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடி பெற வேண்டும். இந்த லட்சியத்தை  அடைய நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் மிக  ஒளிமயமான எதிர்காலம் அமைய என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறேன்"என்றார்.

 

அதிமுக.வில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்
 
மதிமுக பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத்துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத் தம்பி.
 
சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத்துறை துணை செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ.பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன்.
 
சிவகங்கை மாவட்ட, சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென்சென்னை மாவட்ட அவை தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 250 நிர்வாகிகள் தங்களை அதிமுக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ம தி மு க இனி அரசியல் கட்சியாக இல்லாமல் ஒரு சமூக இயக்கமாக செயல்படுவதே நல்லது பதவிகளை எதிர் பாத்திருந்த தொண்டர்கள் ஒவொருவராக விலக தொடக்கி விட்டார்கள் இன்னும் பல தலைவர்கள் வெறுப்பில் இருக்கின்றார்கள் அவர்களும் கட்சி தாவ சந்தர்ப்பம் பாத்து இருக்கின்றார்கள் வைகோவை நம்பி வந்தவர்களுக்கு வைக்கோ செய்தது என்ன? எதுவும் இல்லை

பாவம் மதுரைக்கு வந்த சோதனை. இப்ப எல்லாம் நேர்மையானவர்கள் மதிக்கப் படுவதில்லை.

ம தி மு க இனி அரசியல் கட்சியாக இல்லாமல் ஒரு சமூக இயக்கமாக செயல்படுவதே நல்லது பதவிகளை எதிர் பாத்திருந்த தொண்டர்கள் ஒவொருவராக விலக தொடக்கி விட்டார்கள் இன்னும் பல தலைவர்கள் வெறுப்பில் இருக்கின்றார்கள் அவர்களும் கட்சி தாவ சந்தர்ப்பம் பாத்து இருக்கின்றார்கள் வைகோவை நம்பி வந்தவர்களுக்கு வைக்கோ செய்தது என்ன? எதுவும் இல்லை

 

வைகோவுக்கே கிடைத்தது ஒன்றும் இல்லாததாக இருக்கும் போது வைகோ கொடுத்து எதுவாக இருக்க முடியும்?

 

தமிழ் தலைவர்கள் எல்லோரும் துரோகிகளா அல்லது தமிழ் மக்களேதான் துரோகிகளா ?

 

"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்றார் யேசு". தமிழ் மக்கள் தங்களுக்கு தேவையான தலைமைகளை கேட்டு, தட்டி, தேடி  உருவாக்கிக்கொள்கிறார்கள்.

 

இன்னுமொரு உண்மையான கிறிஸ்தவனின் வார்த்தையில்: "தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்". (தமிழர்களை ஒழுங்கான தலைமை ஒன்றால் வழி நடத்திச் என்று முன்னேற்றுவிக்க முடியாது)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.