Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைக்கும் மறுக்கும் கதைகள்

Featured Replies

எங்களுக்கு திருப்ப அந்த நினைவை வர வைக்காதேங்க அண்ண. அதை நினச்சாலே பயமா இருக்கு சில சம்பவங்கள் செய்திகளோடும் வாய்ப்பேச்சுக்களோடும் முடிந்து விடுகின்றன.


அவற்றின் உருவாக்கங்கள் பற்றியோ காரணங்கள் பற்றியோ எந்த தெளிவுபடுத்தல்களும் முன்வைக்கப்படாது போய்விடுகின்றன.

 

சில சம்பவங்களை தூக்கிப்பிடித்து பேசுபவர்கள் அதன் தாக்கங்கள் விளைவுகள் குறித்தும் பின்விளைவுகள் பற்றியும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். இந்த பிரித்தறிதல் இல்லாத தன்மை சிலரது செயற்பாடுகளுக்கு நல்ல வசதியாக இருக்கிறது.


குரைக்கும் நாய் கடிக்காது என்பது போல அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பத்திரிகைகளில் வரும் செய்தி அதன் விளக்கங்கள் அன்றன்றே முடிந்து போய்விடுகின்றன. அதனால் எந்தப் புரளியும் எழுந்துவிடப் போவதில்லை என்பதே திட்டம் தீட்டுபவர்களின் எண்ணம்.

 

வன்னியில் இறுதிப்போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களது சாவு அவலம் நிறைந்தது. பிரிய மறுத்த உயிர்களை வலிந்து கொன்றது போர். சமய நம்பிக்கையாளர் மத்தியில் ஒரு உயிர் தனது வாழ் காலத்தின் அரைவாசியில் அவலமாக இறந்துபோயிற்றால் அதன் ஆவி அவர்கள் சார்ந்தவரை சுற்றித்திரியும் என்று நம்புகிறார்கள். மத வழிபாடுகளுக்கு அப்பால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்ற அம்சங்களையும் சமயவாதிகள் நம்புகின்றனர்.


மூடநம்பிக்கைகளை போராளிகள், குழந்தைகள், கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பாக பில்லி சூனியத்தை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதன் காரணமாகவே இந்த நம்பிக்கைகள் அவர்களிடத்தில் பலிப்பதில்லை.

 

காரணம் போராளிகள் களத்தில் எதிரியை கொல்லும் தறுவாயில் இருப்பவர்கள் அவர்களிடத்தில் இவ்வாறான நம்பிக்கைகள் தோற்றுப்போய் விடுகின்றன. குழந்தைகள் விவரம் அறியாதவர்கள் அவர்களிடத்தில் இவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது. உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிளை அடிப்படையாகக் கொண்டவர்கள்.


இறைவனிடத்தே தாம் செய்யும் பாவங்களை அன்றன்றே மன்னிக்குமாறு  கோருபவர்கள். எனவே அவ்வாறான ஒரு நம்பிக்கை, அவ்வாறானதொரு நெருக்கடி தமக்கு ஏற்படும் என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தவிர்ந்த மற்றவர்களிடத்திலேயே மூட நம்பிக்கைக் கொள்கைகள் பரப்புவதற்கும் அவற்றினூடாகச் சில காரியங்களை நடத்துவதற்கும் ஏதுவாக இருக்கிறது.

 

கடந்த 11ஆம் திகதி இரவு கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் பேய்கள் நடமாடி இருக்கின்றன. இந்தப் பேய்கள் அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்கள் முன்னிலையில் முற்பட்டிருக்கின்றன. இரவு உணவு எடுக்க அருகிலுள்ள முகாமுக்குச் சென்ற பெண்களே பேய்களைக் கண்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் அலறியடித்து மயக்கமுற்றுள்ளனர்.


அன்றிரவே கிளிநொச்சி மருத்துவமனையின் உளநல மருத்துவப் பிரிவில் இருந்து இராணுவத்தினர் உதவி கோரியுள்ளனர். அதாவது, தமது முகாமுக்கு வந்து குறிப்பிட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்குழப்பம் தொடர்பில் பரிகாரம் செய்யுமாறு இராணுவத்தினரால் கோரப்பட்டது. ஆனாலும், வைத்தியசாலைத் தரப்பினர் முகாமுக்குச் செல்ல உடன்படவில்லை.

 

அவர்களை வைத்தியசாலையில் சேர்க்குமாறும் அங்கு வைத்து தாம் சிகிச்சை அளிப்பதாகவும் இராணுவத்தினரைக் கேட்டுள்ளனர். இதற்கு அமைவாகவே பதின்மூன்று தமிழ்ப் பெண்களும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இராணுவத் தமிழ்ப் பெண்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது தொடர்பில் பல்வேறு ஊடகங்களிலும் பல்வேறு விதமான விதங்களில் செய்திகள்

வெளிவந்திருக்கின்றன. இன்றளவும் அவை மாறிமாறிப் பேசப்படுகின்றன.


இந்தச் செய்திகளின் திரிபுக்கு இராணுவத்தினரின் செயற்பாடே காரணமாக இருக்கிறது. குறிப்பாக பெற்றோர் தவிர்ந்த ஏனையவர்களைப் பார்வையிட மறுத்தமை, வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் இராணுவத்தினரைக் கடமையில் ஈடுபடுத்தியமை.

 

சிவில் உடையில் புலனாய்வாளர்களை வைத்தியசாலை வளாகத்துக்குள் நடமாட விட்டமை, பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது சந்தேகத்தை போக்குவதற்கு வைத்தியசாலை வட்டாரங்களும் முன்வரவில்லை.


ஏற்கனவே இராணுவத்தில் இணைத்துக் கொள்ளும்போது இவர்களது உடற்தகுதி வைத்திய பரிசோதனை அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் பதின்மூன்றுபேரும் ஒரே மாதிரியான பிரச்சினைக்கு ஆளாவதற்கு வேறு காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதே கேள்வி.

 

"எங்களுக்கு திருப்ப அந்த நினைவை வரவைக்காதேங்க அண்ண. அதை நினச்சாலே பயமா இருக்கு' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள். அப்படியானால் எதற்காக பயப்பிடுகிறீர்கள், காரணத்தை ஏன் மறைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "எங்களுக்கு ஒண்ணும் நடக்கல, நாங்க இருந்த இடத்திலை முந்தி ஆக்கள் செத்தவையாம் அந்த ஆவியள்தான் எங்களைப் பிடிச்சிருக்கு, எங்களுக்கு பேய் பிடிச்சிருக்கு' என்று விதண்டாவாதம் பேசினார் அந்தப் பெண்.


பேய்களை நீங்கள் கண்டீர்களா? என்றதற்கு "இல்ல அங்க பேய் இருக்கு' என்றனர். இனி என்ன செய்யப் போறிங்க என்று கேட்டதற்கு இரண்டு கருத்துக்கள் வந்தன. ஒன்று "எங்களுக்கு அங்க போகப் பயமாக இருக்கு நாங்க வீட்ட போகப் போறம்'. மற்றையது எங்களுக்கு அங்க ஒரு பிரச்சினையும் இல்ல. நல்ல சாப்பாடு தாறாங்க, பயிற்சி தாறாங்க, கொம்பியூட்டர் பழகிறம். நாங்க விரும்பித் தான் ஆமிக்குப் போன்னாங்க. திருப்பவும் முகாமுக்குத் தான் போக வேணும்.

 

இவர்களது இருநிலை கருத்துக்களுக்கு இடையிலும் யாராவது இருந்திருக்கக் கூடும். அது துலங்கவில்லை என்றாலும் அவர்கள் மனரீதியாக எதற்கோ பயப்படுகிறார்கள். அந்தப் பயத்திலிருந்து விலகியிருக்க வீடு செல்ல விரும்புகிறார்கள் என்பது உளவியல் ரீதியான உண்மை.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6760143417688553

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.