Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்பிரேரணை விடயத்தில் அரசு இறங்கி வரும் நிலை இல்லை; இறுக்கமான போக்கு நீடிக்கும் அறிகுறி

Featured Replies

கடந்த புதன்கிழமை அலரிமாளிகையில் அமைச்சரவை கூட்டம் முறையாக ஆரம்பமாவதற்கு முன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அமைச்சர்கள் ஆராய்ந்தார்கள்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவிருந்தது தொடர்பாக அமைச்சர்கள் தம் கவனத்தை முதலில் செலுத்தினார்கள். குற்றப் பிரேரணையை எதிர்ப்பதற்கு மேற்கொண்டும் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் சட்டத்தரணிகள்  ஆராய்ந்தார்கள்.

அதில் ஒரு தீர்மானம் புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை வரவேற்பதில்லை என்பதாகும். நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் வருமாறு:

* பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தின் விசேட தெரிவுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பாக பகுப்பாய்வு செய்வதற்கு சுயாதீனமானதொரு குழுவை நியமிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதை கருத்தில் எடுத்து குற்றப்பிரேரணையை மீண்டும் பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்படி ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்வது.

* ஜனாதிபதியோ அல்லது குற்றப் பிரேரணையில் கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதனைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது என்று தீர்மானிப்பார்களானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பான நடைமுறை சட்டங்களை உருவாக்கி சட்டமாக்க வேண்டும், அதே சமயம் குற்றப் பிரேரணை தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாயின் இயற்கை சட்டங்களின் விதிகளுக்கமைவாக அது நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* இயற்கை சட்டங்களின்  விதிகளுக்கமைவாக  நியாயமான ஒரு விசாரணையின்றி தற்போது பதவியிலிருக்கும் பிரதம நீதியரசர் நீக்கப்படும் பட்சத்தில், புதிதாக நியமிக்கப்படும் பிரதமநீதியரசரை சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பதில்லை.

அமைச்சரவை கூட்டத்தில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதன் காரணமாக அந்தச் சங்கத்தில் அங்கம்  வகிக்கும் அரசு சார்ந்த சட்டத்தரணிகள் அவருக்கு எதிராக தீர்மானம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவியது.

குற்றப் பிரேரணையை எதிர்ப்பவர்களால் நாடுமுழுவதும் நடத்தப்பட்டுவரும் பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பரப்புரையொன்றை அரச தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா ஆலோசனை சொன்னார்.

இதற்காக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார் அவர். இவர்கள் வெளி மாகாணங்களில் நீதி மன்றங்களுக்கு வெளியில் எதிர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும். இதே போல் மக்களுக்கு விளக்கமளிப்பதற்கான வேறு செயற்பாடுகளிலும் இறங்க வேண்டும் என்றார் அமைச்சர்.

அமைச்சர்களின் இந்த மூலோபாய ஆலோசனைக் கூட்டம் முடியும் தறுவாயில் வருகை தந்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் ஒரு குறுகிய குறிப்புரையில் நிலைமைகளின் முன்னேற்றம் குறித்து அரசு மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு அமைச்சரவைக்கான அறையில் வழமையான கூட்டம் இடம்பெற்றது.

வடக்கு அபிவிருத்தி தொடர்பான அறிக்கை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அங்கு "2009-2012 மோதலில் இருந்து உறுதிப்பாட்டுக்கு'' என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கை ஜனாதிபதியின் செயலணியிடமிருந்து வந்த அறிக்கையாகும் இந்த செயலணிக்கு அமைச்சரே தலைமை வகிக்கின்றார்.

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

குறித்த பகுதியின் நீண்டகால அபிவிருத்திகள் மற்றும் தேவைப்படும் உள்கட்மைப்புப் பணிகள் பற்றியும் இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையை ஆங்கிலத்தில் சமர்ப்பித்த அமைச்சர் சிங்களதமிழ் பிரதிகள் தயாரானதும் விநியோகிக்கப்படும் என்றும் கூறினார்.

இவைகள் இவ்வாறு இருக்க பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை பற்றிய விடயங்களே அரசின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றது.

அரசியல், கொந்தளிப்பு

நாடாளுமன்றத் தெரிவுக்குழு பிரதம நீதியரசரை மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் கண்டிருப்பதானது தொடர்ந்தும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.

கடுமையான விமர்சனங்களும் அதிருப்திகளும் தோன்றியிருந்த பின்னணியில் அரசு தனது நிலைப்பாட்டில் மென்மைப் போக்குக்குத் திரும்புவது போல் ஒரு கட்டத்தில் தோன்றியிருந்தாலும் நிலைமை அதிகார பூர்வமாக விளக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கடும் போக்கு வெளிப்பட்டுள்ளது.

இந்த மென்மை மற்றும் கடும் போக்குக்கிடையில் அரசுக்குள்ளேயே அரசியல் கொந்தளிப்பு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. கடந்த செவ்வாயன்று மேற்கொண்டு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள தாம் ஒரு சுயாதீனக்குழுவை நியமிக்கப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

கொழும்பு 7இல் கணக்காளர் நிறுவனம் ஒன்றின் கட்டடத் திறப்பு விழாவில் பேசிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டார். தமக்கு முன்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  கிளப்பியிருந்த பிரச்சினையொன்றுக்கு பதிலளிக்கும் முகமாகவே ஜனாதிபதி இதைக் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து பல தரப்புகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருந்தது. தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை தென்பட்டது. தாங்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ள விடயத்தை ஆராய வேறு ஒரு குழு எதற்கு என்பது அவர்களுக்கு புரியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பினர் மத்தியில் பெருமெடுப்பில் கவலைகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றமே மிக உயர்ந்த பீடம் என்றிருக்கையில் தெரிவுக்குழுவின் தீர்வை வேறொருகுழு ஆராய்வதென்பது சட்டமியற்றும் சபையின் உயர்ந்த நிலை தொடர்பாக இது பெரும் பிரச்சினையை தோற்றுவிப்பதாக இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

அத்துடன் அரசு அடிக்கடி கூறிவரும் நாடாளுமன்றமே அதி உயர் பீடம் என்ற கொள்கைக்கு இது எதிர்மாறாக இருந்துவிடப்போகின்றது என்பது அவர்களின் கவலை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கடும் போக்கு நிலையில் இருந்து மறுபக்கமாகத் திரும்பி விட்டது போல் இருந்தது.

அரசின் ஆரம்ப நிலைப்பாடு வியாழக்கிழமை பத்திரிகை ஆசிரியர்களுடனான காலை உணவு அருந்தும் வேளை கூட்டத்தில் ஜனாதிபதியால் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. ஜனாதிபதி அங்கு  விரிவா  கூறியதிலிருந்து ஒரு பகுதி வருமாறு:

இப்போது ஏற்பட்டிருப்பது நீதித்துறை தொடர்பான ஒரு பிரச்சினை. இது பகிரங்கமாகக் கொண்டுவரப்பட்டுவிட்டதால் நாம் கவலைப்பட்டாலும் அது பற்றி பேசியாக  வேண்டியிருக்கின்றது. இந்த விடயம் அவசியம் இல்லாமல் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. அறிக்கை வந்ததின் பின்னர் அதில் என்ன குறிப்புகள் காணப்படுகின்றன என்பதை நாம் பார்க்கலாம்.

எதுவானாலும் இன்னுமொரு மாத காலத்துக்கு அது பற்றி நாம் பேசமுடியாது நாடாளுமன்றம் ஒரு மாதத்தின் பின்னர் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்கும். அறிக்கையின் மீது கட்டாயம் நடவடிக்கையை நான் எடுத்தாக வேண்டும் என்றாலும் இது குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு ஒரு சுயாதீனக்குழுவை நான் நியமிக்க விரும்புகிறேன்.

நடவடிக்கையில் இறங்குமுன் அதுபற்றி நான் ஆராய்வேன் எனது மனச்சாட்சிக்கு நான் பதிலளித்தாக வேண்டும். நான் எனது கடமையை சரியாகச் செய்தேன் என்று திருப்தி கொள்ள வேண்டும்.

தெரிவுக்குழுவின் தீர்வு குறித்து ஆராய சுயாதீனக்குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டாலும் கூட அடுத்த மாதம் நடவடிக்கை எடுப்பது என்ற அரசின் தீர்மானத்தில் அது எந்தவிதத்திலும் தலையீடு செய்வதாய் இருக்க மாட்டாது. அதாவது குற்றப் பிரேரணையை நாடமாளுமன்றத்தில் விவாதிப்பதும் பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து நீக்குவதுமாகும் அது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7320143617363477#

 

 

சண்டே ரைம்ஸ் விமரிசனத்திலிருந்து
கோகுலன்

 

 

Edited by akootha

  • தொடங்கியவர்

pol-cartoon16-12-2012.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.