Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொதித்துக் குமுறும் தமிழன்

Featured Replies

உலக வரலாற்றில் இரத்தம் வடிக்கும் மனிதர்களாக ஈழத்தமிழர்கள் !


எத்தனை எத்தனை ஆண்டுகள் ஈழமக்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள் இந்த உலகை வழி நடத்துகின்றோம் என்னும் அனைத்துலக அரசியல் மேதாவிகள் என்ன செய்கிறார்களோ?


ஏன் இன்னும் ஈழத்தமிழ் மக்களின் கண்ணீருடன் பொறுமை, உண்மைக்காக உழைப்பதாக சொல்லும் உலக மேதாவிகள் என்னதான் சொல்ல வருகின்றார்கள்?
 

எம்மை என்ன செய்ய நினைக்கின்றது உலகம், இப்படியே அகதிகளாக எத்தனை காலம் அங்குமிங்கும் மனிதன் ஓடி அலைவது, ஈழத்து பெற்றோர் வெளிநாடுகளை நம்பியா தங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்?
 

வெறும் வெள்ளிக்காசு தரும் சுக வாழ்வை எண்ணி அகதி அந்தஸ்த்து தேடி அலையும் ஓர் இனமாக ஈழத்தமிழினம் பிறரால் பார்க்கப்படுகின்றது அது முற்றிலும் அறிவீனமான ஆழப்பார்வை அற்றோர் அவசரத்தில் அரைகுறை கணிப்புடன் பார்க்கும் மேற்பார்வை.
 

உலகப்பந்தில் எத்தனையோ நாடுகள் அந்நாடுகளில் உள்ள இனமக்கள் எல்லோரும் இன்பமாக சனநாயக உரிமைகளுடன் நல்லபடி வாழும்போது, பெரும் பெருமைக்குரிய தமிழினத்தில் பிறந்து, இருந்த மண்ணை
 

வல்லாதிக்க சக்திகளுக்கு பகல் கொள்ளை கொடுத்து, அடங்கி ஒடுங்கி ஓடி ஓடி சத்தில்லா வாழ்வை வாழ்கின்றோம் ஏனிந்த நிலை நமக்கு?
 

எமது மண்ணில் நாம் சகல உரிமைகளுடனும் சிறப்பாக வாழ, நம்மை அழிக்கும் சக்திகளை எதிர்த்து ஒரு தமிழ்ப்பலம் நம்மை காத்து உரிமை வேண்டி போராடியது அது ஆதிக்க வெறிக் கண்ணுக்கு வன்முறை வழியாக தெரிந்தது.
 

அப்பலத்தை அழித்து இன்று தமிழர்களை அரக்கர்கள் கையில் கொடுத்து ஒதுங்கியுள்ளது மேதாவிகள் கூட்டம்.இன்று அங்கு தமிழருக்கு சனநாயகம் உண்டா ?
 

தமது இனத்தின் விடிவுக்காய் தமது இன்னுயிர்களை கொடுத்த தியாகிகளுக்காக, அநியாயமாக இறந்த உறவுகளுக்கு ஒரு பொது நாளில் ஈழமக்கள் ஒன்று கூடி அமைதியாக மரியாதை செய்யும் முகமாக விளக்கு ஏற்ற உரிமை இல்லை.
 

சிங்கள ஆட்சி நாட்டில், மனித உணர்வுக்கு குறிப்பாக தமிழர்களின் நியாயமான உணர்வுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து எதுவித மரியாதையும் இல்லை !
 

எடுத்ததுக்கெல்லாம் பயங்கரவாதம், தீவிரவாதம் வன்முறை என்று பொய்யாக கதைகளை கட்டி திரித்து சொல்லுதலே சிங்கள ஆட்சியார்கள் வழமை !
 

தமிழர்கள் நிலங்களை பலவந்தமாக பறித்து விடுதிகள் கட்டுவதும் இராணுவ முகாம்கள் நிறுவுவதும் மென்முறையா நன்முறையா ?
 

தங்கள் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தை கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய, நியாயம் கேட்ட பல்கலைக்கூட மாணவர்களை மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கைது செய்து கொடுஞ்சிறையில் அடைத்து வதைப்பது சிங்கள அரசு செய்யும் பயங்கரவாதமில்லையா?

வன்முறையில்லையா? தீவிரவாதமில்லையா? அநியாயமில்லையா ?
 

ஈழத்தமிழன் எதிரியை கொன்றதும் ஆ ஊ என்று கண்டித்த அண்டை அயல் தூர நாடுகள் இன்று சிங்களம் செய்யும் மனித பண்பில்லா கொடுஞ் செயல்களை தட்டி கேட்காது இருப்பது ஏன் ?
 

அப்படிஎன்றால் அரச வன்முறையை ,பயங்கர செயல்களை , உலக நாடுகளே ஆதரிக்கின்றீர்களா?
அப்படிஎன்றால் ஆயுத பலம் இல்லாத இனமக்கள் வல்லரசுகளுக்கு அதுகளின் வன்முறைக்கு ஆளாக வேண்டியதுதானா அழியவேண்டியதுதானா? இது தான் புதிய வளர்ச்சிகண்டுவிட்டதாக கூறும் ஆதிக்க அரசுகளின் தருமமா ?

 

ஆக ஆய்த பலம் என்ற ஒன்றே நம்மை பாதுகாக்கும் என்று சொல்லாமல் சொல்லுகின்றீர்கள் அதை நாம் எடுத்தால் வன்முறை என்கின்றீர்களே பின்னர் யார் எடுத்து நமக்காக நம்மை பாதுகாக்க அடிக்கவேண்டும் எதிரிக்கு, அப்படியே பெரிய சக்தியை பாவிக்க வேண்டுமெனில் நாம் பணம் கொடுத்து ஆயுத சக்திகளை வாங்க வேண்டும் என்கின்றீர்களா ?
 

அப்படி நமக்காக அடிக்கும் சக்தி அரசாக இருக்க வேண்டும் அதுவும் உங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அரசாக இருக்க வேண்டும் இப்படியே சென்றால் உண்மையான சனநாயகம் எங்கே?
 

எல்லாம் பித்தலாட்டமா ,தலையை கிளறி சொறிந்து மனம் வெந்து சாகவேண்டியவர்களா ஈழத்தமிழர்கள்
 

பதுங்கிப் பதுங்கி ஒதுங்கி ஒதுங்கி குழம்பும் சோறு சாப்பிட நான் உயிர்வாழ்ந்தால் போதும் சிங்களவன் அடித்தால் என்ன வெட்டினால் என்ன அது யாருக்கோ?
 

மாத்தையா மாத்தையா என்று கெஞ்சி கெஞ்சி பல்லைகாட்டி தமது காரியங்களை ஆற்றிட நினைத்து வாழும் மக்களாலேயே ஒற்றுமை குன்றி அழிவு நேர்ந்தது என்று உண்மையுணர்ந்தோர்
வேதனை வடிப்பது உண்மையில்லாமல் இல்லை.

 

இல்லாவிட்டால் இத்தனை அக்கிரமங்களையும் நம் இனத்துக்கு இழைத்தவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட நம் பிரதேசங்களுக்கு கைகட்டி வாய்பொத்தி அடிமைகளாக சென்று வரமுடியுமா?
 

இதில்வேறு பெரிய ஆராய்ச்சி பண்ணி வந்தவர்களாக அங்கே ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொற்பொழிவுகள் வேறு அங்கு நம் ஏழைமக்கள் சிங்களப் படைகளால் பெரும் அக்கிரமங்களுக்குள் நாளும் வாழும் நிலைமையை செய்தித்தாள்களை படிப்பவர்கள் நன்கு புரிந்துகொள்ளுவார்கள்.
 

இல்லாது போனால் இன்றும் ஏன் அகதியாக வெளியேறவேண்டும் நம் மக்கள், அமைதியும் , சனநாயகமும் மக்களுக்கு இருந்தால் இருக்கும் இடத்தில் தொழில் பார்த்து மரியாதையாக வாழக்கூடியவர்கள் தமிழர்கள்.
 

நாளாந்தம் பிழைப்புக்கு பெரும் பாடுபட்டு வாழ வேண்டிய நிலை, தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதிலும் பெரும் இனப்பாகுபாடு, தமிழர்கள் பிரதேசங்களில் தமிழருக்கு இடமில்லை.
 

அங்கும் சிங்கள தொழிலாளர்களுக்கே முன்னுரிமை, யாரும் ஒன்றும் கேட்க்க முடியாது கேட்டால் பயங்கரவாதி , தீவிரவாதி ,வன்முறையாளன் பட்டங்கள் தாராளமாக கிடைக்கும் பிறகு அடி, உதை, வதை தலையும் போகலாம்.
 

இன்று புதிது புதிதாக அம்பலத்துக்கு வரும் புதைகுழி எலும்புக்கூடுகளை பார்த்தால் புரியாதா சிங்களம் தமிழர்களுக்கு செய்த கோர செயல்கள் என்னவென்று, இது தொடர்கதையாக வேண்டுமா ?
ஓடி ஓடி உழைத்த சக்திகள் இன்று மௌனம் கொண்டிருப்பது ஏன் ?

 

செய்திகள் வாயிலாக
ம.இரமேசு

 

http://www.alaikal.com/news/?p=119305

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.