Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைகள் எப்படி குற்றமாகும்?

Featured Replies

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியதை எப்படி குற்றமாக எடுத்துக்கொள்ள முடியும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்செயல் எதிலும் ஈடுபடாது அமைதியாக இடம்பெற்ற நினைவுகூரல் நிச்சயமாக பயங்கரவாதமாகாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர் நால்வரையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு இலங்கை அரசை அது கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் கோரியுள்ளது. ஆனால் சர்வதேச மனித உரிமைக் காப்பகம் இவ்வாறு சிறிலங்காவுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது குறித்து கோத்தபாய சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவரைச் சந்திக்கச்சென்ற யாழ். பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிடம் நான்கு மாணவர்களையும் இப்போதைக்கு விடுதலை செய்ய முடியாதென்றும், அவர்கள் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் அவர்களை விடுதலை செய்வதில்லையென்ற முடிவோடு மகிந்த அரசு செயற்படுகின்றதென்பது தற்போது தெளிவாகியுள்ளது. ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பானவகையில் அரசு செயற்படுகின்றதென்பதை உலக நாடுகளின் கவனத்திற்கு நாம் இங்கு கொண்டு வருகின்றோம். யாழ் மாணவர்களை விடுதலை செய்யக்கோரும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஓர் அங்கமாக பிரித்தானிய பிரதமரின் லண்டன் வதிவிடத்தின் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெரும்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.


இதேவேளையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் மாணவர் சங்கத் தலைவர்கள் என்பதால், அவர்களை விடுதலை செய்யும்வரை ஏனைய மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய இராணுவத் தளபதி பிக்ரம் சிங் எவ்வித முக்கிய காரணமும் அறிவிக்கப்படாமல் சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அகதிகள் முகாமிலிருந்த நான்கு தமிழ் வாலிபர்கள் புலிகள் என முத்திரை குத்தப்பட்டு தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு உண்டா என்பது ஆய்வாளர்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

முள்ளிவாய்க்கால் வரையிலான போரில் இந்தியப் படையினருக்கு தலைமை தாங்கியவர் பிக்ரம் சிங். அப்போது அவர் தொண்டர்நிலை அதிகாரியாக இருந்தார் என்பதும் அச்சமயம் வெளியான தகவல். இப்போதும் அங்கு சென்றவர் சிறிலங்காவுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு நிச்சயம் வழங்கப்படும் என மகிந்தவிடம் உறுதியளித்துள்ளார். ஆனால் இராணுவத் தளபதிக்கே பாதுகாப்பு வழங்குமுகமாகவே நான்கு அப்பாவிகள் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது புரியாத புதிராகவே காணப்படுகின்றது. போரில் குடும்பத்தினரை இழந்து அகதிகளாகச் சென்ற தமிழர் மீது ஏன் போலிக்குற்றச்சாட்டு சுமத்தப்படவேண்டும்? சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசு தாயகத் தமிழரை பழிவாங்குவதை இன்னமும் நிறுத்தவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.


ஆசிரியர் தலையங்கம்: கனடா உலகத்தமிழர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.