Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

,டெல்லியில் கட்டுப்படுத்த முடியாத போராட்டம். உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே பதவி நீக்கமா?

Featured Replies

டெல்லியில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுசில்குமார் ஷிண்டே நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

போராட்டம்

 

டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ–மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது.

 

 

 

சுசில்குமார் ஷிண்டே

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே, மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அரிதிலும் அரிதான பாலியல் பலாத்கார வழக்குகளில் மிகவும் கடுமையான தண்டனை வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

 

ஆனால் அவரது பேட்டி போராட்டத்தை தணிப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் வகையில் அமைந்து விட்டதாகவும், அவர் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால்தான் போராட்டக்காரர்களை நேற்று முன்தினமும், நேற்றும் சோனியா காந்தி சந்தித்து பேசி சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

 

நீக்கப்படுவாரா?

 

சோனியா காந்தி நேற்று போராட்டக்காரர்களுடன் பேசிய போது, உள்துறை ராஜாங்க மந்திரி ஆர்.பி.என்.சிங் அவருடன் இருந்தார். சுசில்குமார் ஷிண்டே மீதுள்ள அதிருப்தியால் தான் அந்த சந்திப்பின் போது அவரை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

எனவே இந்த பிரச்சினையை கையாண்ட விதத்தில் சுசில்குமார் ஷிண்டே மீது அதிருப்தி ஏற்பட்டு இருப்பதால், அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

டெல்லியில் கட்டுப்படுத்த முடியாத மாணவர்களின் போராட்டப் படங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதில் இருக்கிறார்கள்.. இப்ப யாருக்கு எதிரான போராட்டம்? :unsure:

இதில என்ன சட்ட சிக்கல் கைது செய்யப்பட்டவர்கள் தான் உணமையான காம மிருகங்கள் என்றால்

உடனையும் தூக்கில போடுவதை விட்டுட்டு என்ன பேச்சு வேணும் இப்ப. உடனடி முடிவுதான் இப்படியான கொடுமைகளுக்கு

முற்றுப்புள்ளி

 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதில் இருக்கிறார்கள்.. இப்ப யாருக்கு எதிரான போராட்டம்? :unsure:

 

டெல்கியில் இத்தகைய குற்றங்கள் திரும்ப திரும்ப நடந்ததாக கூறுகிறார்கள். வி.பி.சிங்கின் பேச்சில் தண்டணையிலும் பார்க்க சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படத்தக்க புதிய அணுகுமுறைகளைத்தான் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதுதான் மாணவர்களின் நோக்கமாகவும் கொள்ளலாம். மற்றயது, காங்கிரசின் மீது இருக்கும் வெறுப்பை காட்ட அவர்கள் ஒன்று கூட கிடைத்த சந்தர்ப்பம். காங்கிரசை எதிர்ப்பதுதான் இப்போது அவர்களின் பிரதானா நோக்கம். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலில் மிருகங்கள் நடமாடும் நாட்டில் அர்த்த ராத்திரியில் நடமாடுவெதே  கொஞ்சம் கவனம் வேண்டும் ..  இதெல்லாம் அவுங்க அப்பா அம்மா சொல்லி கொடுத்திருக்கவேணும் .. சமூக சூழ் நிலை தெரியாத அந்த அப்பாவியை நினைத்து வருந்துறன் நெஸ்ட்டு: பாய் பிரண்டு அதும் அர்த்த ராத்திரியல்.. அவுங்க ஜனரேசனுக்கு ஒக்கே..  அதே மாறி வில்லனும் வருவான்.. அதுவும் நடந்திடுத்து...  அவன் ஜீன் கிந்தி அவனுக்கு ரத்தம் துடிக்குது.. அவன் முழக்கம் பண்றான் போராட்டம் பண்றான்.. இங்க தான் உங்களுக்கு ஒன்றுமே இல்லை..  பெண்ணியம் குண்னியம் என்று இண்டர் நேசனல் லெவல் அளவுக்கு கட்டுரை எழுதும் பெருமாக்களுக்கு இது ஏதும் கண்ணில் பட வில்லையோ..

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113523

 வெட்டி வாய் சொம்பு வீசி நீங்க எழுதற அளவுக்கு அவுங்களும் எழுத வேண்டும அல்லப்பா..?  

டிஸ்கி:

வாழ்கையில் எந்த ரிலேசனும் அல்லது நாம் உதிரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நமக்கு பயன் உள்ளாதாக இருக்கோணூம்.. ரோட்டில ரீ வாங்கி தாரன் என்றால்  எவனும் கேட்பான் உன் வார்த்தையை அந்த நிமிடம் வரை .. ஆனால் செயலில்..? எதுக்கு வெட்டியாய் வந்து இங்கிட்டு எழுதிட்டு திரீயிகள்  எனக்கு தெரியல..?

 

வீட்டில் புரோட்டா சால்னா சாட்டு தூங்குங்கப்பா.. அல்லது பிள்ளை குட்டியளை படிக்க வையுங்கப்பா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.