Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 இலும் தீர்வு இல்லை; கூறுகிறது ஐ.தே.க.

Featured Replies

"தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்காணும் செயற்பாடுகள் குறித்து அரசு உரியவகையில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த விடயத்தில்   அசமந்தப்போக்கிலேயே செயற்படுகின்றது. அத்துடன், இன ஒடுக்கல் இயந்திரத்தையும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகத் தற்போது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசின் இவ்வாறான செயற்பாடுகள், தமிழர் பிரச்சினைகளுக்கு 2013ஆம் ஆண்டிலும் தீர்வு கிடைக்காது என்றும், அது சங்கிலித் தொடராகவே செல்லும்  தொடரும் என்பதையும் உணர்த்துகின்றன''

 

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளரும், ஊவா மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்தார்.

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது:

 

2012ஆம் ஆண்டில் இலங்கை அரசு பலவிதமான பிரச்சினைகளைத் தோற்றுவித்தது.  அவற்றுக்கு இன்னும் உரிய முறையில் தீர்வுகள் காணப்படவில்லை. மாறாக இன ஒடுக்கல் செயற்பாடுகளையும், அராஜகங்களையுமே அது கட்டவிழ்த்துவிட்டு நாட்டை நிர்வகிக்கின்றது.

 

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலைசெய்யுமாறு நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்தியிருந்தாலும் அது குறித்து அரசு உரியவகையில் இன்னும் கவனம் செலுத்தவில்லை.

 

ஜனாதிபதியோ அல்லது  சம்பந்தப்பட்ட தரப்பினரோ எவ்வித கருத்துகளையும் வெளியிடாத நிலையில், வடக்கிலுள்ள இராணுவத் தளபதியொருவர் மாணவர்களை விடுதலைசெய்ய முடியாது என்ற தொனியில் கருத்து வெளியிடுகின்றார்.

 

நாடு இராணுவமயமாக்கலை நோக்கி நகர்கின்றது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் செயற்பாடுகள் குறித்தும் அரசு அக்கறை செலுத்துவதில்லை. அசமந்தப்போக்கிலேயே செயற்படுகின்றது.

 

அத்துடன், இன ஒடுக்கல் இயத்திரத்தையும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகத் தற்போது பயன்படுத்தப்படுகின்றது. அரசின் இவ்வாறான செயற்பாடுகள், தமிழர் பிரச்சினைகளுக்கு 2013ஆம் ஆண்டிலும் தீர்வுகிடைக்காது என்றும், அது சங்கிலித் தொடராகவே இருக்கும் என்பதையும் உணர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன.

 

தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனப் பாகுபாடு உள்ளிட்ட ஒடுக்குமுறைச் செயற்பாடுகள் இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தம்புள்ளையில் பிள்ளையார் சுழி போடப்பட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த அடக்குமுறைச் செயற்பாடுகள் கொடிபோல் படர்ந்தவண்ணமுள்ளன.

 

தற்போது எம்பிலிப்பிட்டிய வரையில் அது வியாபித்துள்ளது. எம்பிலிப்பிட்டியவில் அரங்கேறிய இன ஒடுக்கல் செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்  என்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=735901726426413997

Edited by akootha

  • தொடங்கியவர்

பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கம் தமிழ் கூட்டமைப்புக்கு இல்லை!

 

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் ஆளும் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் ஒவ்வொரு காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கும்.

 

அவர்களுக்கு உண்மையில் இந்தப் பிரச்சினையை தீர்க்கும் நோக்கம் இல்லை என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இனப்பிரச்சினை விவகாரத்தை தீர்க்கப்படாத பிரச்சினையாக பேணுவதே கூட்டமைப்பின் நோக்கமாகவுள்ளது. இந்தவிடயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வதத்திலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தேசியப்பிரச்சினையை ஆராயும் நோக்கில் ஆளம் கட்சியினரால் பிரேரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் விதத்திலேயே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2256

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.