Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதம் தொலைந்த தருணங்கள்

Featured Replies

மனிதம் தொலைந்த தருணங்கள்

Pathivu Toolbar ©2005thamizmanam.com

ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன்.

வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சிறுவனும் ஒன்பது வயதுச் சிறுமியும் அப்படி என்ன செய்துவிட்டார்கள்? உருவிக் கிடந்த குடலும், உதிரம் சிந்திக் கிடந்த உடலும், பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதிலும் அந்தச் சிறுமி…

நேரடிப் போரில் கூடக் கடைப்பிடிக்கக் கூடிய தருமங்களும், நெறிமுறைகளும் இருக்க, ஒரு பாவமும் அறியாத சிறியவர்களைத் துன்புறுத்திக் கொல்ல மனிதராய் இருப்பவர்க்கு எப்படி மனம் வந்திருக்கும்? போர்க்களத்தில் அல்லாமல் வீடு தேடிப் புகுந்து வன்புணர்ந்து கொள்ளப்பட்ட சகோதரிக்கும், துன்புறுத்தித் தூக்கிடப்பட்ட சகோதரனுக்கும் சுமார் எம் வயது தான் இருக்கும். ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு கொடுமையான முடிவு?

இலங்கை அரசும் சிங்களவரும் இவ்வளவு மூர்க்கமானவரா? இல்லை என்று நிரூபிக்கவேண்டுமாயின் இந்தக் கொடும் செயலைச் செய்தவர்களைக் கண்டுகொண்டு தக்க தண்டனையைத் தரவேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. அப்படி இல்லாமல் மழுப்பப்படுமானால், இதை இலங்கை அரசின் அரசுசார் தீவிரவாதம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

ஒரு அரசு இப்படி தனது நாட்டினரையே (அதில் ஒரு இனத்தைக் குறிவைத்து) கொடூரமாக அழிக்குமானால், உலகம் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதற்குக் காரணம் அது நிறுவனப்படுத்தப் பட்ட அரசு என்பதும் ஒரு பொய்ச்சனநாயகம் அங்கு நிலவுவதுமா? குறைந்த பட்சம் அருகில் இருக்கும் பெரிய நாடு என்னும் நிலையிலும், தன் நாட்டின் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் என்பதாலுமாவது இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும். தமிழனாய் இருந்தாலும் சரி, சிங்களனாய் இருந்தாலும் சரி, நேரடிச் சம்பந்தம் இல்லாத சிறுவர் சிறுமியர் மீது ஏவப்படும் வன்முறை நீங்க வேண்டும்.

தூக்கிலே தொங்கிக் கொண்டிருக்கிற அந்தப் பிஞ்சுகளைப் பாருங்கள். தனி மனிதர்களும், இந்தச் சமயத்திலும் அந்தக் கொடூரத்தைக் கண்ணுற்றபின்னும் சிறிதும் அதிர்ச்சியோ அனுதாபமோ இன்றி ‘அவர்கள் அப்படி’, ‘இவர்கள் இப்படி’ அதனால் தான் எந்தச் சம்பந்தமும் இன்றி விலகி இருக்கிறோம்’ என்றெல்லாம் கருத்துச் சொல்வதும் மனிதாபிமானமற்ற செயல் தான். சர்வதேச மிடையங்களும் அரசுகளும் இந்த நூற்றாண்டிலும் நடக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டும் காணாதிருக்குமானால் அவர்களுக்கு வேறு எந்தப் புனிதத்தளத்திலும் நின்று பரப்புரையாற்றவும் தார்மீக உரிமை கிடையாது.

இனியும் அதிக இரத்தம் சிந்தாமல், வன்முறைகளும், துப்பாக்கிக் குண்டுகளும் இல்லாமல், நிம்மதியான வாழ்க்கைமுறைக்கு விரைவில் ஈழம் திரும்ப வேண்டும்.

Posted by செல்வராஜ் in பொது

http://selvaraj.weblogs.us/archives/204

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.