Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புடன் வைத்தியர் சிவதாஸ் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் வைத்தியர் சிவதாஸ் 

நான் கூற நினைத்ததை சொலமன் சொல்லி இருக்கிறார்.  

உண்மையில் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை அங்கீகரித்தால் விக்கிலீக்ஸ் மீது அமரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு நியாயமானது.  இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானது.  காரணம் விடயம் சரியாக இருந்தாலும் ஊடகங்களின் கெட்டித்தனங்களால் வெளிவருவதும்போது அவை அனுமதியில்லாமல் பிரசுரித்து விட்டார்கள். திருடிவிட்டார்கள் எனக் குற்றம் சுமத்துவது.

இங்கே நீங்கள் கட்டுரை எழுதியது உண்மை. அதனை பிரசுரிக்க அனுப்ப இருந்தது உண்மை. வீரகேசரிக்கு அனுப்ப இருந்த கட்டுரை குளோபலில் பிரசுரமானது தான் உங்கள் பிரச்சனையா?  

இல்லை பகிரங்க கேள்விகளை கேட்காமல் கட்டுரையை தனியே பிரசுரித்திருந்தால் என்னை நோக்கி இந்தக் கண்டனத்தை எழுப்பி இருப்பபீர்களா? 

காரணம் முன்னர் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள்  குறித்து ஊடகங்களுக்கு நீங்கள் வழங்கிய செவ்வியை நீங்கள் எமக்கு அனுப்பாத போதும் நான் குளோபல் தமிழ்ச் செய்திகளில் பிரசுரித்திருந்தேனே  அப்போது ஏன் குளோபலில் பிரசுரித்தீர்கள் என நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ உங்களை ஆதரிப்பவர்களோ கண்டிக்கவில்லையே? 

பகிரங்க கேள்விகளை இணைத்திருக்கா விட்டால் இப்போதும் கண்டித்திருக்க மாட்டீர்கள்.

அடுத்து நான் ஏற்கனவே கட்டுரையின் மேல் குறிப்பிட்டு இருக்கிறேன். இது மின் அஞ்சலில் எனக்கு அனுப்பப்பட்ட கட்டுரை என. நீங்கள் அனுப்பியதாக எங்கும் குறிப்பிடவில்லை. ஏற்கனவே எமக்கு செய்திகள் கட்டுரைகள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பாமல் போவேட்(FWD) பண்ணுவது வழக்கம். இன்று கூட உங்கள் கட்டுரை குளோபல் கிராபிக்ஸ் என்ற ஒரு முகவரியின் ஊடாக வந்து பின் நீங்கள் எனக்கு அனுப்பியுள்ளீர்கள். அவ்வாறு வருகின்ற மூலம் எமக்கு நம்பிக்கை தரும் மூலமாகவும் விடயம் உண்மையாகவும் இருந்தால் அவற்றை பிரசுரிக்கிறோம். 

மூலத்தை குறிப்பிட்டு அனுப்பினால் உதாரணமாக வீரகேசரி என வந்தால் அதனை அடிக்குறிப்பிட்டு பிரசுரிப்போம்.

உண்மையில் இந்தக் கட்டுரைத் தலைப்பை கூகுள் சேச்சில் போட்டு தேடினேன் இணையங்களில் பிரசுரமாகத கட்டுரை என ஓரளவு உறுதிப்படுத்திய பின்பு அதனை பிரசுரித்தேன். ஆனால் அதில் ஒரு எழுத்தையாகினும் மாற்றி இருக்கிறேனா என்பதுதான் முக்கியம். அப்படியே பிரசுரித்திருக்கிறேன். கட்டுரையில் திருத்தம் செய்ததாக மாற்றியதாக நீங்கள் குறிப்பிடவில்லையே? 

பிரச்சனை உங்களிடம் கேட்கவில்லை என்பதே? 

உண்மையில் நீங்கள் பிரசுரத்திற்கென வீரகேசரிக்கு அனுப்பியபின் நன்றி வீரகேசரி என்று போட்டு பிரசுரித்திருந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? 

பிரசுரிப்பதற்கு என ஒரு ஆக்கத்தை தயார் செய்து விட்டால் அது மக்களை சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால் அது வாசகர்களுக்கு சொந்தமானது. 

எமது ஊடகம் இன்று மக்களின் பங்களிப்புடனான ஊடகமாக மாறிவிட்டது. அதன் வலைப்பின்னல் பலமானது. அந்த வலைப்பின்னல் பல விடயங்களை எம்மிடம் சேர்கின்றன. அவை பிரசுரிக்க தகுதியானவை என்றால் பிரசுரிக்கிறோம்.

இவ்வளவுக்கு பின்பும் இந்தக் கட்டுரை உங்களின் அனுமதியின்றி வெளியானது தவறு என்றால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்பதற்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை. காரணம் நான் நடந்து வந்த பாதையை வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

ஒருகாலத்தில் தமிழ்த் தேசியத்தை புலிகள் முன்னிலைப்படுத்தியதனால் புலிகளை விமர்சித்தால் அது தமிழ்த்தேசியத்தை விமர்சிப்பதாகவும் துரோகத்தனம் எனவும் துரோகப்பட்டம் சூட்டப்பட்டது. 

அதுபோல் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களின் பிரச்சனையின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் தொடர்பில் பகிரங்கக் கேள்வி கேட்டால் அது நம்குலப் பெண்களைத் துகிலுரிவது என்கிறார்கள் சிலர், தமிழ்பெண்களை மானபங்கப்படுத்துகிறார்கள் என நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் சிலர். 

இவர்கள் எல்லோரும் - எத்தனை ஆயிரம் பெண்கள் துடிதுடிக்க பதைபதைக்க மானபங்கப்படுத்தப்பட்டபோது மௌனித்திருந்தார்கள். இப்போ கூட உங்களை வைத்து அரசியல் செய்யும் இவர்களால், புலிப் பூச்சாண்டி காட்டிய இவர்களால், புலிபோய் 3 வருடங்களின் பின்னும் இபோதும் புலி பற்றிப் பேசியே தமது அரசியல் செய்யும் இவர்களால் அரச படையினரும் அரசாங்கமும் செய்யும் அக்கிரமங்களை ஒரு சொல்லில் ஆவது மென்மையாகக் கண்டிக்கத் துணிவிருக்கிறதா?

இங்கு குளோபல் தமிழ்ச் செய்திகளின் அனைத்து விடயங்களையும் பின்னோக்கிச் சென்று பாருங்கள். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் குறித்தோ அல்லது அது தமிழ்ப் பெண்களா? சிங்களப் பெண்களா? இஸ்லாமியப் பெண்களா என்பதற்கு அப்பால் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பெண்களின் பிரச்சனைகள் தொடர்பாக செய்திகள் கட்டுரைகளைப் பிரசுரிக்கும் போது நாம் எவ்வளவு அவதானமாக இருந்திருக்கிறோம் என்பதனை? இங்கு குளோபல் பகிரங்க கேள்விகளாக முன்வைத்தவை இராணுவத்தில் இணைக்கப்பட்ட  இந்தப் பெண்களின் பின்னால் தொழிற்படும் அரசியல் என்ன என்பதனை கேளிவிக்கு உள்ளாக்குவதே தவிர அவர்களை துகிலுரிவது அல்ல. இந்தப் பெண்கள் எந்தவிதமான அவப்பெயருக்கும் பலியாகக் கூடாது என்பதுவே எமது முழுமனதான பிரார்த்தனை. அதற்காக இந்த அப்பாவிப் பெண்களின் பின்னால் தொழிற்படும் அரசியலை கேள்விக்கு உள்ளாக்குவதனை  தவிர்க்க வேண்டும் என ஊடகங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது சாத்தியமற்றது.

இதேவேளை பாரிஸில் இருந்து எழுதியவர் யார் என சிலர் கேட்கிறார்கள்  அவ்வாறு கேட்ட ஒருவர் தனது தொலைபேசி இலக்கத்தை மறைத்து தொலைபேசியில் அழைத்து புனைபெயரைக் கூறி என்னிடம் கேட்கிறார். ஆனால் எனது தொலைபேசி, பெயர், மின் அஞ்சல் முகவரிகள் வெளிப்படையானவை. தொலைபெசி இலக்கத்தை மறைத்து உங்களுக்காக நியாயத்தை கேட்க முனையும் ஒருவருக்கு தனது பாதுகாப்பு எப்படி முக்கியமோ? கட்டுரையை எனக்கு அனுப்பியவர் எனக்கு தமது அபிப்பிராயங்களை அனுப்புபவர்களது பாதுகாப்பும் அவ்வாறே முக்கியமானது. இங்கு கேளிவிகள் கேட்பவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல கேள்விகள் சரியா? அந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன என்பதுதான் முக்கயம்.

பொதுத் தளம், சமூக சேவை, ஊடகம் என வந்தால் விமர்சனங்களை - கேள்விகளை - விவாதங்களை சகிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் மற்றும் எவரும் கேள்வி கேட்கக் கூடாது அது மனசை காயப்படுத்தி விட்டது என்றால் இதைத் தானே புலிகளும் சொன்னார்கள். இதைத்தானே மகிந்தவும் அவர் சகோதரர் கோத்தாபயவும் சொல்கிறார்கள். 'எனக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஊடகங்கள் சேறடிக்கின்றன சேறு பூசுகின்றன" என அண்மையில் கோத்தாபய சொன்னார்.

இறுதியாக இந்தப் பாரிஸ் கூட்டம் தொடர்பில் நீங்களே உங்கள் வாக்குமூலத்தை முன்வைதிருக்கிறீர்கள். அதற்கு முகநூலில் எனக்குத் தெரயாத விடயங்களுடன் சூடுபறக்கும் விவாதம் போகிறது. அதுபற்றி நான் மேலும் எதனையும் கூறவிரும்பவில்லை. பாரிஸில் இருந்து மேலதிக தகவல்களை உரியவர் எழுதினால் பிரசுரிக்கிறேன்.

 

உண்மையுடன்

குருபரன்

 

தொடர்புபட்ட செய்தி:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.