Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் போர்க்குற்றம் - இந்தியா நழுவிச் செல்கி்ன்றதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-M.mohan.jpg

சிறிலங்காவில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் இறுதி மாதங்களில் போரில் சிக்குண்ட தமிழ் மக்களை பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் சபை போதியளவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு கடந்த மாதம் ஐ.நா இது தொடர்பான உள்ளக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

2008ன் பிற்பகுதியில் தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த போது சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்த ஐ.நா பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் அங்கு தொடர்ந்தும் பணியில் ஈடுபடுமாறு தமிழ்ப் பொதுமக்கள் ஐ.நா அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்த போதும், தனது பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியது. 

இதன்பின்னர் தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிறிலங்காவின் வடக்கில் பணியாற்றிய ஐ.நா அமைப்புக்களிள் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற போதும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், 'இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்' எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. 

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிவித்தது. தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை உள்ளடங்கலாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை சாட்சியப்படுத்தி 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற கானொலி ஒன்று வெளியிடப்பட்டது. இது ஐ.நாவால் வெளியிடப்பட்ட தமிழ் மக்களின் இழப்பு விபரத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. 

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட யுத்த கால குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறியமை மற்றும் இது தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்காமை தொடர்பில் அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கம் மீது கடும் அழுத்தங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தது. சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீமூன் தனது விமர்சனங்களை முன்வைத்திருந்திருந்தார். 

இதேபோன்று சிறிலங்கா அரசாங்கம் தன் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காவிட்டால் அடுத்த ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் அறிவித்திருந்தார். கனேடியப் பிரதமர் சிறிலங்காவை புறக்கணிப்பது தொடர்பில் எடுத்த முடிவை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமறூனும் பின்பற்ற வேண்டும் என பிரித்தானியாவில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

இந்த விடயத்தில் சிறிலங்காவின் அயல்நாடும் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் இந்தியா சிறிலங்காவைக் காப்பாற்றிக் கொள்வதில் தனது ஆதரவை வழங்கவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தகால மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு இந்தியா தனது ஆதரவை வழங்கியுள்ளது. 

சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளில் வாழும் தமிழ் சமூகங்களின் மத்தியில் இன மற்றும் வரலாற்று ரீதியான தொடர்பு காணப்படும் அதேவேளையில், தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கு தனது அயல்நாடான சிறிலங்காவின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் இவ்விரு நாடுகளின் தமிழ் சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகள் பெரும் முக்கிய காரணியாக காணப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களின் தரகராக 1987ல் இந்தியா செயற்பட்டது. 

இக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சிறிலங்கா உடன்படிக்கையின் விளைவாக இந்திய அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். 1991ல் தமிழ்ப் புலிகள் முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்திய சிறிலங்கா உடன்படிக்கை முறிவடைந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் தொடர்பில் இந்தியா தனது கவனத்தை விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

எதுஎவ்வாறிருப்பினும், 2006ல் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்க ஆரம்பித்ததாகவும் ஐந்து Mi-17 உலங்குவானூர்திகள் உள்ளடங்கலாக பல்வேறு இராணுவ உதவிகளை இந்தியா வழங்கியதாகவும் விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகளை அழிப்பதில் இந்த உலங்குவானூர்திகள் முக்கிய பங்காற்றியிருந்ததாகவும் 'சிறிலங்கா – யுத்தத்திலிருந்து சமாதானம் வரை' என்ற நூலின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான நிற்றின் கொக்கேல் குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவுடன் இந்தியா நல்லுறவைப் பேணவேண்டிய தேவை காணப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உண்டு. அண்மைய ஆண்டுகளில், அம்பாந்தோட்டை புதிய துறைமுக கட்டுமானத் திட்டம் உள்ளடங்கலாக சீனாவானது சிறிலங்காத் தீவில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. 

சிறிலங்காவானது தனது உள்நாட்டு விவகாரங்களில் அனைத்துலக சமூகம் தலையீடு செய்யக் கூடாது என்ற கோரிக்கை விடுத்தபோது அதனை சீனா பலமாக ஆதரித்திருந்தது. சீனாவானது சிறிலங்காவின் இராணுவப் படைகளை நவீனமயப்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதில் சிறந்த கருவியாக உள்ளதாக நம்பப்படுகிறது. 

இந்திய மத்திய அரசாங்கம், 'தமிழ் மக்களின் உரிமைகளை' சிறிலங்கா அரசாங்கம் மதிக்கவேண்டும் எனவும் சிறிலங்காவில் நிலவிய மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தங் கொடுத்த அதேவேளையில், 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த தந்திரோபாய நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்கியிருந்தது. 

இந்நிலையில், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தானது நம்புவதற்கு கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் தற்போது ஆட்சியிலுள்ள இந்திய மத்திய அரசாங்கம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்தை ஆதரித்ததற்கு இதனுடன் மத்தியில் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டு கட்சிகளின் அழுத்தமே காரணமாகும். 

இதற்கும் மேலாக, "மனித உரிமைகள் தொடர்பான உயர் ஆணையகம் அல்லது ஐ.நா சிறப்பு பிரிவுகள் சிறிலங்கா அரசாங்கத்துடன் இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். சிறிலங்கா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு மீளிணக்கப்பாடு மற்றும் அமைதி முயற்சிகளை அடைந்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியுள்ளது" என இந்திய வெளியுறவு அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிடப்பட்டமையானது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் இந்தியா வழங்கிய ஆதரவு மீதான நம்பிக்கையை சற்றுக் குறைத்துள்ளது. 

சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மற்றும் யுத்த காலக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என 2011ல் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயத்திற்கு இந்தியா தனது முழு அழுத்தத்தையும் வழங்குவதுடன் இது தொடர்பில் சிறிலங்கா பொறுப்பளிப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் வலியுறுத்த வேண்டும். 

இந்த ஆய்வின் வழிமூலம் : The Diplomat By Pratyush 

மொழியாக்கம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20121231107519

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.