Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EPDP யையும் வேவு பார்க்கிறது இலங்கைப் புலனாய்வுப் படை:- மண்டை தீவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிக் கொடி ஏற்றியவர்களை துரத்திப் பிடித்தவர்களுக்கு பாலியல் வன் கொடுமையாளர்களை தெரிவதில்லையா?

Island%20Epdp%20protest%201_CI.jpg

  

தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கோரி ஈபிடிபியின் அனுசரணையுடன் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை மண்டைதீவில் நடத்தப்பட்டுள்ளது. 

 

ரோஜா சிறுவர் அமைப்பு எனும் பேரில் நடத்தப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டம் அண்மையில் நான்கு வயதேயான சிறுமி மீதான பாலியல் வன்முறை மற்றும் படுகொலையை கண்டித்து நடத்தப்பட்டிருந்தது. 

 

சுமார் முந்நூறிற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் கூடிய  அளவில் அரச பணியாளர்களும் கலந்து கொண்டனர். 

Island%20Epdp%20protest%202.jpg

வேலணையிலுள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை கூட்டுறவு அமைப்புக்களது அங்கத்தவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி மூலமாக விடுத்த பணிப்பையடுத்து இவ்வாறு பணியாளர்கள் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்மாகியவற்றில் பங்கெடுத்திருந்தனர்.

 

மண்டைதீவு புனித பேதுருவானவர் தேவாலயம் முன்பதாக புறப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இறுதியாக மண்டைதீவு பொலிஸ் நிலையம் முன்பதாக முடிவுற்றது. 

Island%20Epdp%20protest%203.jpg

முன்பள்ளி சிறார்கள் சிறுவர்களென பலரும் சுலோக அட்டைகளை தாங்கியவாறு பேரணியினில் கலந்து கொண்டனர். ஈபிடிபியினரது முழுமையான ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடந்த போதும் இராணுவப்புலனாய்வு பிரிவினர் ஆர்ப்பாட்டகாரர்கள் அளவிற்கு பிரசன்னமாகி வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அண்மையில் குறித்த சிறுமி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றிருந்த வேளை கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் கிணறொன்றினுள் இருந்து அவளது சடலம் மீட்கப்பட்டுமிருந்தது.

 

இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்திருக்காத போதும் புலிக் கொடியேற்றியவர்களை துரத்தி பிடிக்க தெரிந்த அரச படைகளுக்கு இக்கொலையாளிகள் கண்ணுக்கு தெரிவதில்லையா என ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினர்.  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87212/language/ta-IN/article.aspx

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி மூலமாக விடுத்த பணிப்பையடுத்து இவ்வாறு பணியாளர்கள் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்மாகியவற்றில் பங்கெடுத்திருந்தனர்.

 

traitors-kp-dauglas-karuna-pillaiyaan-ma

பாலியல் வன்முறைக்குப் பின் கொல்லப்பட்ட 4 வயது சிறுமியின் கொலை - கைதான சந்தேக நபர் எங்கே?
 

 

 

மண்டைதீவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்-

MANDAITHIVU%20MAHAJAR1_CI.jpg

 

யாழ் தீவகத்தின் மண்டைதீவில் பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொல்லப்பட்ட 4 வயதுச் சிறுமியின் கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 31ஆம் திகதி ஒருவரை புலனாய்வுப் பொலிஸார் கைது செய்திருந்ததாக உள்ளகத் தகவல் ஒன்று குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளது. 

அன்றைய தினம் சிறுமி கொல்லப்பட்டு வீசப்பட்டு இருந்த கிணற்றை அண்மித்த பகுதிகளில் பதுங்கியிருந்த புலனாய்வுப் பொலிஸார் 31 வயதான அரு.....ர். சி....ர் என்பவரை கைது செய்துள்ளனர். (தேவை ஏற்படின் முழுமையான பெயர் வெளியிடப்படும்) இந்தக் கைது குறித்து பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்திலும் பதியப்பட்டு இருந்ததாக காவற்துறையுடன் தொடர்புடைய ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். எனினும் இன்று இடம்பெற்ற பேரணியின் பின் மகஜரை பெற்றுக் கொண்ட பொலிசார் இந்த சம்பவம் குறித்து தாம் எவரையும் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். 

அவ்வாறாயின் பொலிஸ் பதிவேட்டில் பதியப்பட்டு பொலிஸ் உயர்மட்டங்களுக்கு கைது பற்றி அறிவித்த பின்பு அதனை மறைப்பதற்கு பின்னால் உள்ள காரணிகள் என்ன? கைது செய்யப்பட்டவர் எங்கே? அவர் பணபலம் படைத்தவரா? அல்லது அரசியல் பலம் உடையவரா? அல்லது உண்மையில் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றின் மூலம் விடுவிக்கப்படாமல் பொலிஸார் அவரை தாமாக விடுதலை செய்தனரா? இல்லை பாதுகாப்பு தரப்பின் செல்லப்பிள்ளையா? என்ற கேள்விகளை இந்தக் கைது பற்றி பின்னர் அறிந்தவர்கள் கேட்கிறார்கள். 

இவ்வாறே நெடுந்தீவு சிறுமியின் பாலியல் பலாத்காரத்தின் பின்னான கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் வெறும் 'அம்பு' என குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு இன்று மேலதிக தகவல் கிடைத்தது. அதாவது இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் படகு மூலம் தமிழ்நாட்டுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளார் என உள்ளக விசாரனையில் தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற செல்வாக்குள்ள நபரே சிறிமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். எனினும் சிறுமியை கொலை செய்யும் பொறுப்பே சிறையில் இருப்பவருக்கு வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது. டீ.என்.ஏ பரிசோதனையில் தற்போது சிறையில் இருப்பவர் நெடுந்தீவில் கொல்லப்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தவில்லை என்பதும் அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தப்பிச் சென்றவர் குறித்த விபரங்கள் பொலிஸாரின் பதிவேட்டில் இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவந்துள்ளது. அவ்வாறாயின் தப்பிச் சென்றவர் குறித்த விபரங்கள் ஏன் வெளியிடப்படாமல் பேணப்படுகிறது என்ற கேள்வியும் அது குறித்து இன்றபோல் பொலிஸாரின் உதவி ஏன் நாடப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இவை யாவும் துலக்கப்படாத மர்மங்களாக நீடிக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.