Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிய உள்நாட்டுப்போரில் பொதுமக்கள் இழப்புக்களை அமெரிக்காவும் ஐ. நா வும் வேண்டுமென்றே மிகைப்படுத்தி வெளியிட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட சிரிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 60,000 எனும் தொகையை இன்னெர் சிட்டி பிரெஸ் கேள்வி கேட்டிருக்கிறது. ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலினால் பணத்திற்கு அமர்த்தப்பட்ட பெனிடெக் எனும் தனியார் நிறுவனமே இந்தக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது தெரியவந்திருக்கிறது. இந்த தனியார் நிறுவனத்தின் நிதி உதவியாளர்களாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், அமெரிக்கா எயிட் எனும் அமைப்பும் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவ்வாறு அமெரிக்க நிதி உதவியுடன் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் இழப்புக் கணக்கெடுப்பைப் போல சிறிலங்கா உள்நாட்டு யுத்தத்திலும் ஒரு கணக்கெடுப்பை ஏன் பெனிடெக் நடத்தவில்லை என்றும் இன்னெர் சிட்டி பிரெஸ் கேட்டிருக்கிறது. சிறிலங்கா உள்நாட்டு யுத்தத்தில் ஏற்பட்டுவந்த இழப்புகளைக் கூறினால் அது சர்வதேச அரங்கில் ஐ. நா வை சங்கடத்தில் ஆழ்த்தும் என்கிற ஒரே நோக்கத்திற்காக வேண்டுமென்றே இழப்புக்கள் மறைக்கப்பட்டும், குறைவாக மதிப்பிடப்பட்டும் வந்தமையானது 80,000 இற்கு அதிகமான மக்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் இன்னெர் சிட்டி பிரெஸ் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஐ. நா பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் இன்னெர் சிட்டி பிரெஸ் இடம் கருத்துத் தெரிவிக்கும்போது, "ஐ. நா வின் பிரசன்னம் களத்தில் இல்லாத போது, உண்மையான இழப்புக்களைக் கணக்கெடுப்பது எவ்வாறு" என்று வினவியிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்பட்ட சிரிய பொதுமக்கள் இழப்புக்களுக்கு ஐ. நா அங்கீகாரம் வழங்கும் முகமாக நவிப்பிள்ளையே இந்த எண்ணிக்கையை வெளியிட்டதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் அறிவித்திருக்கிறார். சிரிய உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் இழப்புகளை எண்ணுவதற்கு எந்த அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்று ஐ. நா வையும், பெனிடெக் நிறுவனத்தையும் இன்னெர் சிட்டி பிரெஸ் கேட்டிருக்கிறது. தமிழ்நெட்டில் வந்த ஆங்கில மூலம்..... http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35903

சிரியப் படுகொலைகள் 60.000 நவிப்பிள்ளை ஆவேசம்
 
ஐ.நாவின் மனித உரிமைப் பிரிவின் சார்பில் நவிப்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய ஐரோப்பியக் காலைச் செய்திகளில் அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டது.


இதுவரை வெளியான செய்திகள் சிரியப் போரில் மரணித்தவர்கள் தொகையை 44.000 என்றே வர்ணித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 15.மார்ச் 2011 ல் இருந்து 30 நவம்பர் 2012 வரை மரணித்தவர்கள் தொகை 59.648 என்று ஐ.நா தெரிவித்துள்ளது, ஆகவே 2012 வரை மரணித்த எண்ணிக்கை 60.000 மேல் என்றும் நவிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி இன்று வெளியாக மறுபுறம் சிரிய அதிபர் ஆஸாட்டின் விமானங்கள் குண்டு வீசியதில் 30 பேர் கொல்லப்பட்டார்கள்.

 

டமாஸ்கஸ்சை அண்டி இது நடைபெற்றுள்ளது, அப்பகுதியில் மக்கள் பனிப்பிடித்து அலப்பாரித்து ஓடுவதாகவும், கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

 

இந்தியாவின் தலைநகர் நியூ டெல்கியில் கடந்த டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி மரணமடைந்தது தெரிந்ததே.

 

இந்த வழக்கின் ஆறு சந்தேக நபர்களில் ஐவர் மீது பாலியல் பலாத்காரம், படுகொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, ஆறாவது நபர் வயது குறைந்தவராக இருப்பதால் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

 

இவர்கள் அனைவரும் உலகம் தெரியாத, சட்டம் புரியாத, டெல்லியின் சேரிப்பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்று உள்துறை அமைச்சர் சுசில்குமார் சின்டி தெரிவித்தார்.

 

அமெரிக்காவின் 2013 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை அங்கீகரிக்கும் படிவங்களில் அதிபர் ஒபாமா கையொப்பமிட்டுள்ளார்.

 

அதேவேளை பொதுத்துறை வெட்டு, வரி உயர்வு குறித்து கிளம்பியுள்ள எதிர்ப்புக்களை அடக்குவதற்காக புதிய வழிமுறைகளை தேடுவதற்காக இரு சபையின் முக்கிய உறுப்பினர்களை வரும் ஞாயிறு சந்தித்துப் பேச இருக்கிறார்.

 

புதிய பொருளாதார பிரேரணைகளால் வரும் நெருக்குவாரங்களை சமாளிக்க இன்னொரு திட்டத்தை முன் வைக்க இருக்கிறார், இந்தத் திட்டம் தற்போது அமெரிக்க காங்கிரசிற்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.

 

மறுபுறம் இரத்தக்கட்டி ஏற்பட்டு மூளை உதறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

 

இவருக்கு இரத்தக்கட்டியை கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் புதுவகை மாத்திரை வழங்கி சுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

http://www.alaikal.com/news/?p=119981

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.