Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொண்ணுங்க எண்டா ஒழுங்கு மரியாதையா வீட்ட கவனிச்சுக்கணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாரும் சுண்டல ஒரு மாதிரி பாக்கிறிங்க? அப்பிடின்னு நான் சொல்லலப்பா ........

மேற்கத்திய நாடுகளின் பழக்க வழங்கங்கள் நகரங்களில் அதிகம் கடைபிடிக்கப்படுவதால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. இதனால் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் கிராமங்களை காட்டிலும் நகரங்களிலேயே அதிகம் நடக்கிறது என்று ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.

மேலும், பெண்களை தாயாக மதிக்கும் நம்நாட்டின் கலாச்சாரத்தையும் மதிப்பையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேணிக்காக்க வேண்டும். இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ். தரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இக்கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று ஆண்களுக்கு உட்பட்டு பெண்கள் நடக்கவேண்டும் என்ற ஒரு சர்ச்சையான கருத்தையும் மோகன் பகவத் தெரிவித்து உள்ளார்

இதுகுறித்து மோகன் பகவத் கூறியதாவது:-

குடும்பம் நடத்த ஆண்களும் பெண்களும் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படுகிறார்கள். அதன்படி குடும்பப் பெண் வீட்டை கவனித்து கொள்ள வேண்டும். அதற்கு பதில் ஆண், மனைவிக்கு பாதுகாப்பையும் மற்றும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வெண்டும்.

எனவே, ஒப்பந்தப்படி ஒரு ஆண் நடந்துகொள்கிறார். இதுநாள் வரை பெண்ணும் அந்த ஒப்பந்தப்படி நடந்துகொள்கிறார். ஆகையால் ஆண், அந்த பெண்ணுடன் தங்குகிறார். மனைவி ஒப்பந்தத்தை மீறுகிறபோது, கணவன் அவளை கைவிடமுடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவரது கருத்தை சரியான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்று பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் கேட்டுக்கொண்டு உள்ளனர். ஆனால் அதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் கூறியதாவது:-

ஜாதி என்கிற பெயரில் இந்தியாவில் தலித் மற்றும் ஆதிவாசி பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது என்பதை அவர் தெரிந்து இருக்கிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகவே அதிக கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக அரசு அறிக்கை கூறுகிறது. மோகன் பகவத் இந்தியாவையும் பாரதத்தையும் பற்றி புரிந்துகொண்டிருக்கவில்லை.

இந்தியாவில் இந்துத்துவா மற்றும் இந்து ராஷ்ட்ரா பற்றி பேசுவது, முற்றிலும் அவர்களின் சாதிய மற்றும் பிரிவினை வாத போக்கேயே காட்டுகிறது. அவர்களின் உள்மனதில் என்ன இருக்கிறது என்பதையே இந்த கருத்து காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் பெண்கள் ஆண்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும். அவர்களின் இணையுறுப்புகளாக இருக்கவேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினர்.

பெண்கள் தேசிய ஆணையத்தின் தலைவர் மம்தா சர்மா கூறியதாவது:-

நாட்டின் அடிப்படையாக கொண்டு பெண்களை பற்றி பிரித்து பேசுவதை அவர் நிறுத்தி கொள்ளவேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் அனைவரும் இந்தியக்குடிமக்கள். அடிப்படையை பாருங்கள். பெண்களின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Maalaimalar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.