Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக கல்வி செயற்பாடு மீளவும் நாளை முதல் ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய அனைத்து கல்வி செயற்பாடுகளும் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்களுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட  நிர்வாகித்தினர்  நடாத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னர், நாளைமுதல் அனைத்து பீடங்களினுடைய கல்வி செய்ற்பாடுகளையும் ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 

கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக தடுப்பிலுள்ள மாணவர்களும் சாதகமான சமிக்ஞை காட்டியதாகவும் அவர்களுடன் ஏனைய மாணவ தலைவர்கள் உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

 

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சுதந்திரமான கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாதிருந்த போதும் அவர்களது விடுதலைக்கான அடுத்த கட்டங்களை கருத்தில் கொண்டும் உயர்கல்வி அமைச்சரது எச்சரிக்கையினை கருத்தில் கொண்டும் கற்றல் செயற்பாடுகளில் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

 

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க விடுத்த எச்சரிக்கை பிரகாரம் இன்றைய தினத்தினுள் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் ஒராண்டிற்கு இழுத்து மூடப்போவதாக கூறப்பட்டிருந்தது. சுமார் ஆறு வார காலம் இவ்வாறு மூடப்பட்டிருந்தால் ஓராண்டிற்கு மூடுவதற்கான அதிகாரம் அவர் வசமேயுள்ளதுடன் மீள திறக்கவும் அவரது அங்கீகாரம் தேவையாகவுள்ளது.

 

அதனிடையே தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் தை பொங்கலுக்கு முன்னதாக விடுவிக்கப்படலாமென உயர்கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்;. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87325/language/ta-IN/article.aspx

முதலாம் ஆண்டு பொங்களுக்கு மகிந்தாவுக்கு யாழ்ப்பாணத்தில் நாடு கொள்ளாத வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் ஆட்சி தேர்தலின் போது மகிந்தா யாழ்ப்பாணி, யாழ்ப்பாணியேதான் என்பதை உணர்ந்தார். பசில், யாழ்ப்பாணத்தார் பல்பு மாத்தத்தான் லாயக்கென்று அப்பட்டமாக மேடைகளில் பேசினார்.

 

சென்ற ஆண்டுப் பொங்கலுக்கு அலரிமாளிகையில்  கிரூஸ்ண பூஜை நடந்தது.

 

2013ல் வடமாகாணத்தேர்தல் வரலாம்.

 

சமாதனத்தூதர்கள் வெள்ளரசுக் கிளைகளோடும், கண்டிப்பைங்கிளிகளோடும், 700 தோழர்களோடும், யாழ்ப்பாணம் போகும் சந்தர்ப்பம் இருக்கிறது.

 

திசாநாயக்கா மாணவர்கள் பொங்களுக்கு விடுவிக்கப்படுவார்கள் என பி.பி.சி. பேட்டியில் சொல்லியிருக்கவில்லை. அது கோபத்தபயாவின் தீர்மானம். மாத்தையாவுக்கு பொங்களன்று  மாபெரிய கோலாகல வரவேற்பு நடத்த ஒட்டுக்குழுக்களும் அடிவருடிகளும் தயார் செய்த்து வருகிறார்கள். அதாவது வசந்தி, "மாத்தையா பொங்கலுக்கு யாழ்ப்பாணம் போகும் போது பல்கலைகழக கடையை திறந்து வைத்திருக்க வேண்டும். பீறியட்." இதனால் மகிந்தரை காப்பாற்றும்படி ஆணை கிடைத்தவுடன், சிங்கள கொத்தடிமை ஒன்று மானக்கேடாக  தனக்கு எப்போது மாணவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்பது தெரியாது என்றார்.

 

நடக்கத்தக்கது, பொங்கலுக்கு மாணவர்களை விடுவித்து அவர்களை பொங்கல் வரவேற்பில் மகிந்தாவை புத்தரைவிட பெரிய கருணைக்கோவிலாக  வருணித்து பேச வைத்து யாழ்ப்பாணம் முழுவத்தையும் ஆச்சரியத்தில் அதிர வைப்பது. அதன் பின்னர் அரசுக்காக எழுதுபவர்கள் இந்த மாணவர்களின் பழைய சரித்திரமே இப்படித்தான்; இவர்கள் தமிழரசுக்கட்சியில் இருந்தவர் என்பதும் இவர்கள் கடைந்தெடுத்த பரமத்துரோகிகள் வர்ணித்து முடிப்பபார்கள்.

 

இதுதான் பல்கலைகழக திறப்பின் பின்னணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.