Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியா சக்தி அறவாரியம் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள் மலேசியா நாட்டினுடைய சக்தி அறவாரியம் மூலம் பெறப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

 

இவற்றை பிரதேச சபையின் தலைவர் அ.தனிநாயகம் மக்களிடம் கையளித்தார். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியிலும், கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வன்னியில் பெய்த கனமழையினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக்தி அறவாரியம் குறித்த உதவிகளை வழங்கியிருந்தது.

 

நட்டாங்கண்டல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 குடும்பத்தினருக்கும், மூன்று முறிப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினருக்கும், கரும்புள்ளியான் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பத்திற்கும், பாலிநகர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பத்திற்கும், சிவபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

இங்கு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் அ.தனிநாயகம் உரையாற்றுகையில்,

 

கிராமத்திலும் மக்களாகிய உங்களால் தெரிவுசெய்யப்பட்ட அதிகம் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த உதவிகளை வழங்கியிருக்கின்றோம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் போது எம்மால் உதவி புரியக்கூடிய எங்களது உறவுகள் இந்த உதவித்திட்டத்தினை உங்களிடம் கையளிப்பதற்காக எமக்கு வழங்கியிருந்தார்கள்.

அந்தவகையிலே எமது கோரிக்கையை ஏற்று இந்த உதவியினை வழங்கிய சக்தி அறவாரிய மலேசியா நண்பர்களுக்கும், இந்த உதவித்திட்டத்தை பெற்றுத்தந்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.

மிக வறுமைக்கோட்டின் கீழ் பாதிக்கப்பட்டு இருக்கின்றவர்களுக்கு உதவுவதற்காக உதவி செய்ய நல்லுள்ளம் கொண்டிருக்கின்ற உறவுகளை எமது மக்களுக்கு உதவி செய்வதற்காக தொடர்பு கொள்ளுமாறு இந்த தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன் என்றார்.

 

மேலும் இவ் உதவி வழங்கும் நிகழ்வில் சபையின் உபதலைவர் சி.செந்தூரன் உறுப்பினர்களான ந.மகிந்தன், எஸ்.தேவதாஸ், திருமதி.தெ.சரஸ்வதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

malasia_sakthi_aravariyam_help_001.jpg

malasia_sakthi_aravariyam_help_002.jpg

 

http://eelampresse.com/?p=16005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.