Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைப் பொங்கல் வருகுது மகனே! வீட்டில் கட்டாயம் பொங்கல் செய்

Featured Replies

கொழும்பில் இருக்கின்ற தந்தையயாருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற ஆசிரியத் தொழில் புரியும் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இது. அன்பு மகனே! எதிர்வரும் 14ஆம் திகதி தைப் பொங்கல் வருகிறது. கட்டாயம் வீட்டில் பொங்கல் செய்ய மறந்துவிடாதே. தை என்பது தமிழ் மக்களின் வாழ்வில் முக் கியமான மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை எங்கள் மனங்களில் ஏற்படுத்துவதன் மூலம் மனம் உற்சாகமடையும். வசந்த காலத்தின் நுளைவாயிலாக இருக் கின்ற தை மாதம் பிறப்பது வசந்த காலத்தின் திருக்கதவு திறப்பது போன்றது. எனவே வீட்டில் புதுப்பானை வைத்து, பொங்கல் படைப்பது உளவியல் ரீதியிலும் முக்கியமான தென்பதை நீ ஒரு ஆசிரியர் என்ற வகையில் ஏற்றுக் கொள்வாய் என நம்புகின்றேன்.
 
அதிலும் ஆசிரியத் தொழில் வெறுப்பாக இருக்கிறது அப்பா! என்று நீ அடிக்கடி என்னிடம் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன். அன்பு மகனே! கல்வியில் டிப்ளோமா செய்த உனக்கு உளவியல் பற்றி நான் கூறவேண்டிய தேவையில்லை. கல்வி உளவியல் என்பது தனித்து மாணவர் களின் உளவியலை மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக ஆசிரியர்களின் உளவியல் பற்றியும் குறிப்பிடுகின்றது. உள ஆரோக்கியத்துடன் ஒரு ஆசிரியர் இருக்கின்ற போதுதான் அவரால் சிறந்த முறையில் கற்பித் தலை மேற்கொள்ள முடியும். எனவே சம காலத்தில் ஆசிரியத் தொழிலில் உனக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு, மாண வர்களின் குழப்படிகள், இடமாற்றம் வந்துவிடுமோ என்ற ஏக்கம், கூட்டத்திற்குச் சென்ற அதிபர் என் னென்ன படிவங்களைக் கொண்டு வந்து குவிப் பாரோ என்ற கலக்கம் என அனைத்தும் சேர்ந்து உனக்கு மன அழுத்தத்தை தந்துள்ளது என்று நான் கருதுகிறேன்.


இதற்கு மேலாக தொடர்ச்சியான கருத்தரங்குகள், ரயர் கம்பனி முதல் பெயின்ற் கம்பனி வரை நடத்துகின்ற போட்டிகள் என்பனவும் புனிதமான ஆசிரியத் தொழில்; உன்னிடம் வெறுப் பாகிப்போயிற்று என்றுதான் சொல்லவேண்டும். என் அன்பு மகனே! இத்தகைய வெறுப்பு நிலைகளை நீக்கவே தைப் பிறப்பில் கட்டாயம் வீட்டில் பொங்கல் செய் என்று சொல்கிறேன்.

 

சூரிய பகவானுக்கு நன்றி சொல்கின்ற தமிழர் பண்பாட்டின் விழுமியத்தை நீ கடைப் பிடிக்கின்ற போது அது உன் பிள்ளைகளுக்கும் நன்றியின் உணர்வை உணர்த்தி நிற்கும். ஆகையால்,அங்கு; இங்கு என்று ஓடித்திரி வதை விடுத்து தைப்பொங்கலின் போதாவது வீட்டிலிருந்து பொங்கிப் படைத்து உன் மனைவி, பிள்ளைகள், உறவுகளுடன் மகிழ்வைப் பகிர்ந்து கொள். இப்படிக்கு உன் அருமை அப்பா.


இக்கடிதத்தை வாசித்த மகன் தன் தந்தைக்கு எழுதும் கடிதம் நாளை வரும்.

 

http://www.eelamview.com/2013/01/12/pongal/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளையும் வருவேன்.

  • தொடங்கியவர்

அப்பா! உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு!

 

அன்புள்ள அப்பாவுக்கு வணக்கம்! நீங்கள் எழுதிய திருமுகம் கிடைக்கப்பெற்றேன். வீட்டில் தைப்பொங்கலைச் செய்து மனைவி பிள்ளைகளோடு சந்தோசமாக இருக்குமாறு எழுதியிருந்தீர்கள். அப்பா,உங்கள் கடிதம் வாசித்தபோது நீங்கள் ஆசிரியராக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் பொங்கல் செய்த நாட்களை நினைத்துப் பார்க் கின்றேன். தைப்பொங்கல் நாள் முழுவதும் ஒரே கொண்டாட்டம்.பெரியப்பா,சித்தப்பா,மாமா என எங்கள் உறவுகள் வீட்டுக்கு வந்துபோவதும் பின்னர் நாங்கள் அவர்களின் வீட்டிற்குச் செல்வது மாக ஒரே மகிழ்ச்சி.ஆனால் அந்த நாள் இனி மேல் வராதப்பா. இந்த முறை வீட்டில் தைப் பொங்கல் செய்து முடிய பிற்பகல் பெரியப்பா வீட்டிற்குப் போகலாம் என நினைத்திருந்தேன்.

 

 

எனினும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் எங்கள் அதிபர் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். தைப் பொங்கல் தினமன்று பிற்பகல் 1.30 மணிக்கு கோப்பாய் தேசிய கல்வியியற் கல் லூரியில் தைப்பொங்கல் விழா நடக்க இருக்கிற தாம்.ஆசிரியர்கள் கட்டாயம் வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அப்பா நாங்கள் தமிழர்.தமிழர் என்பதால் விழாக்கள் கூட்டங்களுக்கு கட்டாயமானதாகத் தான் இருக்கிறது. தைப்பொங்கல் விழா வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

 

தைப்பொங்கல் அன்று அதைத் தவிர்த்து இன்னொரு நாளில் விழாவை வைத்திருக் கலாம் அல்லவா? சரி ஏற்பாடு செய்துவிட்டார்கள் என்றால் அதனை முன்கூட்டியாவது அறிவித்திருக்க வேண்டும்.


முன்கூட்டியே தெரிந்தால் நாங்களும் எங் கள் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத் திருப் போம். அப்பா! கோப்பாயில் நடக்கும் பொங்கல் விழாவிற்கு கட்டாயம் வரவேண்டும் என்று அதிபர் கூறியதும் என் சக ஆசிரியர் ஒருவர் அதிர்ந்துபோனார்.

 

தைப்பொங்கல் அன்று பிற்பகல் ஆலடி வைரவருக்குப் பொங்கல் செய்வதாக நேர்த்தி செய்துள்ளார். குருக்கள், பூசை வழிபாடு அபிஷேகம் என அத்தனைக்கும் ஏற்பாடு செய்தாயிற்று. இப்போது அவர் என்ன செய்யலாம் என்று முழிக்கின்றார். என்னப்பா செய்வது! நிலைமையை எடுத் துக் கூறினால் உரியவர்கள் மாற்றுவழி செய் வார்கள்.ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியாகத்தான். எங்கள் தரப்பிலிருந்து நிலைமையை கூறு வதற்கு எவரும் இல்லை.

 

 

எங்கள் அதிபரை நான் குறைகூறவில்லை. அதேபோல் அதிகாரிகளும் பாவங்கள். அவர் களுக்கு குலைநடுக்கம்.அரச உயர் மட்டத்தி னர் உத்தரவிட அவர்கள் அதிபருக்கு உத்தர விட,அதிபர் எங்களுக்கு கட்டளை இடுகிறார். கட்டளையை மறுத்து அதிபரோடு நீங்கள் கதைக்கலாம்தானே என்று பழைய வாத்தி யாராக-ஒரு தொழிற்சங்கவாதியாக நீங்கள் எங்களிடம் கேட்கலாம். ஆனால் அப்படி நாங்கள் கேட்டால் ஏற்கெனவே சலரோகம் ;உயர் குருதி அழுத்தத்தால் அவஸ்தைப்படும் எங்கள் அதிபர் சிலவேளை ஒரு பொங்கலும் காணாமல் போய்விடுவார். ஆகையால் பகல் 12 மணிக்கு ஆயத்தமாகி 1.30 மணிக்கெல்லாம் கோப்பாய் விழாவுக்கு பிரசன்னமாக முடிபு செய்துள்ளோம். அப்பா உங்கள் காலம் வேறு.எங்கள் காலம் வேறு. வீட்டில் பொங்கல் இல்லாவிட்டாலும் கோப்பாயில் சூரிய பகவானுக்கு பொங்குகிறம் என்ற திருப்தியோடு... அன்பு மகன்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=404:2013-01-13-07-03-31&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அகூதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.