Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவந்துள்ள தீபச்செல்வனின் மூன்று நூல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி – போர் தின்ற நகரம் - எதற்கு ஈழம்? PRAY FOR MY LAND

Deeban1_CI.jpg

 

ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்றுபுத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுதுநடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன. 

 

கிளிநொச்சி – போர் தின்ற நகரம் 

தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன்எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்தமனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறுசந்தர்ப்பங்களில் அவர் எழுதிய பதிவுகள் தொகுக்கப்பட்டுஇப்பொழுது எழுநா வெளியீடாக நுாலாக்கப்பட்டுள்ளது.

 

இத்தொகுப்பில், யுத்தம் விழுங்கிய மனிதர்களுடைய இன்றையஅவல வாழ்வைப் பதிவு செய்திருக்கும் அதேநேரத்தில்,யுத்ததிற்கு முன்பான அவர்களுடைய செழுமையான வாழ்வும்ஒப்பீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் கிளிநொச்சியின்அழிவையும், அழிவின் கோரத்தையும், மனிதர்களின்துயரத்தையும் உணர்ந்து கொள்ள முடியும் .கிளிநொச்சிமண்ணின் வரலாற்றை பதிவு செய்திருக்கிறது இந்த நூல்.

 

Elam.jpg

எதற்கு ஈழம்?

ஈழம் என்பது பல பத்தாண்டுகளாக போராடி மாண்டபோராளிகளின் கனவு மட்டுமல்ல முப்பதாண்டுப் போரில்,வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கானஅஞ்சலியும்தான். களைத்தவர்களும் தோற்றவர்களும் போகபுதிய தலைமுறையின் கனவாக ஈழம் இருப்பது தவிர்க்கமுடியாதது. தலைமுறைகள் மாறிக் கொண்டேயிருக்கிறநிலத்தில் எத்தனை அழிவுகளின் பின்னரும்அடக்குமுறைகளின் பின்னரும் கனவு வெவ்வேறுவடிவங்களில் புதுப்பிக்கத்தான் செய்யும். 

 

தனி ஈழம் ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாக மட்டுமன்றிஇலங்கையில் அறுபது ஆண்டுகளுக்காக மேலாக தொடரும்இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் அமைகிறது  என்றுகுறிப்பிடும் இந்நூல் எதற்கு ஈழம் தேவை? என்பதைக் குறித்துவிரிவாக பேசுகிறது. ஈழம் தொடர்பில் பல்வேறு ஊடகங்களில்தீபச்செல்வன் எழுதி கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல். ஈழத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும்  இந்த நூல்எதற்கு ஈழம் என்பதைக் குறித்துமக்களின் வாழ்விலிருந்து பேசுகின்றது. 

 

pray%20for%20my%20land.jpg

PRAY FOR MY LAND 

நான்காம் ஈழப்போர் பற்றிய தீபச்செல்வனின் கவிதைகள்மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. போருக்குள் பிறந்துஅதற்குள்ளேயே வளர்ந்த தீபச்செல்வனின் குரல் வலிமையானஈழக் குரலாக சமகாலக் கவிதைகளில் முக்கியம் பெறுகிறது.ஈழத்துக் கவிதைப் பரப்பிலும் தமிழ்க் கவிதைப் பரப்பிலும் மிகமுக்கியமான கவிஞராக இருக்கும் தீபச்செல்வனின்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் பலமுக்கியமான மொழிபெயர்ப்புக்களை செய்து வரும் லதாராமகிருஷ்ணன். 

தீபச்செல்வனின் குரல் ஈழ மக்களுடைய குரல். அவரது குரலைஒரு சர்வதேச மொழியில் மொழிபெயர்ப்பதன் மூலம் அவரதுமக்களின் குரலை இந்த உலகப் பரப்பில் ஒலிக்கச் செய்யமுடியும். ஆறாத துயராகவும் தீரா தாகத்தின் குரலாகவும்அரசியல் ரீதியாக முக்கியம் பெறும் தீபச்செல்வன் கவிதைகள்முதன் முதலில் மிக முக்கியமான ஒரு மொழிபெயர்ப்பாளரால்மிக நெருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87510/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபச்செல்வன் தொடர்ந்து எழுதவேண்டும்.வாழ்த்துக்கள்

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தேன். இந்த வருடம் பிழைக்க புலம் பெயர்ந்ததினால் அந்தக் கொடுப்பினை இல்லை (:  நிறைய புத்தகங்கள் வாங்க எழுதி வைத்திருந்தேன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.