Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோரத்தாண்டவமாடும் மஹிந்த

Featured Replies

ஸ்ரீலங்காவின் அரசதலைமையினாலும்  அதன் பாராளுமன்றின் மூன்றில் இரண்டிலும் அதிகமான  பெரும்பான்மை பலமான பௌத்த சிங்கள பாசிச வெறியர்களாலும் , அந்நாட்டின் அதி உயர் கட்டமைப்புகளில் மிக முக்கியமானதாக உள்ள  நீதித்துறையே முற்றுமுழுதாக சீர்குலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஜனநாயகத்தை ஆழக்குழி தோண்டிப்புதைத்துவிட்டு  காட்டாச்சியை முழுமையாக உறுதிப்படுத்துவதான சர்வாதிகாரத்தை தன் தலையில் வைத்தாடுகிறார் மஹிந்த.

 
இதன் மூலமாக அவர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் பல  செய்தியைகளை  உரக்கக்கூறி உள்ளார்.
இதில், தமிழர்களுக்கு எதிரான வன்முறையை அல்லது குறிப்பாகக் கூறுவதாயின் தமிழர்களை தவணை முறையில் அழித்தொழிப்பதற்கான வலுவினை சிங்கள அரசு உறுதிப்படுத்தி விட்டது என்பதுவே முக்கியமான செய்தியாகும்.
 
அடுத்ததாக சர்வதேசத்தால் அதிகமான அழுத்தங்கள் அரசின் மீது பிரயோகிக்கப்ப்படுமிடத்தில் சர்வதேசத்தை ஏமற்றுவதற்காக நீதிமன்றங்களால் தமிழர்களுக்கு பேச்சளவிலாவது சிறு சலுகைகள் கூட வழங்கப்படுமிடத்தில் காலப்போகில் எதேச்சதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கட்டளைக்கு உட்பட்டு அல்லது கடும்போக்கு இனவாதிகளின் வேண்டுதற்குட்பட்டு , பாராளுமன்றம் மூலம் அச்சலுகைகள்  பிடுங்கி  எறியப்படும் என்பதாகும் .
 
அல்லது சர்வதேசத்தால் அதிகமான அழுத்தங்கள் அரசின் மீது பிரயோகிக்கப்ப்படுமிடத்தில் அனைவராலும் ஏற்றுக்கொளப்படும் ஓர் தீர்வை அமுல்ப்படுத்திய பின் நீதிமன்றங்களின் அனுமதியின்றிக் கூட காலப்போகில் பாராளுமன்றம் மூலம் அச்சட்டத்தையும், தீர்வையும்   செயலிழக்க வைக்க முடியுமென்பதாகும் .
 
மேலும்உதாரணமாக தமிழ்தேசிய கூட்டமைப்பும் சர்வதேசமும் விரும்பும் தேர்தலை  யாழில் நடத்தாமலேயே, ஸ்ரீலங்கா சட்டவரைபின் அடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு  எதிர்த்தாலும், பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ''திவி நெகும''(?)வை   யாழிலும் அமுல்படுத்த முயலலாம். 
 
அத்தோடு  எதிர் வரும் 'மார்ச்'மாத  ஐ .நா வின் ஸ்ரீலங்கா மீதான அழுத்தங்களை எதிர் கொள்ள இராசபட்சாக்கள் விரைவாக தயாராகி வருகிறார்கள் என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளார்கள் என்பதாகும் .
 
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது ஸ்ரீலங்கா தனது, தமிழர் மீதான இனவழிப்பை காலப்போக்கில் விரைவு படுத்துவதற்கான அறிகுறியே தென்படுகிறது.  இதன் ஓர் பதிவே தமிழ் தேசிய கூட்டமைபின் திரு.சிறிதரன் அவர்களின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடந்தேறிய இராணுவத்தின்  வெடிமருந்து  பித்தலாட்டங்களும் கைது நடவடிக்கைகளுமாகும் 
.
புலத்தில் தமிழர்களின் தொடர்ச்சியான மௌனமானது நீண்டகால அடிப்படையில் புலத்தமிழர்(எங்கள் ) மீதானதுமான  சிங்களத்தின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும்  சுலபமாக்குவதாகவே அமையும் .
 
கடுந்தெறல் அரசு 
 
மேலும்உதாரணமாக தமிழ்தேசிய கூட்டமைப்பும் சர்வதேசமும் விரும்பும் தேர்தலை  யாழில் நடத்தாமலேயே, ஸ்ரீலங்கா சட்டவரைபின் அடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு  எதிர்த்தாலும், பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ''திவி நெகும''(?)வை   யாழிலும் அமுல்படுத்த முயலலாம். 
 
கடுந்தெறல் அரசு 

 

வடக்கு கிழக்கை கையில் பிடிக்கதான் திவினெகும பிரதானமாக பயன் படுத்தப்படும் என்பதுதான் என் கணிப்பு.

 

மற்றய மாகணங்களில் அரச அடிவருடிகளுக்கு தொழில் கொடுப்பதற்காக மாகாணசபைகளை கலைக்க விரும்பவும் மாட்டார்கள். மேலும் மத்திய, மாகண செனட்டுக்கள் கொண்டுவந்து அதிலும் பதவிகள் கொடுக்கதான் முயல்வார்கள்.

 

மகாணசபை பதவிகள் கொடுக்க ஆளில்லாத இடம் வடமாகணம். தேர்தலை நடத்தி ஆமி வாக்கு போட்டாலும் மகிந்தாவிடம் இன்னமும் ஒரு முதல் அமைச்சர் இல்லை. வடமாகாண முதல் அமைச்சர் ஒருவர் கிடைக்கும் வரை தேர்தல் இல்லை.

Edited by மல்லையூரான்

கடுந்தெறல் அரசு,

 

நல்ல ஆக்கம். தொடருங்கள்.

 

The-Rule-of-Lawlessness1.jpg

 

 

 

 

போர்குற்ற மகிந்தாவின் கொடுங்கோல் சிங்களவர்கள் பக்கமும்  திரும்பி உள்ளது!

 

இது ஜெனீவாவில் தமிழர்களுடன் இணைந்து சிங்களவர்களும் இந்த முறை ஐ.நா.வில் காட்டுவார்கள்.

 

 

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.