Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாடி யாருங்கோ?

Featured Replies

இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும் நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா?

அப்படி இருக்க முடியாது என்று நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா? :?:

முட்டையிலிருந்து மயிர்பிடுங்குதலும், பிடுங்கிய மயிரில் பேன் பார்த்தலும் பற்றியதானவொரு விழிப்புநிலைச் சொல்லாடல்

யாழ்ப்பாணத்துச் சமூகமானது தமிழர் தாயகத்தின் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருமொரு சமூகமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. முழு யாழ்ப்பாண மக்களும் அவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் சக்திகளேயென எவரும் எடைபோட்டுவிடக்கூடாது; யாழ் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில பிரிவினரே அவர்கள்.

இச்சக்திகள் தமிழர்தாயகத்தின் ஏனைய பகுதி மக்கள் மீது மட்டுமல்லாமல், தமது சொந்தச் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இச்சக்திகளின் கருத்துக்களே ஒட்டுமொத்தத் தமிழ்மக்களினதும் கருத்துக்களாகக் கணிக்கப்படுகின்றன.

இச்சக்திகள் பிரதேச, மத, சாதி நிலைகளினின்று ஆதிக்கக் கருத்துக்களை முன்வைப்பவர்கள். யாழ், சைவ, வேளாளக் கருத்துக்களென்பவை இவர்களது திருவாயுதித்தவைதான்.

தமிழ்த்தேசிய அரசியல் அறுவடைக் காலத்திலிருக்கும்போது யாழ், சைவ, வேளாளக் கருத்துநிலைகள் தமிழ்த்தேசியத்தின் இருப்பினை அகரீதியாகச் சிதைக்கக்கூடியவை.

தமிழ்த்தேசியப் போராட்டம் பழைய யாழ்பாடிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து, பல புதிய கருத்துநிலையாளர்களையும் உருவாக்கியுள்ளது.

தமிழ்த்தேசியம் - தமிழ்மக்களின் அரசியலை, சமூகத்தை, அறிவியலை, பண்பாட்டினை ஊடுருவி நோக்க - வலிந்து பிரசவித்தவர்களில் ஒருவன்தான் இப்புதிய யாழ்பாடி.

எந்தச் சிந்தனையும் அதனதன் அடித்தளங்களிலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றது. புதிய யாழ்பாடி - இவனது சிந்தனையின் அடித்தளம் தமிழ்த்தேசியம்தான். தமிழ்த்தேசிய அரசியல் இன்று சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்து, அறுவடைக்காலத்தினை அண்மித்திருக்கும் நிலையில் அது சார்ந்த சகல தளங்களையும் ஊடுருவிப் பார்க்கும் அவசியமும், தேவையும் முன்னெப்போதையும் விட அதிகமாகவே காணப்படுகின்றது.

இத்தகையதொரு காலகட்டத்தில் அனைத்து விடயங்களையும் தமிழ்த்தேசியத்திற்குள்ளிரு

  • தொடங்கியவர்

யாழ்பாடி என்பவர் என்னுடன் துருதினர் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார், அவர் யாழ்க் கள பாடியாக இருக்கலாம் என எண்ணி அழைப்பை ஏற்கவில்லை.(பேய்களுடன் எந்த தனிப்பட்ட உரையாடல்களையும் வைப்பது கிடையாது, மனிதர்களுடன் மட்டுமே).

வலயில் எழுதும் மேற் குறிப்பிட்டவர் தான் அது என்றால் அவர் மீண்டும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும்  நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா?

அப்படி இருக்க முடியாது என்று  நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா?  :?:  

வலைப்பதிபவருக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும் நாதரே

  • தொடங்கியவர்

கறுப்பி அப்ப நீர் உண்மையாக் கறுப்போ?

தகவலுக்கு நன்றி யாழ்பாடி,உந்தளவுக்கு எழுத உம்மால் முடியாது என்று தான் நினச்சனான்,உமக்கு வெட்டத் தானே தெரியும்.எதுக்கும் உறுதி செய்து கொண்டா நல்லம் எண்டு பாத்தன்.அதோட துரிதுனர் மூலம் தொடர்பு கொண்டது நீர் இல்லை என்பதையும் உறுதி செய்வீரா? ஏனெண்டால் அந்த வலைப் பதியிறவரோட கதைக்கலாம்,மீண்டும் தொடர்பு கொண்டால்.

நன்றி.

உந்தளவுக்கு எழுத உம்மால் முடியாது என்று தான் நினச்சனான்

:lol:

பாடி இதுக்காவெண்டாலாவது ஏதாலும் எழுதுமோய். :P

:lol:

பாடி இதுக்காவெண்டாலாவது ஏதாலும் எழுதுமோய். :P

அதை யாராம் வெட்டுறது ???

வெட்டுறமாதிரி எழுத மாட்டார் எண்டுதான் உள்மனம் சொல்லுது. ஆனால் எழுத வந்தால் வெட்டாத மாதிரி எழுத வருகுதே இல்லையே.!

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு வெட்டத் தானே தெரியும்.

நன்றி.

அப்படியா நாரதர் அண்ணா!

எனக்கு இப்போது தானே தெரிகின்றது, கருத்துக்களில் பிழை இல்லாமல், ஆண்டாண்டு காலப் பகையை வைத்து தான் இங்கு கருத்துக்கள் வெட்டப்படுகின்றது என்று! :wink:

எனித் தான் ஆரயவேண்டும். என் கருத்துக்களும் சில வெட்டப்பட்டிருக்கின்றன! வெட்டினவருக்கும் எனக்கும் குடும்பப் பகை, வேலிச்சண்டை, ஏதும் இருக்குதோ என்று. இல்லாவிட்டால் என் கருத்தில் எவ்வித பிழை இருந்தாலும் வெட்டமாட்டினம் தானே! :wink: :P

  • தொடங்கியவர்

வணக்கம் தூயவன்,

உந்த யாழ்பாடிக்கும் எனக்கும் எந்தப்பகையும் இல்லை,

நான் இந்த பதிவைப்போட்டதன் அடிப்படைக் காரணம், அவர் யார் என்பதை அறிவதற்கு.ஏனெனில் அவர் ஒருவகை அரசியல் விளயாட்டை விளையாடுகிறார் என்ற உணர்வு.எனக்கு இப்படி ஒரு முகத்தோட நல்லாக் கதைச்சு இன்னொரு முகத்தோட அரசியல் விளயாடுறவைன்ட விளயட்டுப்பிடிகிறேல்ல.ஒரு காலத்தில சில பேர் தங்கட கத்தியின் செல்வாக்கில கன தனிப்பட்ட விளையாட்டுக்கள் விளையாடினவை.தாங்களே வெட்டிப் போட்டு இன்னொரு பேரில வந்து அதுக்கு நியாயம் கற்பிப்பினம். நாங்களும் மோடர் மாதிரி அவைக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பம்.ஆனா அவைக்கு எண்டு ஒரு கூட்டம் இருக்கும் அவைக்குத் தெரியும் என்ன நடக்குது எண்டு. இப்ப நான் கொஞ்சம் இதுகளைப்படிச்சிட்டன்.இப்ப மற்ற எல்லாரும் யோசிப்பினம் இங்க என்ன நடக்குது எண்டு,சில பேருக்கு விளங்கி இருக்கும்.

உதில மதனில எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு,தான் செயிறது நடுனிலயாச் செய்யிறன் என்ற துணிவு அவருக்கு இருக்கு.இப்படி துணிவில்லாதவை தான் உப்படி இரண்டு முகமூடி போடுக்கொண்டு விளயாடுறது.உவை நடுனிலை ஆகசெயற்படுறம் என்று நினச்சா ஏன் முகமூடி போட வேணும்.அதுவும் தனிப்படக் கதைக்கவும் இரண்டு முகமூடி எண்டா ,இங்க எழுதுறவை என்ன பேயரோ?

கள விதிகளின் படி வெட்டுறதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அது எனக்குப் பிரச்சினையுமில்லை.ஆனா அரசியல் உதுக்க விளையாடி என்னதைக் காணப் போறம்?

நான் எப்பவுமே நேர்மையாக நடப்பவர்களுடன் தான் தொடிசல் வைக்கிறது. நேர்மை அற்றவர்கள் எந்த நேரம் என்ன செய்வினம் என்று பாத்துக்கொண்டிருக்க ஏலாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.