Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சியாத் இயக்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு கொலை மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'சியாத் இயக்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு கொலை மிரட்டல்
ஜன 15, 2013
 
ம்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
DSC03057%20-%20Copy.JPG
 
குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை (15-01-2013) குறித்த 3 ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மிரட்டல் கடிதமானது மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதங்கள் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தின் போது நீதிமன்னறத்திற்கு ஆதரவாகவும், அரசிற்கும், அமைச்சர் றிஸாட் பதீயூதின் அவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ஸாம் மதத்தை கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி எழுதப்பட்டுள்ளதாகவும் இறுதி எச்சரிக்கை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்காளாகிய தங்களை இறுதியாக எச்சரிப்பதோடு 'அல்லாவிடம'; கொடுக்கப்படுவீர்கள் என 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர் தெரிவிக்கையில்,

இவ்விடையம் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்ட நிலையில் எங்கள் அனைவருக்கும் எதிராக தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே மன்னார் சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

தற்போது குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் மன்னார் சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதோடு ஊடக அமைப்புக்களின் ஊடாக சிறீலங்கா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

குறித்த கொலை மிரட்டல் கடிதமானது நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி அனுப்பப்பட்டுள்ளமை என்பதினால் எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்;தில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அமைச்சரும், ஏனைய சந்தேக நபர்களுமே பொறுப்புக்கூற வேண்டும் என பகிரங்கப்படுத்தவுள்ளேலாம். என குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

சவூதியில் கொல்லப்பட்ட சிறுமியின் விடயத்தில் 'சியாத்' இயக்கத்தின் நிலையும் புரிகின்றது.

சவூதி அரசின் மீது சியாத் இயக்கம் வெகு விரைவில் படை எடுக்கும் 

கடிதம் நீதிமன்றத்தை ஆதரித்ததற்காகவே எச்சரிக்கை விடுகிறது. அரசாங்கத்தை எதிர்க்க வேண்டாம் என்கிறது.

 

சிராணியை பற்றியோ அவவின் பதவி நீக்கதையோ பற்றி எதுவும் பேசவில்லை.

 

இரண்டாவது விடையம், பதியுதின் நீதிமன்றத்தை தாக்கியதாக கூறப்படுவதில் எச்சரிக்கை வருகிறது.

 

அரச ஆதரவாளர்களின் எதிரி நீதிமன்றமாகத்தான் தபால் சொல்கிறது. சிராணியை பற்றியோ மன்னர் மாவட்ட நீதிபதியைப்பற்றியோ அல்ல.

 

அவர்கள் இருவரும் இதற்குள் மாட்டுப்பட்டது சாதரண தொழில் போட்டி விடையமே அல்லாமல்  மகிந்தாவுக்கு சிராணி மீதும், பதியுதினுக்கு நீதிபதி மீதும் தனிப்பட்ட கோபம் இல்லை.

 

மகிந்த சொல்வதும்  இனிமேலைய காலங்களில் இப்படி துண்டை கொடுத்து அரசு நடத்த தாம் விரும்பவில்லை என்பதுதான்.

 

ஆகவே போக வேண்டியவை நீதிமன்றங்களே.

 

சிராணிக்கு ஐ.நா. தூதுவர் பதவி கிடைக்கலாம். தாமாரவை ஈடுசெய்வார். சரத் என் சில்வாவும் தூதுவர் பதவிக்குதான் வாலையாட்டுகிறார்.

Edited by மல்லையூரான்

'சியாத் இயக்கம்' - இதற்கு பின்னால் சிங்கள அரசும் முன்னால் அமைச்சர் றிஸாட் பதீயூதினும் உள்ளார்கள். இதில் பாகிஸ்தான் பங்களிப்பு இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்.

 

 

சிங்கள அரசிற்கு ஜிகாத் தேவைப்படுகின்றது என்ற விடயம் வருங்காலத்தில் சிங்கள அரசிற்கும் இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் சவாலாக அமையும்.

அரசாங்கத்தின்  அடுத்த இலக்கு ரிசாட் பதியுதீன்... !    அதுக்கான முன்னேற்பாடுதான் இது ...

 

மூதூரை தளமாக கொண்ட ஜிகாத் கமிட்டி அமைப்பின்    இண்றைய பேச்சாளரும், அமைப்பாளரும் ரிசாட் பதியுதீன் தான்...

மன்னார் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஜனவரி, 2013 - 13:15 ஜிஎம்டி
 
மன்னார் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல்

இலங்கையின் வடமேற்கே மன்னாரில் உள்ள உள்ளுர் செய்தியாளர்கள் மூவருக்கு கடிதம் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சியாத் இயக்கம் என்ற பெயரில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.

பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை பொருட்படுத்தாமலும், இறைவனை மதியாமலும் செயற்படுவதினால் இறுதி எச்சரிக்கை என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 


அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் கெட்ட பெயர் ஏற்படுத்த, நீதிமன்றத்திற்கு சார்பாகவும், அரசாங்கத்திற்கு விரோதமாகவும் செய்திகளை எழுதியது, அமைச்சர் ரிசாத் பதியுதீனை நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி செய்திகளை எழுதி இஸ்லாம் மதத்தைக் கேவலப்படுத்தியது போன்ற செயல்களுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மன்னார் நீதிமன்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்தைப் படம் எடுத்தும், நேரடியாகச் சம்பவ இடத்தில் இருந்து செய்திகளைத் திரட்டிய பெலிஸ்டஸ் பச்சேக், ஆனந்த் மார்க், ரொசாரியன் லெம்பட் மற்றும் பஸ்மி ஆகிய நால்வருக்கும், அந்த சம்பவத்தின் பின்னர், தொலைபேசி மூலமாகப் பல தடவைகள் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பில் ஏற்கனவே பொலிசாரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையிலேயே இப்போது கடிதம் மூலமாக மூன்று செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

அமைச்சர் பதியுதீன் கருத்து
120813133141_rishad_bathiyudeen_304x171_

மறுக்கிறார் அமைச்சர் பதியுதீன்

எனினும் இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுக்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மூவரும் தமக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்றும், தம்மை இத்துடன் தொடர்புபடுத்தியுள்ளது திட்டமிட்டு தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிக்கும் ஒரு செயல் என்றும் பிபிசி தமிழோசையிடம் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மூன்று ஊடகவியலாளர்களில் இருவர் அரச ஊடக நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது குறித்து முழுமையான ஒரு விசாரணையை நடத்தி உண்மையை கண்டறியுமாறு நாட்டின் தலைமை போலீஸ் அதிகாரிக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை தான் செய்தபோது தம்மை ஆதரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் செய்யப்படும் போது ஏன் எதிர்க்கிறார்கள் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130116_mannarmediamen.shtml

நாட்டில் நீதி என்பது நடைப்பிணம் தான்.

 

நீதியிலும் அரசியல்வாதிகள் வைப்பதுதான் 'சட்டம்'. இதை எதிர்க்க சட்டத்தரணிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை.


பரந்த இருண்ட அத்தியாயம் ஒன்று ஆரம்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.