Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் கடற்படையின் தாக்குதல் கடற்புலிகளால் முறியடிப்பு -

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

83 இனப்படுகொலையின் பின் சிங்களவனை அவன் நாட்டிலேயே அவன் பொருளாதாரத்தை உருக்குலைத்த பின்புதான், அவன் இனப்படுகொலைகளை விட்டான். இப்போது திரும்பவும் தொடங்கி விட்டான். இவனுக்கு பழையபடி புத்தியை புகட்டினால்தான், இவன் அடங்குவான். சும்மா, மேலைய நாடுகளுக்கு நாம் பயந்து கொண்டு செயல்படத்தேழ்வையில்லை. மேலை நாடுகள் எம்மை பட்டியலில் சேர்த்தது எதனால், எமது பொறுமைக்கு பரிசா? நாம் எவ்வளவு வெண்புறாக மாறினாலும், எதிரி அடங்கப்போவதில்லை. அந்நிய நாடுகள் எம்மைப் பற்றி என்ன சொல்வார்கள், ஐயோ, அவன் என்ன சொல்வான், இவன் என்ன சொல்வான் என்று நாம் இவ்வளவு நாளும் இருந்த படியால்தான் எதிரி இதை எம் பலவீனமாக கருதி எம் மக்களை கொடூரமாக கொலை செய்கிறான். எம்மக்களின் கண்ணீர் எமக்குத்தான் தெரியும். எதிரி பயப்படுவது, அவன் உயிரில் கை வைக்கும் போதுதான். எவ்வளவு எதிர் பரப்புரையை இந்த 30 வருட காலத்தில் கண்டிருக்கிறோம். ஆகவே, இனிமேலும் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதை விட்டுவிட்டு மரண அடி கொடுத்தால் தான், எதிரியை திரும்பவும் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கமுடியும்.

ஆம் ஆம் குறுக்கால்ஸ் சொன்னபடி கருத்துக்கள் தெரிவித்து சொல் வீரனாக இல்லாமல், செயலில் காட்டுவோம்!

திருப்பி அடிப்போம் என்று எச்சரிக்கை விட்ட பின்பு தான், விமானத்தாக்குதலை நிறுத்தினான். நிறுத்தசொல்லி இந்தியாவும் வற்புறுத்த, இந்த எச்சரிக்கை உதவியது. ஆக உந்த பயங்கரவாதிப் பரப்புரைக்கு அஞ்சாதீர்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மாதிரி அறிக்கை விட வேண்டாம் என்று தான் குறுக்ஸ் அசான்னார்? அதற்கு ஏன் இவ்வளவு வியாக்கியானம்? இது வெறுமனே முருகனை மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானதே! முருகா நல்ல நண்பர். அவருக்கு இது புரியும் என நினைக்கின்றேன்.

மேலும் அலிகா சொல்வது போல பதிலடியை களத்தில் தான் காட்டவேண்டுமே தவிர, எழுத்தில் அல்ல. இன்று சிங்களப்பத்திரிகைகள் எல்லாவற்றையும் பார்த்தால் தெரியும். வெளிப்படையாகவே சொல்கின்றேன். நிதர்சனம் பொட்டம்மானின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தளம் என்றவகையிலேயே எழுதுகின்றன. நிதர்சனத்திற்கும், புலிகளுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று புலிகள் அறிவித்த பின்பும் ஏன் இவ்வாறு எழுதுகின்றன என்றால், அங்கே தரப்படும் பிழையான செய்திகளை புலி முத்திரை கொடுத்து, புலிகளுக்கு அவப்பெயரை உண்டு பண்ணும் நோக்கத்தில் தான்.

அரசியலுக்கு வீராப்பு, வார்த்தைச் சவடால்கள் ஒன்றும் அவசியமில்லை. இராஜதந்திரம் தான் தேவை! அதைப் புலிகளுக்குச் செய்யத் தெரியும். முந்திரிக் கொட்டைகள் மாதிரி தேவையில்லாத உரிமைகோரலை விடுத்து புலிகளை ஏன் பலவீனப்படுத்துகின்றீர்கள்.

மேலும் பேசாலைத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதாக புலனாகின்றபோது, ( மீனவர்கள் சிலர் கடலுக்குப் போகாமல் திரும்பிவந்ததால் சந்தேகமுற்ற கடற்படை போய்த் தான் சண்டை ஆரம்பமானதாக சிங்கள அரசே ஒப்புக் கொள்ளும்போது) தேவையில்லாமல் புலகளின் வலிந்த தாக்குதல் மாதிரி எழுதுவான்? இதைக் கள உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்திரிக்கொட்டை எப்போது உரிமைக்குரல் விட்டுச்சு? களத்தில் புனை களப்பெயரில் எழுதுவதை புலிகள் மாதிரி அறிக்கை விடுகிறார்கள் என்று யாராவது ந்ம்புவார்களா? நான் சொல்லவந்தது பொய்பரப்புரை செய்பவனுக்கு யாழ்களத்தில் புனைபெய்ர் கொண்டவர்களின் அறிக்கைகள் தான் அவசியம்!!! . குறுக்ஸ் குத்தலாக எழுதியதுபோன்று அலலது முந்திரிக்கொட்டை உரிமை என்று கள உறுபினர்களை சாடுவதை விட்டுவிடுங்கள். முருகன் எழுதியதினால் புலிகளின் ராஜதந்திரம் ஒன்றும் தரம் குறையாது. இத்தோடு எம்மை நாமே தாக்கிக்கொள்வதை விட்டுவிடுவோம்!!!

என் கருத்து, எதிரியின் பொய்பிரச்சாரத்திற்கு நாம் பயப்படத்தேழ்வையில்லை என்பதே!

அன்புடன் அல்லிகா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் இணையத்தளங்காகட்டும், பத்திரிகைளாகட்டும் எதையுமே, pro-LTTE என்ற பெயர் பதத்தோடு தான் சிங்களப்பத்திரிகைகள் செய்திகளை ஆரம்பிக்கும். வேறு ஆதாராம் கிடைக்காவிட்டால், நீர் எழுதுவதையம், அப்படி(pro-LTTE)த் தான் எழுதித் தொடங்குவார்கள். அப்போது குய்யோ, முறையோ என்று யாழில் வந்து புலம்புவதைத் தவிர வேறு வழி கிடைக்கப்போவதில்லை.

வெறுமனே உங்களை நியாயப்படுத்துவதில் தான் கவனம் இருக்கின்றதே தவிர, சொல்லப்பட்டதன் உள் அர்த்ததைப் புரிந்து கொள்ள மறுக்கின்றதோ!

எனி என்ன? உங்களின் தன்மானங்கள் பீறிட்டுக் கிளம்புவதை பார்ப்போம்!

அலிகா இங்கு நாம் தடுக்க முனைவது எதிரிகளின் பொய்ப்பரப்புரைகளுக்கு ஆதாரங்களை எமது வாய்சொல் வீராப்புகளினால் உருவாகுவதை.

தவிர்க்க முடியாத காரணங்களால் எதிரியின் பொய்ப்பரப்புரைகளுக்கு சில மட்டுப்படுத்தப்பட்ட வெற்றி கிடைத்த காலம் ஒருபுறம். ஆனால் கேவலம் எம்மில் சிலரது தனிப்பட்ட இறுமாப்பும் அகங்காரமும் அறியாமையும் அதைத் தொடர்கதையாக்க வேண்டுமா?

எதிரியின் பொய்ப்பரப்புரையை உண்மையாக்கும் வெற்று வாணவேடிக்கைகளை தவிருங்கள் என்பது எந்தவகையில் எமது கோழைத்தனமாகும் என்பது எனது சிற்றறிவிற்கு தெரியவில்லை.

ம்.. நான்தான் அந்தக்காலத்திலை தீக்கோழி சொல்லி சண்டைபிடிச்சனெண்டுபார்த்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.