Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று ஆரம்பம்

Featured Replies

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று ஆரம்பம்

 

 

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது.


நான்காவது தடவையாக நடைபெறும் இந்த கண்காட்சி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
 

யாழ்ப்பாணத்தை ஒரு அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக சம்மேளனம், யாழ் மாநகர சபை இலங்கை மகாநாடுகள் பணியகம் மற்றும் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல கலந்துகொள்ளவுள்ளதுடன் தொழில் பயிற்சி நெறிகளையும் வழங்கவுள்ளன.

 

இது தொடர்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே. பூரணச்சந்திரன்,
இந்த கண்காட்சி மூலம் முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், வர்த்தக துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை எற்படும் என  தெரிவித்துள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=860731774518184008

  • தொடங்கியவர்

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

 

 

சர்வதேச வர்த்தக கண்காட்சியானது நான்காவது தடவையாக நடைபெறுகிள்றது. அதன்படி இன்று 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இக் கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.


கண்காட்சியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதம விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இங்கு மொத்தமாக 365 காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவின் 87 காட்சிக் கூடங்கள் இந்தியாவினுடையதாகும். அதிலும் 49 காட்சிக் கூடங்கள் இலங்கையுடன்  இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

எனினும் இந்த கண்காட்சியில் இந்தியா மலேசியா இந்தோனேசிய ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

 

இங்கு வீட்டுத் தேவைக்கான பொருட்கள்,  மருத்துவ கூடங்கள் கல்விக் கூடங்கள், இயந்திரதொழில் நுட்பங்கள், கைத்தொழில் அபிவிருத்திக்கூடங்கள் என பல்வேறு வகையான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். ஈ. சரவணபவன், வணிகர் கழக சங்கத் தலைவர் பூர்ணச்சந்திரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=502861776318258716



DSCF8599.jpg



DSCF8632.jpg



DSCF8636.jpg



DSCF8582.jpg

  • தொடங்கியவர்

இவ்வாறான வர்த்த கண்காட்சிகளின் நோக்கம் எமது  மக்களின் "பொருளாதார வளத்தை மேம்படுத்துதல்"  என்பதில்லை.

மாறாக எமது மக்களிடம்  இருக்கும் மிகுதி செல்வத்தையும் சுரண்டுவது.

 

அடிப்படையில் இந்த நான்கு வருடத்திலும் வறுமையே கூடி வருகின்றது. சிங்கள தேசம் 7-8% பொருளாதாரத்தால் வளரும்பொழுது தமிழர் பிரதேசங்கள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றது. இதை மறைக்கவே இவ்வாறான 'கண்காட்சிகள்' அதிகமாக வழி சமைக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.