Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜ., தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜ்நாத் சிங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி:பா.ஜ. கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் ராஜ்நாத்சிங் நியமிக்கப்படலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கென நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். நாளை ராஜ்நாத்சிங் தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கடந்த 2005 முதல் 2009 வரை பா.ஜ., தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.தேசிய தலைவராக மகாராஷ்டிரா மாநிலத்தைச்சேர்ந்த நிதின்கட்காரி உள்ளார்.இவரது பதவி காலம் கடந்த டிசம்பர் மாதமே நிறைடைவந்தையொட்டி, கட்சி விதிகளின்படி தேர்தல் மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க பா.ஜ. மேலிடம் நாளை நடக்கும் என அறிவித்தது. எனவே நிதின்கட்காரி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என செய்திகள் வெளியாயின.மேலும் சுஷ்மா சுவராஜ் ,மகேஷ்‌ஜெத்மலானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தலைவர் பதவி குறித்து பா..ஜ. உயர்மட்ட குழுக்கூட்டம் இன்று நடந்துமுடிந்தது. இதில் தலைவராக உள்ள நிதின்கட்காரியே , ராஜ்நாத்சிங் பெயரை முன்மொழிந்துள்ளார். இதையடுத்து அவர் பா.ஜ. தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கட்காரியை தலைவராக்குவதில் ஆர்.எஸ்.எஸ். உறுதியாக இருந்தது.

தற்போது நடந்து முடிந்துள்ள உயர்மட்டக்குழுக்கூட்டத்திற்கு பின்னர் ஒரு மித்த கருத்து எட்டப்பட்டதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் ராஜ்நாத்சிங்கை மீண்டும் தலைவராக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நாளை காலை அவர் முறைப்படி தலைவராக அறிவிக்கப்படாலம்.

முன்னதாக நிதின்கட்காரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பா.ஜ.வின் அடுத்த தலைவராக ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார். என டில்லி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Dinanalar

********************************************************

சுண்டலின் கருத்து

பா ஜ க என்ற மாபெரும் கட்சியின் தலைவராக மீண்டும் தலைமைப்பொறுப்பில் அமர இருக்கும் ராஜ் நாத் சிங்கிற்கு வாழ்த்துக்கள் பொது தேர்தலுக்கு கட்சிய மிகவும் துரிதமாக பலப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அவர் முன் இருக்கின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து கட்சியை கட்டுக்கோப்புடன் நகர்த்த வாழ்த்துகள்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ., தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜ்நாத் சிங்

புதுடில்லி: பா.ஜ.,வின் தேசிய தலைவராக ராஜ்நாத் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி, கடந்த மூன்று ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்து வந்தார். அவரின் பதவிக் காலம், கடந்த டிசம்பர் மாதம் முடிந்து விட்டதால், புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. இந்தத் தேர்தலில், நிதின் கட்காரியை மீண்டும் தேர்வு செய்ய, அத்வானி உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனத்தில், பல நிறுவனங்கள் போலி பெயரில் முதலீடு செய்திருப்பதாக, சமீபத்தில் புகார்கள் எழுந்ததே இதற்கு காரணம். இருந்தாலும், "கட்காரியை மீண்டும் தலைவராக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலியுறுத்தியது. இதனால், தலைவர் தேர்வில் குழப்பம் நீடித்து வந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இந்நிலையில், இந்த விவகாரத்தில், நேற்றிரவு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. நிதின் கட்காரி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.அதில், "எனக்கு எதிரான ஊழல் புகார்கள், எந்த வகையிலும், பா.ஜ., கட்சியை பாதிக்கக் கூடாது என, நினைக்கிறேன். அதனால், இரண்டாவது முறை, பா.ஜ., தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட திருப்பம் காரணமாக, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளவருமான, ராஜ்நாத் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் துவங்கின. இதன்படி, இன்று காலை டில்லியில் பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு முன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்தித்த ராஜ்நாத் சிங், பின்னர் நிதின் கட்காரியுடன் எம்.பி.,க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து கட்சியின் தலைவர்கள் புதிய தலைவர் தேர்வு குறித்து பேசினர். இறுதியாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ராஜ்நாத் கட்சி அமைப்பிலும் நிர்வாகத்திலும் முதிர்ந்த அனுபவம் உள்ளவர் என பாராட்டு தெரிவித்தார். மேலும், பதவியிலிருந்து வெளியேறும் கட்காரிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

இதையடுத்து, புதிய தலைவருக்கான வேட்புமனுவை ராஜ்நாத் சிங் தேர்தல் அதிகாரியான கெலாவட்டிடம் தாக்கல் செய்தார். அவருடன், கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராஜ்நாத் சிங்கை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து ராஜ்நாத் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Dinamalar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.