Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை: கருணாநிதியுடன் ஆலோசிக்க பிரதமரின் பிரதிநிதி வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை: கருணாநிதியுடன் ஆலோசிக்க பிரதமரின் பிரதிநிதி வருகை

ஜூன் 20, 2006

சென்னை டெல்லி:

இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு நேரில் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில் பேசினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்து விளக்கிய அவர், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

அப்போது, இந்தப் பிரச்சனையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்க தனது சார்பில் பிரதிநிதி ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் இலங்கையில் அமைதி ஏற்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

(இலங்கை விஷயத்தில் குட்டையைக் குழப்பிய ஜே.என். தீட்சித் மாதிரி யாரையாவது ஒருவரை கருணாநிதியிடம் பிரதமர் அனுப்பாமல் இருந்தால் சரி)

முன்னதாக நேற்று மாலை கருணாநிதி, தலைமையில் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் டி.சுதர்சனம், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில், இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை அரசும், போராளிகளும் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழகத்துக்கு அகதிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்தியா, இலங்கை வாழ் மக்களின் மனதைப் பெரிதும் பாதிக்கும் அளவுக்கு இச்சம்பவங்கள் அமைந்துள்ளன.

இப்பிரச்சினை ஏற்கனவே விரும்பத்தகாத பல விபரீத, வேதனையான நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்ததை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கான வழி வகைகளைக் காண இந்திய அரசு ஆவண செய்திட வேண்டும்.

தமிழக மீனவர்களுக்க இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும், அந்த மீனவர்களுக்கு உயிர், உடைமை, உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்படவும், இந்தியா, இலங்கை அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மத்திய அரசு இப்பிரச்சினையில் இதுவரை எடுத்து வரும் நடவடிக்கையை குறை சொல்ல முடியாது. தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளோம்.

அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். இத்தீர்மானம் பிரதமருக்கு உடனே அனுப்பப்படும். நானும் அவருடன் தொலைபேசியில் பேசுவேன்.

அகதிகள் நிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை நேரில் கண்டறிந்து வர அமைச்சர்கள் தங்கவேலன், பெரியகருப்பன் ஆகியோரை அனுப்பினேன். அவர்களும் சென்று வந்துள்ளனர். அதற்கான அறிக்கையுடன் காத்துள்ளனர்.

இன்று நடந்தது திமுக தோழமைக் கட்சிகள் கூட்டம் அல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டம்தான். முதல் கட்டமாக ஏழு கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேசி கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

வேலூர் சிறையில் நளினியும், முருகனும் உண்ணாவிரதம் இருப்பதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்த¬ம் இல்லை. எனவே அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

தமிழக மீனவர்களைத் தாக்குவதற்கு இலங்கை ராணுவம் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும். அது வழக்கமாகி விட்டது. அதையெல்லாம் நிறுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் கருணாநிதி.

http://thatstamil.oneindia.in/news/2006/06...6/20/lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பிரச்சனை: தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆலோசகர்

ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் தூதுவராக இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சென்னை வருகை தர உள்ளார்.

கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் இலங்கையில் அமைதி நிலவ இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து கருணாநிதியைத் தொடர்பு கொண்ட மன்மோகன்சிங், ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க தனது தூதுவர் ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சு ஆலோசகர் எம்.கே. நாராயணனை மன்மோகன் சிங் அனுப்பி வைக்க உள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் இந்தியா தீவிர கரிசனை கருணாநிதியை சந்திக்க தூதுவரை அனுப்புகிறார் மன்மோகன் சிங்

இலங்கையில் ஏற்பட்டுள்ள போர் அபாயம் மற்றும் தமிழகத்துக்கு அகதிகள் வருகை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனு ப்பி வைக்கிறார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே சமீப காலமாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3,000 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இப்பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாம் செவ்வாய்க்கிழமை காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் இது குறித்து விவாதிக்க மத்திய அரசின் பிரதிநிதியை விரைவில் சென்னைக்கு அனுப்புவதாகவும் உறுதி அளித்ததாக கருணாநிதி நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இன்று காலையில் (நேற்று) இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு பேசினேன்.

திங்கட்கிழமை இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தி.மு.கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களைப் படித்துப் பார்த்ததாகவும், இலங்கைப் பிரச்சினை பற்றி என்னிடம் விபரங்களைக் கலந்து பேசுவதற்காக, டில்லியிலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்கின்றேன் என்றும், தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களைப் பற்றி உரிய முயற்சிகளை மேற்கொண்டு அமைதியான சூழ்நிலை உருவாக ஆவன செய்வோம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் என்னிடம் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமருடன் இன்று மங்கள புதுடில்லியில் சந்திப்பு

இந்தியாவிற்கான விஜயமொன்றை இன்று மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச் சர் மங்கள சமரவீர புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச வுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோச மான நிலைமைகள் குறித்து இருவரும் கலந்து ரையாடவுள்ளனர்.

இந்திய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி யையும் அமைச்சர் மங்கள சமரவீர சந்தித் துப் பேசவுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினை ஆகியன குறித்து தமிழக முதல் இவருடன் கலந்து பேசுவதற்காக புதுடில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புத் துறை ஆலோ சகர் என்.கே. நாராயணனை தமிழ்நாட்டுக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் நேற்று முன் தினம் தீர்மானித்த சூழ்நிலையில், இன்றைய மேற்படி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள போர் தொடர்பான அச்சம் மற்றும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்தியப் பிரதமருக்கு அமைச்சர் மங்கள சமரவீர விளக்கவுள்ளார். புதுடில்லி விஜயத்தின் பின்னர் சென்னைக்கு வரவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் சந்திப்பாரெனத் தெரிவிக்கப்படுகிறது. (க)

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள சமரவீர இன்று டில்லிக்கு அவசர பயணம் -நிலைவரங்களை அவருடன் ஆராய்ந்த பின்னரே இந்திய பிரதமரின் தூதுவர் கருணாநிதியை சந்திப்பார்

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் போர் அபாயம் மற்றும் வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து தினம் தமிழகத்துக்கு அகதிகள் சென்று கொண்டிருப்பது தொடர்பாக இந்தியா தீவிர கரிசனை கொண்டிருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை புதுடில்லிக்கு அவசர விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலா அல்லது பிந்திய நிலைவரங்களை அவ்வப்போது புதுடில்லிக்கு தெரியப்படுத்திவரும் அண்மைய வருடங்களில் கொழும்பினால் கைக்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளின் பிரகாரமா, மங்கள சமரவீரவின் இன்றைய டில்லிப் பயணம் அமைகிறது என்பது குறித்து உடனடியாக அறிய வரவில்லை.

இலங்கை நிலைவரம் தொடர்பாக குறிப்பாக வட, கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள், தமிழ் மக்கள் படுகொலைகள் குறித்து தமிழ்நாட்டில் உணர்வலைகள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. உட்பட சகல அரசியல் கட்சிகளுமே இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் தலையீட்டை வலியுறுத்தி வரும் நிலையில் இந்தியப் பிரதமரும் இது தொடர்பாக ஆராய்வதற்காக தனது விசேட பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்திப்பதற்காக அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதுடில்லி செல்கிறார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரிடம் மங்கள சமரவீர நேரில் விளக்குவாரென தெரிகிறது.

கெப்பிட்டிக்கொல்லாவவில் 64 பஸ் பயணிகள் கிளேமோர் தாக்குதலில் பலியான சம்பவம் குறித்தும் அதனையடுத்து வட, கிழக்குப் பகுதிகளில் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும் இலங்கை அரசாங்க தரப்பு கருத்துகளை மங்கள சமரவீர எடுத்துரைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

வட, கிழக்கில் இடம்பெறும் படுகொலைகள், விமானக் குண்டுவீச்சு, ஆட்லறித் தாக்குதல்கள் தொடர்பாக தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வும் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடும் வலியுறுத்தலை விடுத்துள்ளன.

இதனையடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தார். இந்தத் திருப்பங்களின் மத்தியிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் டில்லிப் பயணம் இடம்பெறுகிறது.

இது இவ்வாறிருக்க, டில்லியில் அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் பின்னரே நாராயணன் சென்னைக்கு சென்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை மேற்கொள்வாரென டில்லி உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு அளவிலான யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென இந்திய அரசாங்கம் கருதுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மங்கள சமரவீரவுடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் உணர்வுகளை இந்திய அரசாங்கத் தரப்பு எடுத்துக் கூறுமென குறிப்பிட்டிருக்கும் அந்த வட்டாரங்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மங்களவை சந்தித்த பின்பே சென்னைக்கு செல்வாரென தெரிவித்துள்ளன.

இன்று மங்கள சமரவீர டில்லிக்கு வருவது காரணமாக நாராயணன் சென்னைக்கு செல்வது சாத்தியமில்லை. ஏனெனில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மங்கள சமரவீர சந்திக்கும் போது நாராயணனும் உடனிருக்க வேண்டும். அத்துடன், அவர் தனியாகவும் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார். அத்துடன், நாளை 23 ஆம் திகதி நாராயணன் சீனா செல்கிறார். ஆதலால் சீனப் பயணத்தின் பின்பே நாராயணன் சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்திக்கும் சாத்தியம் உள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள சமரவீர இன்று டில்லிக்கு அவசர பயணம் -நிலைவரங்களை அவருடன் ஆராய்ந்த பின்னரே இந்திய பிரதமரின் தூதுவர் கருணாநிதியை சந்திப்பார்

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் போர் அபாயம் மற்றும் வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து தினம் தமிழகத்துக்கு அகதிகள் சென்று கொண்டிருப்பது தொடர்பாக இந்தியா தீவிர கரிசனை கொண்டிருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை புதுடில்லிக்கு அவசர விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலா அல்லது பிந்திய நிலைவரங்களை அவ்வப்போது புதுடில்லிக்கு தெரியப்படுத்திவரும் அண்மைய வருடங்களில் கொழும்பினால் கைக்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளின் பிரகாரமா, மங்கள சமரவீரவின் இன்றைய டில்லிப் பயணம் அமைகிறது என்பது குறித்து உடனடியாக அறிய வரவில்லை.

இலங்கை நிலைவரம் தொடர்பாக குறிப்பாக வட, கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள், தமிழ் மக்கள் படுகொலைகள் குறித்து தமிழ்நாட்டில் உணர்வலைகள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. உட்பட சகல அரசியல் கட்சிகளுமே இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் தலையீட்டை வலியுறுத்தி வரும் நிலையில் இந்தியப் பிரதமரும் இது தொடர்பாக ஆராய்வதற்காக தனது விசேட பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்திப்பதற்காக அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதுடில்லி செல்கிறார்.

இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரிடம் மங்கள சமரவீர நேரில் விளக்குவாரென தெரிகிறது.

கெப்பிட்டிக்கொல்லாவவில் 64 பஸ் பயணிகள் கிளேமோர் தாக்குதலில் பலியான சம்பவம் குறித்தும் அதனையடுத்து வட, கிழக்குப் பகுதிகளில் விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும் இலங்கை அரசாங்க தரப்பு கருத்துகளை மங்கள சமரவீர எடுத்துரைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

வட, கிழக்கில் இடம்பெறும் படுகொலைகள், விமானக் குண்டுவீச்சு, ஆட்லறித் தாக்குதல்கள் தொடர்பாக தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வும் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடும் வலியுறுத்தலை விடுத்துள்ளன.

இதனையடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தார். இந்தத் திருப்பங்களின் மத்தியிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் டில்லிப் பயணம் இடம்பெறுகிறது.

இது இவ்வாறிருக்க, டில்லியில் அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் பின்னரே நாராயணன் சென்னைக்கு சென்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை மேற்கொள்வாரென டில்லி உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு அளவிலான யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென இந்திய அரசாங்கம் கருதுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மங்கள சமரவீரவுடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் உணர்வுகளை இந்திய அரசாங்கத் தரப்பு எடுத்துக் கூறுமென குறிப்பிட்டிருக்கும் அந்த வட்டாரங்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மங்களவை சந்தித்த பின்பே சென்னைக்கு செல்வாரென தெரிவித்துள்ளன.

இன்று மங்கள சமரவீர டில்லிக்கு வருவது காரணமாக நாராயணன் சென்னைக்கு செல்வது சாத்தியமில்லை. ஏனெனில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மங்கள சமரவீர சந்திக்கும் போது நாராயணனும் உடனிருக்க வேண்டும். அத்துடன், அவர் தனியாகவும் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார். அத்துடன், நாளை 23 ஆம் திகதி நாராயணன் சீனா செல்கிறார். ஆதலால் சீனப் பயணத்தின் பின்பே நாராயணன் சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்திக்கும் சாத்தியம் உள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு) அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை சிறிலங்கா மற்றும் புலிகள் உருவாக்க வேண்டும்: மன்மோகன்சிங் இலங்கை இனப்பிரச்சனைக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்க வேண்டும் என்று இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வே பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா திரும்பும் வழியில் புதுடில்லி சென்றார்.

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கை நிலைமைகள் குறித்து விவரித்தார்.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் இருதரப்பினரும் அதிகாரப் பகிர்வுக்கான் திட்டத்தை உருவக்க வேண்டும் என்றும் இச்சந்திப்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இந்திய கூட்டரசின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் ஐக்கியம், இறைமை மற்றும் பிரதேச ஒற்றுமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இந்தியா ஈடுபாட்டுடன் உள்ளது என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் வாழ்கிற அனைத்து இன மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளுக்கும் விரைந்து துணிவான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மங்கள சமரவீரவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கும் அதே நேரத்தில் அதிகாரப் பகிர்வுக்காக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் குழுவையும் நியமித்துள்ளோம் என்று மன்மோகன் சிங்கிடம் மங்கள சமரவீர கூறினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மங்கள சமரவீர, இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள போதும் தமிழ்ப் போராளிகளுடன் மீண்டும் யுத்தத்தை நடத்தமாட்டோம் என்று கூறினார்

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவித் தமிழர்களை கொல்லாதீர்; இந்தியா கடுமையாக வற்புறுத்துகிறது -அமைச்சர் மங்களவிடம் நேரில் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை அரச படைகள் கொல்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இந்திய அரசு இலங்கையிடம் விநயமாகவும் அதேநேரம், மிக உறுதியாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியத் தலைவர்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோதே, இந்தியா இந்த உறுதியான வேண்டுகோளை அவரிடம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் அரச படைகளால் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுவரும் நிலையில் இது தமிழகத்தில் கடும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்துக் கட்சிகளும், இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் தலையீட்டை வற்புறுத்தி வந்த நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதலமைச்சரை சந்திக்கவிருந்தார்.

இந்த நிலையில், லண்டனிலிருந்து, இந்தியத் தலைவர்களுடனான முன்னேற்பாடற்ற சந்திப்புக்காக நேற்று முன்தினம் இரவு புதுடில்லிக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களைச் சந்தித்தார்.

இதன்போதே, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையென்ற பெயரில் அரச படைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இந்தியத் தலைவர்கள் மிக விநயமாகவும் அதேநேரம், மிக உறுதியாகவும் தெரிவித்ததாக டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுக்காலை பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரைச் சந்தித்ததுடன் அங்கிருந்து இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னர் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துணை வெளிவிவகார அமைச்சர் ஈ. அகமட்டையும் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை விளக்கிக் கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, விடுதலைப் புலிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தாலும் இனப் பிரச்சினைக்கு சமாதான ரீதியிலேயே தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணப்பட முடியாதெனவும், சர்வகட்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வொன்றே காணப்பட வேண்டுமென்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் சமரவீர, பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், எம்.கே. நாராயணனிடமும் தெரிவித்தார்.

மிக நீண்ட காலமாக நீடித்து நிலைத்து நிற்கும் இந்தப் பிரச்சினைக்கு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்தி தீர்வு காண வேண்டுமென்பதே தங்களது நோக்கமென்றும், இந்தப் பிரச்சினைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணப்பட முடியாதென்பதே ஜனாதிபதியினதும் இலங்கை அரசினதும் நிலைப்பாடெனவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை வலியுறுத்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வொன்றைக் காண தாங்கள் ஒருபோதும் தயாரில்லையென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் முழுமையாகக் கடைப்பிடிப்பதுடன் அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடனும் இன நல்லுறவுக்கு பாதிப்புகள் ஏற்படாத விதத்திலும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயம் தொடர்பாக இலங்கை ெவளிவிவகார அமைச்சு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாரம்பரியத்தை பேணும் நோக்குடன் அமைந்த அமைச்சரின் பயணத்தில் சமாதான முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

விடுதலைப் புலிகளால் மோசமான தூண்டுதல்களும் வன்முறைகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பினும், அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளதுடன் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாக்கும், இலங்கையின் சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை காண்பதில் அரசாங்கத்தின் கடப்பாட்டை ஜனாதிபதி மிகவும் உறுதிப்படுத்தியிருப்பதாக இந்தியப் பிரதமரிடம் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களினதும் நாட்டினதும் பாதுகாப்பை பேணும் அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்ளுமென்று அமைச்சர் சமரவீர இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சர்வகட்சி மாநாடு சம்பந்தமான விடயங்களையும் அமைச்சர் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் அரசாங்கத்தினதும் உதவி வழங்குநர்களினதும் கணிசமான நிதியால் வடக்கு மற்றும் கிழக்கில் இடம் பெறும் அபிவிருத்தி பணிகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.