Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கு தண்டனை கைதிகள் 4 பேரும் வீரப்பனை பார்த்தது கூட இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 பேர் பலியான வழக்கில்
தூக்கு தண்டனை கைதிகள் 4 பேரும் வீரப்பனை பார்த்தது கூட இல்லை
 

 

 

ஈரோடு : கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரலில் கர்நாடகா போலீஸ் வேனை வெடிகுண்டால் சிதறடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிலேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.  இந்நிலையில், தமிழக , கர்நாடக அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட எல்லையோர கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாநாடு நேற்று ஈரோட்டில் நடந்தது. இதில் செய்தியாளர்களிடம் 4 பேரின் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:

 

தூக்கு கைதி மீசை மாதையன் மகள் அம்மாசி (30): கர்நாடகா அதிரடிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்துவிட்டு அனுப்புவதாக கூறி என் தந்தையை கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் கேம்பிற்கு அழைத்து சென்றார்கள். வீரப்பனுக்கு அரிசி, பருப்பு கடத்தி கொடுத்ததாக முதலில் வழக்கு போட்டார்கள். ஜாமீனில் வந்த மீசை மாதையன் தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட்டு வந்தார். இச்சம்பவம் நடந்து 5 மாதம் கழித்து தான் பாலாற்றில் குண்டு வெடித்து 22 பேர் இறந்தனர். இச்சம்பவத்தின் போது எங்கள் ஊரில்தான் எனது தந்தை  இருந்தார். உண்மையில் வீரப்பனை என் தந்தை பார்த்தது கூட கிடையாது. எனது அண்ணன் மாதேசை 1989ம் ஆண்டு சத்தியமங்கலம் அதிரடிப்படை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

 

சைமன் அண்ணன் ஜெயராஜ் (57): எங்களது சொந்த ஊர் கொள்ளேகால் அருகே ஒட்டர்தொட்டி. எனது தம்பி சைமனுக்கு திருமணமாகவில்லை. நாங்கள் வீரப்பனை கண்ணால் கூட பார்த்ததில்லை. கடந்த 1993ம் ஆண்டு கர்நாடகா போலீசார் கைது செய்தபோது சைமனுக்கு 30 வயது. தற்போது 53 வயதாகிறது. இளமை காலத்தை ஜெயிலிலேயே கழித்து விட்ட சைமன் எந்த பாவமும் அறியாதவன்.

ஞானப்பிரகாசத்தின் மனைவி செல்வமேரி (46): கடந்த 1993ம் ஆண்டுக்கு முன்பு நாங்கள் பயன்படுத்தி வந்த நிலத்தில் வீரப்பனின் பழைய கூட்டாளி ஒருவர் விவசாயம் செய்து வந்தார். அவரை பாதிரியார் வில்சன் டிசோசா, அனுப்பிவிட்டார். அந்த நபர் தற்போது கர்நாடகா மாநிலம் கவுதள்ளியில் வசித்து வருகிறார். அவர் தான் எங்கள் மீது கொண்ட பொறாமையால் கர்நாடகா அதிரடிப்படைக்கும், போலீசுக்கும் 1993ம் ஆண்டுகளில் மொட்டை பெட்டிஷன் போட்டு எங்களை வீரப்பன் கூட்டாளியாக சிக்க வைத்தார். வீரப்பனை நானோ, என் கணவரோ கண்ணால் பார்த்தது கூட கிடையாது.
என் மகள் பெரியநாயகி அம்மாள் காசநோயால் இறந்த போது அவரது உடலை பார்ப்பதற்கு கூட அவரை சிறையிலிருந்து வெளியே அனுப்பவில்லை. அதனால் என் மகளின் இறந்த உடலை மைசூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அங்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று என் கணவருக்கு காட்டிய பிறகே அடக்கம் செய்தேன். என் கணவர் சிறையில் இருந்த போதுதான் குண்டு வெடிப்பு சம்பவமே நடந்தது. போலீசாரின் ஜோடிப்பு வழக்கால் என் கணவர் இன்று தூக்கு தண்டனை கைதியாக நிற்கிறார்.

 

பிலேந்திரன் அக்கா அமலோர் பவமேரி (63): கொள்ளேகால் அருகே ராமாபுரம் அருகே மாட்டள்ளி தான் எங்களது சொந்த ஊர். என் தம்பி பிலேந்திரன் விவசாயம் பார்த்து வந்தான். எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட வேலையும் தெரியும். 1990ம் ஆண்டு கர்நாடகா போலீசார் அழைத்து சென்றார்கள். அவனுக்கும், வீரப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் வெடிகுண்டு சப்ளை செய்ததாக வழக்கு போட்டனர். மைசூர் மத்திய சிறையில் இருக்கும் ஒருவரால் எப்படி வெடிகுண்டு தயாரித்து கொடுக்க முடியும்? தமிழக அதிரடிப்படை எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் உண்மையை கூறும்படி கேட்டார்.
இச்சம்பவத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என் தம்பி கூறினான். ஆனால் அதற்கு பிறகுதான் வழக்கில் சிக்க வைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கைதிகளின் நிலை என்னவாகுமோ என்ற பீதியில் குடும்பத்தினர் பீதியில் உறைந்துள்ளனர்.

 

 

நன்றி தினக ரன்.

Edited by நிலாமதி

இன்னும் தீராத சந்தேகம்...
வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..

- முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.