Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடைபயணத்தின்போது வைகோவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார்.

அப்போது, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், மதுவிலக்கு அமல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் முதல்வர் ஜெயலலிதாவிடம் வைகோ விளக்கியதாக தெரிகிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இருவரும் சந்தித்துள்ளது பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடைசி வரை காக்க வைத்து கடுப்பேற்றி கூட்டணியை விட்டு வைகோவை வெளியேற்றியது அதிமுக என்பது நினைவிருக்கலாம். அதனால் அதிருப்தியுள்ள மதிமுக தேர்தலிலேயே போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

For fotoes

http://tamil.oneindia.in/news/2013/02/19/tamilnadu-jaya-meets-vaiko-on-his-padayathra-170101.html

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது.... வைகோ தொடர்ந்தும்.. தனது ஆதரவை ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தும்.... சட்டசபைத் தேர்தல் நேரம் ம.தி.மு.க.வை கண்டுகொள்ளாமல் விட்டது, மாபெரும் துரோகம். இப்போ... சந்தித்து, என்ன பிரயோசனம்.

 

19-viko-jaya1-600.jpg

 

படம்: நன்றி தற்ஸ்தமிழ்.

ஜெயலலிதா தமிழுக்கு பிரயோசனமில்லாத ஆள். ஆனால் கருணாந்தி  உலகத்தமிழரையே அழிக்கும் துரோகி. முதல் படி ஜெயலலிதாவுடன் திரும்ப இணைய வேண்டுமாக இருந்தால் இணைந்து கருணாநிதியை முழுவத்தாக விழுத்த வேண்டும். அதன் பின்னர் தமிழ் நாட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும். (அண்ணா துரை மாதிரி அதீத பலத்துடன் எதிர்கட்சிகளை துலைத்து கட்டிவிடக்கூடாது.  அதுதான் தி.மு. க. கேடுகெட்ட கட்சியாக மாற இடம் அளித்தது.) நல்லதொரு ஆளும் கட்சியை அமைத்து தமிழருக்கு வேண்டிய அரசியல் செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறீர்களா வைகோ...? ஜெயலலிதா: வைகோ நல்லா இருக்கிறீர்களா? வைகோ: ஆமாம்மா, நான் நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க? ஜெயலலிதா: எங்க ஊருக்கு (சிறுதாவூர்) இல்ல வந்து இருக்கீங்க? வைகோ: ஆமாம் அம்மா.

உங்களது கோரிக்கை என்ன? ஜெயலலிதா: ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கோரிக்கை என்ன? வைகோ: பூரண மதுவிலக்கு தான் எங்கள் கோரிக்கை.

உங்க அம்மா, ஒய்ப், குழந்தைகளைக் கேட்டதா சொல்லுங்கள் ஜெயலலிதா: உங்களது அம்மா, ஒய்ப், பிள்ளைகளை கேட்டதாகக் சொல்லுங்கள். அவர்களை நலம் விசாரித்ததாக சொல்லுங்க. வைகோ: நன்றி. அம்மா உங்களுக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டுகள் நலமோடு வெற்றிகரமாக வாழ வாழ்த்துகிறேன். 100 ஆண்டுகள் கடந்து வாழ வாழ்த்துகிறேன்.

நின்று நலம் விசாரித்ததற்கு நன்றி ஜெயலலிதா: ரொம்ப நன்றி. போய்ட்டு வருகிறேன். வைகோ: நாங்கள் நடந்து வருவதை பார்த்து காரை நிறுத்தி நலம் விசாரித்ததற்கு மீண்டும் நன்றி. இவ்வாறு இருவரும் உரையாடினார்கள்.

புதிய அரசியல் நாகரீகம் இந்த சந்திப்பு குறித்து பின்னர் வைகோ கூறுகையில், அரசியலில் வேறுபட்டிருந்தாலும், கூட்டணியில் இல்லா விட்டாலும் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது நலம் விசாரிக்கிற உன்னதமான அரசியல் நாகரீகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்றைக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். அது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

கூட்டணி அமையுமா? இந்தக் கேள்விக்கு வைகோ எதிர்மறையாக பதிலளித்தார். அதாவது, கூட்டணியில் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் மதித்து நலம் விசாரிக்கும் உயர்ந்த பண்பாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று வழிகாட்டியிருக்கிறார். இந்த சந்திப்பை அரசியல் ரீதியாக சிந்திப்பதே இந்த நாகரீகத்தை கொச்சைப்படுத்திவிடும் என்றார் வைகோ.

வைகோ கோரிக்கைக்குப் பதிலளிக்காத ஜெ. அதேசமயம், எனது கோரிக்கை பூரண மது விலக்கு என்று வைகோ கூறியபோது அதுகுறித்து ஜெயலலிதா எந்த பதிலையும் தரவில்லை. மாறாக வேறு டாப்பிக்குக்கு அவர் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோ, ஜெயலலிதா சந்திப்பு நேற்று தமிழகத்தில் பெரும் ஆச்சரியமாக பேசப்பட்டது, பார்க்கப்பட்டது. இந்த ஆச்சரியமும், வியப்பும் கூட்டணிக்கு வித்தாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.