Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் ஜனாதிபதி உலகப் போர்க்குற்ற நீதிமன்றில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐவரி கோஸ்ற் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உலகப் போர்க்குற்ற நீதிமன்றில்  நீதிபதிகள் முன் இன்று (செவ்வாய்க் கிழமை 19.02. 2013 )தோன்றினார்.


 

உலகப் போர்க்குற்றத்திற்கான நீதிமன்றம் ஒல்லாந்து நாட்டின் டென்ஹெக் நகரில் இயங்கிவருகின்றது.

இந்த நீதிமன்றின் முன் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமைமீறல் போன்ற  குற்றங்கள்  சாட்டப்பட்ட நிலையில் முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 

ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இவராவார்.


 

லௌரன் க்பாக்போ  ஐவரி கோஸ்ட் என்ற ஆபிரிக்கநாட்டின் 

சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி.


2010 ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்ற

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கிளர்ச்சியாளர்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைகளின்போது தனது ஆதரவாளர்கள் மூலம்

 

166 மக்களைக் கொலை செய்யத் தூண்டியதாகவும்  

34 பெண்கள் மீது   பாலியல் வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாகவும் 

94 மக்களை சித்திரைவதை செய்யத் தூண்டியதாகவும் க்பாக்போ மீது

உலகப் போர்க்குற்றவியல் நீதிமன்றில் குற்றவியல் பிரேரணை வாசிக்கப்பட்டது.


கார்த்திகை மாதம் 2010 ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐவரி கோஸ்ட் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தில் சித்திரை மாதம் 2012 ம் ஆண்டுவரை 3000 மக்கள் கொல்லப்பட்டனர் என அந்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 

லோறன் க்பாக்போ மீதான குற்றங்களுக்கான போதிய ஆதாரங்கள் உள்ளதா என இந்த நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற இருக்கின்றன.


2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இவர் தோல்வி அடைந்த நிலையிலும்

தனது பதவியை விட்டுக் கொடுக்காமல் 2012 வரை ஐவரி கோஸ்டின் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்த க்பாக்போ சித்திரை 2012 இல் பிரான்ஸ் நாட்டின் படையினரால்   கைது  செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் உலகக் குற்றவியல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court, பிரெஞ்சு: Cour Pénale Internationale) உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது. ஜூலை 2008 கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.


 

இன்று வரை பன்னாட்டு நீதிமன்றம் தார்ஃபூர் பிரச்சனை, வடக்கு உகாண்டாவின் பிரச்சனை, கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கில் நடந்த பிரச்சனை, மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பிரச்சனை ஆகிய நாலு நடவடிக்கைகளில் சோதனை செய்துள்ளது. பன்னிரண்டு நபர்களுக்கு கைது ஆணைப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.


 

விக்கிபீடியா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.