Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சட்டமீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்துவது அவசியம்! - டேவிட் கமரூன்

Featured Replies

சர்வதேச சட்டமீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்துவது அவசியம்! - டேவிட் கமரூன்


                                             5879e28f-1b72-4fee-8f6b-3d8805c7070f1.jp

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை பல
தரப்பிலிருந்தும் வலுத்துவரும் நிலையில், மனிதாபிமான சர்வதேச சட்டமீறல்கள்
தொடர்பாக இலங்கை முறையான விசாரணைகளை மேற்கொண்டு இவற்றுக்குப்
பொறுப்பானவர்களை நீதிக்குமுன் நிறுத்தவேண்டும் என்று பிரித்தானியாவின்
பிரதமர் டேவிட் கெமரூன் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், பிரச்சினைகளிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து
செயற்படுமாறு இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.


பிரித்தானிய தலைநகர் லண்டனில் நேற்றுப் புதன்கிழமை உலகத் தமிழர்
பேரவையின் மூன்றாவது வருடாந்த மாநாடு நடைபெற்றது. அதையொட்டி தாம்
விடுத்துள்ள செய்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:


நீதி, சட்டமுறைமை ஆகியவற்றை மூலாதாரங்களாகக்கொண்டே சமாதானம்
எட்டப்படவேண்டும். அரசியல் தீர்வு, போரால் பாதிக்கப்பட்ட
அனைவருக்குமிடையிலான நல்லிணக்கப்பாடு ஆகியவையும் சமாதானத்தை எட்டுவதற்கு
அனுசரிக்கப்படவேண்டும்.


குறிப்பாக, மனிதாபிமான சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை முறையான
விசாரணைகளை மேற்கொண்டு இவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்குமுன்
நிறுத்தவேண்டும். இது அவசியமானதொன்று.


புலம்பெயர்ந்த தமிழர்கள், பிரிட்டனில் தேசிய நீரோட்டத்துக்கு முக்கிய
பங்களிப்பு செய்துள்ளனர். இது மறுக்க முடியாது என்று பிரித்தானியப்
பிரதமரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, பிரித்தானிய சக்திவளத்துறை அமைச்சர் எட்டேவி பிரத்தியேக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.


இச்செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:


இலங்கையில் போரின் இறுதிக்கட்ட மாதங்களில் இடம்பெற்ற பயங்கரச்
சம்பவங்களுக்குப் பின்னர் இலங்கை நம்பத்தகுந்த பொறுப்புக்கூறல்
கடப்பாடுகளையும், நல்லிணக்கப்பாட்டுக்கான முன்னெடுப்புகளையும்
மேற்கொள்ளுமென பிரித்தானியா நம்புகின்றது.


இவற்றின் வாயிலாக இலங்கையில் நீண்டு நிலைக்கக்கூடிய சமாதானம் வேரூன்ற
வழிசமைக்கப்படவேண்டும். இவற்றிற்கான எங்களின் நம்பிக்¬கைகள் இதுவரை
நிறைவுசெய்யப்படவில்லை.


ஐ.நா. நிறுவனங்கள், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆணைக்குட்பட்ட
அமைப்புகள், சர்வதேச மனித உரிமை காப்பகங்கள், சனல் 4 செய்திகள் ஆகியவை
போரின்போது இரு தரப்புகளுமே போர்க்குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான
குற்றங்களும் இழைத்துள்ளமைக்கான சாட்சியங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி
வருகின்றன.


எது எப்படியிருப்பினும், போர் குறித்தும், பலியானோர் குறித்தும்
நம்பத்தகுந்த உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. பலியானோரில்
பெரும்பாலானோர் தமிழர்களாவர். அவர்களது குடும்பங்களுக்கு நீதி
கிடைக்கவேண்டும்.


இதன்பொருட்டே போர் நடத்தப்பட்ட விதம் குறித்து சுயாதீனமான சர்வதேச
விசாரணை நடத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையை நான் ஆதரிக்கின்றேன் என
பிரித்தானிய சக்திவளத்துறை அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=5879e28f-1b72-4fee-8f6b-3d8805c7070f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.