Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது - சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்! - செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!!

Featured Replies

அரசால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது - சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்! - செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!!

                                             b318646a-3b8a-4765-832a-85f294fc3b531.jp

                                        

'இலங்கையில் நல்லிணக்கம் இல்லை என்பதையும், தமிழர்களுக்கு

சிங்களவர்களால் நீதி கிடைக்காது என்பதையும் சர்வதேச நாடுகள் அறிந்து

கொண்டமையால்தான் இன்று ஜெனிவா அரங்கில் இலங்கை அரசு அவமானப்பட்டுக்

கொண்டிருக்கின்றது. எனவே, நல்லிணக்கம் பற்றி இனவாதக் கட்சிகள் கத்தினாலும்

எவ்வித நன்மையும் இல்லை. தமிழர்களுக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்.'

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா சென்று ஓரங்க

கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், 'சிங்கள பௌத்த மக்களின்

ஆசீர்வாதம் கிடைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு நீதியின் வாசல்

திறக்கப்படும். நாட்டைக்  கூறுபோடும் நோக்கில் ஜெனிவாவில் கூட்டமைப்பு

காலடி எடுத்துவைக்குமானால், இங்கு நல்லிணக்கத்துக்கான கதவு இழுத்து

மூடப்படும்' என்று கடும்போக்குடைய சிங்களத் தேசியவாத இயக்கம் ஒன்று

தெரிவித்திருந்தது.

ஜெனிவா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில்

இடம்பெறும் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன் ஆகியோரே

இது தொடர்பில் தமது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதன்  

'நல்லிணக்கம் என்றால் என்ன? என்று இனவாதக் கட்சிகளுக்கு மட்டுமல்ல,

அரசுக்கும் கூட தெரியவில்லை. வடக்கு, கிழக்கில் வீதிகளைப் புனரமைப்பதும்,

புதிதாக வீதிகளை அமைப்பதும்தான் நல்லிணக்கம் என்று அரசு எண்ணுகின்றது.

தமிழன் இந்த நாட்டில் கெடுபிடிகளின்றி எப்போது சுதந்திரமாக வாழ்கின்றானோ

அப்போதுதான் நல்லிணக்கம் என்பதற்கு அர்த்தம் இருக்கும். ஆனால், தமிழர்

தாயகத்தில் அபிவிருத்தியை மேற்கொள்கின்றோம் என்று ஒரு புறத்தில் கூறிவரும்

அரசு, மறுபுறத்தில் படையினரை ஏவிவிட்டு தமிழ் மக்களைக் கண்டபடி

தாக்குகின்றது. அத்துடன், தமிழர்  நிலப்பரப்புகள் நாளுக்குநாள்

சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நல்லிணக்கம்

எப்படி சாத்தியமாகும்? சிங்களவர்களை எப்படி தமிழர் நம்புவது? ஆனால், நாம்

சிங்களவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை.

இதனால்தான் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் வருகின்றன. எனவே,

நல்லிணக்கம் பற்றி இனவாதக் கட்சிகள் கத்தினாலும் எவ்வித நன்மையும் 

ஏற்படப்போவதில்லை. சர்வதேச நாடுகளே தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும்.

இதனை எதிர்பார்த்துத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா

செல்கின்றது. அரசும், இனவாதக் கட்சிகளும் நினைப்பதுபோன்று இலங்கைக்குத்

துரோகம் செய்ய நாம் ஜெனிவா போகவில்லை. நாம் சிங்களவர்களை எதிரிகளாகப்

பார்க்கவில்லை. ஆனால்,  அவர்கள் தீர்வைத் தருவார்கள் என்று நாம் 

நம்பவில்லை.

60 வருடங்களுக்கு மேலாக தீர்வை எதிர்பார்த்திருந்த தமிழருக்கு

உள்நாட்டில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை; நீதி கிடைக்கவில்லை. அவல வாழ்வே

வாழ்கின்றோம். இந்நிலையில், தற்போது தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பினரும் சர்வதேச சமூகத்தை நாடியுள்ளனர்' என்று தெரிவித்தார்

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

பா.அரியநேத்திரன்

'நல்லிணக்கத்துக்கு வரைவிலக்கணம் தெரியாதவர்கள் நல்லிணக்கம் பற்றி

பேசுவது வேடிக்கையாக உள்ளது. அரசும், இனவாதக் கட்சிகளும் முதலில்

நல்லிணக்கத்திற்கு வரைவிலக்கணத்தைப் படிக்கட்டும்.

யுத்தம் முடிவடைந்தால் சமாதானம் என நினைக்கின்றது அரசு. அதேவேளை,

அபிவிருத்தி என்றால் நல்லிணக்கம் என்று எண்ணுகின்றது அரசு. இதுதான் அரசின்

நிலைப்பாடு. ஆனால், தமிழினம் எதை எதிர்பார்த்துப் போராடுகின்றதோ அதை

படிப்படியாக வழங்க அரசு முன்வந்தால்தான் சமாதானம் ஏற்படும்;. நல்லிணக்கம்

மலரும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப்

பேசி ஒரு தீர்வைப் பெறவே தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா

செல்கின்றது.  நாட்டைக் கூறுபோடும் நடவடிக்கையில் ஈடுபட நாம் அங்கு

செல்லவில்லை.

சிங்களவர்களை தமிழர்கள் ஒருபோதும் எதிரிகளாகப் பார்க்கவில்லை. சிங்கள

மக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தையே தமிழ் மக்கள்

எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால், சிங்களவர்களோ நம்மை எதிரிகளாகப்

பார்க்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள்

ஆகியோர் திட்டமிட்டுப் படையினாரால் தாக்கப்படுகின்றனர். அத்துடன்,

தமிழரின் பூர்வீக நிலங்கள் உயர்பாதுகாப்பு என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு

வருகின்றன. இதைத் தட்டிக் கேட்டு அஹிம்சை ரீதியில் போராடும் தமிழ் மக்கள்

மீது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை அனுப்பித் தாக்குதல் நடத்துகின்றது

அரசு.

அதேவேளை, சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள், முன்னாள் போராளிகள்

தொடர்ந்து தாக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், நல்லிணக்கம் எப்படி

சாத்தியமாகும்?

முதலில் அரசும், இனவாதக் கட்சிகளும் வன்முறைகளைத் தூண்டும்

நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும். அத்துடன், வன்முறைகளை வரவழைக்கும்

கருத்துகளைக் கூறுவதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும்' என்று தெரிவித்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

பா.அரியநேத்திரன்.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=5879e28f-1b72-4fee-8f6b-3d8805c7070f

இதையும் பார்க்கவும்:

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117936&hl=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.