Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: வெளிச்சத்திற்கு வரும் இரத்த சாட்சியங்கள் - பிரித்தானிய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

theeconomist_logo.jpg

இதனால் சிறிலங்காவானது சீனாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேலும் நெருக்கமடையச் செய்ய விரும்பலாம். எந்தவொரு விடயத்திலும் சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனமும் அழுத்தமும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே உண்டுபண்ணும். 

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக்கொண்ட ஊடகமான The Economist வெளிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற போதிலும் கூட இங்கு சமாதானம் என்பது இன்னமும் எட்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்காவில் போர் மீறல்கள் இடம்பெறவில்லை என அதன் அதிகாரம் மிக்க தலைவர்கள் குறிப்பாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உறுதி தெரிவித்துள்ள போதிலும் கூட, தற்போது 2009ல் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பான புதிய சான்றுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

வரும் மாதம் அதாவது மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா தலைமையில் சிறிலங்கா அரசாங்கம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நலன் பேணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது. இத்தீர்மானத்தை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த ஆண்டில் முன்வைக்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது போன்று தற்போதும் இதனை ஆதரிக்கவுள்ளன. 

சிறிலங்கா அதிபர் மகிந்த மற்றும் பாதுகாப்புச் செயலரும் அதிபரின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போன்றோரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் போரின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களைப் புரிந்ததற்கான புதிய ஆதாரங்களை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா அரச படைகள் போர் முடிவடைந்த பின்னரும் கூட தமிழ் மக்களுக்கு எதிராக சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றமை ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

சரணடைந்த தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காட்சிகளை பிரித்தானிய தொலைக்காட்சி சேவையான சனல் 04 ஏற்கனவே ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது. 2009ல் யுத்தம் முடிவடைந்த போது இவை பதிவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திய ஊடகம் முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் சரணடைந்தோரைக் கொல்வதற்கான கட்டளை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படவில்லை எனவும் தனது படைகள் 'இனப்படுகொலையை' புரியவில்லை எனவும் ஒரு ஆண்டுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அறிவித்திருந்தார். 

போரின் இறுதிக்கட்டத்தில் 10,000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் 1000 பேர் வரை காணாமற் போனதாகவும் தமிழ் அரசியற் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவின் வடக்கில் மக்களின் புதைகுழிகள் பல இன்னமும் வெளிப்படுத்தப்படாது உள்ளதாகவும், இங்கு பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் அரசியற் தலைவர்கள் கூறுகின்றனர். 

தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான 12 வயது நிரம்பிய பாலச்சந்திரன் பிரபாகரன் சிறிலங்கா இராணுவப் படைகளின் காவலில் வைக்கப்பட்டு பின்னர் இறுதியில் இந்தப் படைகளால் படுகொலை செய்யப்படும் புதிய காட்சிகளைக் கொண்ட புதிய காணொலி ஒன்றை சனல் 04 தொலைக்காட்சி சேவையானது தற்போது இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் திரையிடவுள்ளது. 

12 வயது நிரம்பிய பாலச்சந்திரன் என்ற சிறுவன் முதலாவது ஒளிப்படத்தில் பீதியுடன் காணப்படுகிறார். இரண்டாவது ஒளிப்படத்தில் அவரைச் சுற்ற சிறிலங்கா இராணுவப் படையினர் காவல் காக்க அந்தச் சிறுவன் ஏதோ சாப்பிடுகிறார். இறுதி ஒளிப்படத்தில் இந்தச் சிறுவன் நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களுடன் கொல்லப்பட்டு கிடக்கிறான். 

இந்த ஒளிப்படங்கள் படுகொலை இடம்பெற்ற இடத்தில் நின்ற சிறிலங்காப் படையினரால் தமது கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்டவை போன்று தெரிகின்றன. இந்த ஒளிப்படங்கள் மூலம் இந்தச் சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இந்தச் சிறுவனைப் படுகொலை செய்வதற்கான கட்டளை இராணுவத்தின் உயர்மட்டத்திலிருந்தா அல்லது அரசியலின் உயர்மட்டத்திலிருந்தா வழங்கப்பட்டது என்பதை அறிவது நியாயமானது. 

சிறிலங்கா அரசாங்கம் சனல் 04 தொலைக்காட்சி சேவையின் புதிய காணொலியை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடுவதை தடுக்க முயற்சித்தாலும் கூட, இது ஜெனீவாவில் திரையிடப்படும். 

சிறிலங்காவில் இடம்பெறும் ராஜபக்சாக்களின் சர்வதிகார ஆட்சி தொடர்பாக அனைத்துலக நெருக்கடிகள் குழு தனது புதிய அறிக்கையில் விவாதித்துள்ளது. சிறிலங்காவில் வன்முறைகள் தொடரப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளான இராணுவம், காவற்துறை, புலனாய்வு அமைப்புக்கள் போன்றன அங்கு வாழும் தமிழ் மக்களை விசாரணைகளின்றி தடுத்து வைத்தல், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுதல், துன்புறுத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் என்பன மேற்கொள்ளப்படுவதாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனையோர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களைக் கொண்டு பெப்ரவரி 26 அன்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதில் பாதிக்கப்பட்ட 75 பேரால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுள் பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சிறிலங்கா பாதுகாப்பு படையால் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, சிகரெட்டால் உடல்களில் சுடப்பட்டு நரக வேதனையை அனுபவித்த 31 பேரின் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு மற்றம் வடக்கில் வீதியால் சென்று கொண்டிருக்கும் மக்கள் பலர் வெள்ளைவான் கும்பலால் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சிறிலங்காவின் அதிகார பீடம் மிகக் கோபத்தோடு நிராகரித்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்படாது தடுப்பதில் ராஜபக்ச அரசாங்கம் தோல்வியடையலாம். இதனால் சிறிலங்காவானது சீனாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேலும் நெருக்கமடையச் செய்ய விரும்பலாம். எந்தவொரு விடயத்திலும் சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனமும் அழுத்தமும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே உண்டுபண்ணும். 

சிறிலங்காவின் உள்நாட்டில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் ஊடகங்கள், மத அமைப்பக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற் சங்கங்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்க்கட்சி அமைதிகாத்து வருகிறது. பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் போரை வெற்றி கொண்டு, நாட்டில் மிகப் பலமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியதற்காக ராஜபக்சாக்கள் தொடர்ந்தும் போற்றப்படுகிறார்கள். சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் தமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான அனைத்துலக சதி என பெரும்பான்மை சிங்கள மக்கள் கருதுகின்றனர். 

இருப்பினும், ஏமாற்றகரமான மாற்றத்தை எவரும் எதிர்பார்க்க முடியாது. பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், நவம்பரில் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. இதனை இந்த ஆண்டு சிறிலங்காவில் வைப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் அதிகம் வாழும் இந்தியாவிலுள்ள தமிழ் அரசியற் கட்சிகள் சிறிலங்காவில் வாழும் தமது சகோதர உறவுகள் மீது இந்தியா கரிசனை காட்ட வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர். 

இந்நிலையில் இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு நாடுகள் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாடு இடம்பெறுவதை எதிர்த்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதேவேளையில் இந்த உச்சிமாநாட்டை தனது நாட்டில் நடாத்துவதன் மூலம் அனைத்துலகத்தின் புகழையும் பாராட்டையும் பெற்றுக் கொள்ள முடியும் என ராஜபக்ச குடும்பம் கருதுகிறது. கிடைக்கப் பெற்றுள்ள சிறிலங்கா மீதான போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தெளிவான வெளிப்படையான ஆதாரங்கள் சிறிலங்காவின் நற்பெயருக்கு மேலும் கறை ஏற்படுத்துகின்றன.

 

http://www.puthinappalakai.com/view.php?20130228107872

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.