Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தூதரகத்தில் நாளை முற்றுகைப் போராட்டம்: வைகோ, பழ.நெடுமாறன்.

Featured Replies

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நாளை திங்கள்கிழமை   முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்கள் கூறியது: ஈழத் தமிழர்களின் விடியலை வலியுறுத்தி மார்ச் 4-ம் தேதி ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதற்குத் தமிழகத்தின் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் லயோலா கல்லூரி அருகே காலை 11 மணியளவில் திரண்டு கருப்புக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம்.

5 கோரிக்கைகள்: ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது இனப்படுகொலைதான் நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 5 விஷயங்களை ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த உள்ளதாகக் கூறினர்.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13072:vaiko-nedumaran&catid=36:tamilnadu&Itemid=102

  • தொடங்கியவர்

சென்னையில் சிறீலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ பழ நெடுமாறன்
கொளத்தூர் மணி வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பத்திற்க மேற்பட்ட
தமிழ்அமைப்புக்கள் ஒன்றிணைநந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

ஜெனிவாவில்
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற்று வரும் நிலையில்
பாலச்சந்திரன் மகன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரம்
வெளியாகியிருப்பது சிறீலங்கா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நாவில்
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தியும் இலங்கை இறுதி கட்டப் போரின் போது இன அழிப்பில் ஈடுபட்ட
சிறீலங்கா படையினர் மீதும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராஜபக்ச மீதும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழர் வசிக்கும் பகுதியில் பொது வாக்கெடுப்பு
நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் சிறீலங்கா துணை தூதரகத்தை
முற்றுகையிட்டு போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள்
ஈடுபட்டன.

இந்தப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உலகத்
தமிழர் பேரவைத் தலைவர் பழ நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். தூதரகத்தை
முற்றுகையிடுவதற்கு முன்னரே பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி வைகோ
உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.சிறீலங்கா துணை தூதரகம் முற்றுகைப்
போராட்டம் ஒரு புறம் இருக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்
கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்புப்
போராட்டம் நடைபெறுகிறது.வழக்கறிஞர்கள் வலிலயுறுத்தல் தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர்கள்
நீதிமன்ற வளாகத்தின் இரு வாயில்களையும் பூட்டி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்க வேண்டும்.  ராஜபக்ச போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம்
முன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு
ஐ.நா. படைகள் அனுப்ப வேண்டும். இலங்கையின் வட பகுதியில் பொது வாக்கெடுப்பு
நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை மதுரை வழக்கறிஞர்கள்
முன்வைத்துள்ளனர்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13100:nedumaran-and-vaiko&catid=36:tamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

nedumaran.jpg
சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற பழ.நெடுமாறன உட்பட ஆயிரக்கணக்கானோர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் 17 கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலிருந்து காலை 11 மணிக்கு ஊர்வலமாகச் சென்று முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உட்பட 5 கோரிக்கைகள் முன்வைத்தே இந்த போராட்டத்தை நடத்தினர்.

கருப்புக் கொடி ஏந்தியவாறு இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறே தூதரகத்தை நோக்கி சென்றனர். 

அப்போது இலங்கை தேசியக் கொடி மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் உருவபொம்மைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. 

இந்திலையில், முற்றுகையிட சென்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்

தூதரக அதிகாரி கருத்து

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் தொடர்பில் சென்னையிலுள்ள தூதரகத்தின் உயரதிகாரி தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் தூதகரகத்திற்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்றும் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தூதரகத்திலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.