Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லிக்கு மீண்டும் ஒருமுறை ஷாக் ! காங்கிரஸை எச்சரித்த ஜி.கே. வாசன்.

Featured Replies

டெல்லிக்கு மீண்டும் ஒருமுறை ஷாக்
ட்ரீட்மென்ட் கொடுக்கத் தயாராகி விட்டனர் வாசன் ஆதரவாளர்கள். இளைஞர்
காங்கிரஸ் தலைவர்  பதவியில் இருந்து யுவராஜா நீக்கப்பட்டதே இந்தக்
கோபத்துக்குக் காரணம்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின்  தீவிர
ஆதரவாளரான யுவராஜா மீதான நடவடிக்கை, வாசன் ஆதரவாளர்களை ஆத்திரம் அடைய
வைத்துள்ளது. கடந்த 2-ம் தேதி, ஆதரவா ளர்களை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது
வீட்டில் சந்தித்து, பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் வாசன். அவரது
வீட்டில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்சிக்காரர்கள் கூடுவது வழக்கம்தான்.
ஆனால், அன்று திரண்டு வந்திருந்தனர்.

22 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், 4
முன்னாள் எம்.பி-க்கள், 20 மாவட்டத் தலைவர்கள் உட்பட இளைஞர் காங்கிரஸ்
நிர்வாகிகளும் ஏராளமானோர் வாசன் வீட்டில் குவிந்தனர். வீட்டு வாசலில்
நாற்காலி போட்டு அமர்ந்த வாசன், திரண்டு வந்திருந்த தொண்டர்களை ஒவ்வொருவராக
அழைத்துக் குறைகளைக் கேட்டார். அதன்பிறகு, முன்னாள் எம்.பி.,
எம்.எல்.ஏ-க்கள் என சில முக்கிய நிர்வாகிகளை வீட்டுக்குள் அழைத்து நீண்ட
நேரம் மனம்விட்டுப் பேசினார்.

 
வாசன்
வீட்டுக்கு வந்திருந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''கடந்த சில
மாதங்களாகவே சிலரின் பேச்சைக் கேட்டு கட்சித் தலைமை எங்களைப் புறக்கணித்து
வருகிறது. யுவராஜா இரண்டாவது முறையாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு
போட்டியிட்டதே மேலிடத்தில் உள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. அதையும்
மீறித்தான் யுவராஜா போட்டியிட்டார். தடைகளைத் தாண்டி வெற்றியும் பெற்றார்.
தமிழகத்தில் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருவரும் வாசன் ஆதரவாளர்கள்.
இதைத் தாங்கிக்கொள்ள முடியாத கார்த்தி சிதம்பரம் ஆதர வாளர்கள், மேலிடத்து
செல்வாக்கைப் பயன்படுத்தி அவரின் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டனர். யுவராஜா
தவறு செய்து இருந்தால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கட்டும்.
விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால், நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.
முதல்நாள், 'ராஜினாமா செய்’ என மொட்டையாக ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு,
மறுநாள் நீக்கம் என்று அறிவிக்கின்றனர். கேரளாவில் சூரியநெல்லி மாணவி
பலாத்கார வழக்கில், கட்சியின் இமேஜ் அதலபாதளத்துக்குச் சென்று விட்டது.
அதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் குரியனுக்கு எதிராக என்ன
கிழித்தனர்? எங்கள் அதிருப்தியை டெல்லிக்கு உணர்த்தவே, இன்று வாசன்
தலைமையில் கூடிப் பேசினோம். இது ஆரம்பம்தான். இனியும் சீண்டினால், தனி
இயக்கம் காணவும் தயங்க மாட்டோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ்
என்றால், த.மா.கா-தான் என்பது தேர்தல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.''
என்று கொந்தளித்தனர்.

கூட்டத்துக்கு வந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ.
ஒருவரிடம் பேசினோம். ''தமிழகத்தில் காங்கிரஸ் என ஒரு கட்சி இருக்கிறதா?
என்று கேட்கும் அளவுக்கு அது சவலைப் பிள்ளையாக இருந்த நேரத்தில், மூப்பனார்
ஐயா தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து அந்தக்
கட்சியை மேலும் வலுவாக்கியவர் எங்கள் வாசன். இதை அவர்களால் மறுக்க
முடியுமா? இப்போதைய சூழலில் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்து
விட்டனர். மாற்றத்துக்கும் தயாராகி விட்டனர். இன்று வந்திருந்த தொண்டர்கள்
பலரும், 'மரியாதை இல்லாத இடத்தில் நாம் எதற்காக இருக்க வேண்டும்? மீண்டும்
த.மா.கா-வை ஆரம்பித்துப் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவோம். அப்போதாவது
நமது அருமை டெல்லிக்குத் தெரியட்டும்’ என்று உணர்ச்சிவசப்பட்டனர். அவர்களை
அமைதிப்படுத்திய வாசன், 'தலைமை நம்மைப் புறக்கணிக்கவில்லை. யுவராஜா மீதான
நடவடிக்கை ராகுல் காந்திக்குத் தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்று
தெரியவில்லை. அவரைச் சந்தித்து இதுபற்றிப் பேசுகிறேன். பொறுமையாக
இருங்கள். யாரும் அவசரப்பட வேண்டாம்’ என்று அமைதிப்படுத்தினார்'' என்று
சொன்னார்.

யுவராஜா என்ன சொல்கிறார்? ''ஆலோசனைக் கூட்டம் குறித்து
எனக்கு எதுவும் தெரியாது. நான் அங்கே செல்லவும் இல்லை. எனக்கு ஆதரவாக
இவ்வளவு கூட்டம் இருக்கிறதே என்பதை நினைக்கும்போது, சந்தோஷமாக இருக்கிறது.
என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் உண்மை இல்லை என்பதை
நிரூபிப்பேன். யார் வந்தாலும், யார் போனாலும் எனக்குக் கவலை இல்லை.
எனக்குத் தலைவர் வாசன்தான். அவர் வழியில் நாங்கள் செயல்படுவோம்'' என்கிறார்
தீர்க்கமாக.

வாசன் தரப்பிலோ, ''ஒவ்வொரு சனிக்கிழமையும்
சத்தியமூர்த்தி பவனில் வாசன் தொண்டர்களை சந்திப்பது வழக்கம். இந்த வாரம்
சத்தியமூர்த்தி பவனுக்குப் பதிலாக வீட்டில் சந்தித்தார். மற்றபடி வேறு
முக்கியத்துவம் ஏதும் இல்லை'' என்கிறார்கள்.

ஆனாலும், ஆழ்வார்பேட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஜன்பத் ரோடு வரை கிடுகிடுக்க வைத்திருக்கிறது.
 http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13154:gk-vaasan&catid=5:business-general&Itemid=101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.