Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை

Featured Replies

அணு சோதனை நடத்தி வடகொரியா மீது நேற்றுஐ.நா. பொருளாதார தடைவிதித்தது.

 

கடந்த பிப்.12-ம் தேதி வடகொரியா மூன்றாவது முறையாக பையாங்யோங் நகரில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் ஒபமா உள்படசர்வதேச நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

 

நேற்று ஐ.நா.பாதுகாப்புக்கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் வடகொரியா மீது பொருளாதார தடைவிதிக்கும் 2094வதுதீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.பாதுகாப்புசபையில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளும் தீர்மானத்திற்கு

ஆதரவளித்தன.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%AA-%E0%AE%95-205600137.html

இலங்கை சிலவற்றை புரிந்து கொள்ளட்டும். சீனாவும், ரஸ்சியாவும் நண்பர்கள்தாம். ஆனால் பொருளாதார தடையிற்கு வாக்களித்தார்கள்.  

  • தொடங்கியவர்

இவ்வாறான ஒரு தடையை இலங்கை மேல் விதித்தால் .... மகத்தான மாற்றங்கள் வரும்.

இலங்கை மீது இந்தியா அழுதம் கொடுத்தால் இலங்கை சீனாவிடம் ஓடி விடும். அதேநேரம் சீனா இலங்கையை பிடிக்க வந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க ஒரே வழி இலங்கையை அணைத்துக்கொள்வது தான் என்று இதுவரை இந்தியா காட்டடியதெல்லாம் படப்பாயம் என்ற உண்மையை இன்று இலங்கை தானாக சொல்லி வைக்கிறது.

 

சீனா இனி தான் விரும்பியபடி இலகு கடனகள் தருகிறது என இலங்கையால் சொல்ல முடியாத நிலை இன்று வந்துவிட்டது. இதனால் இலங்கை ஓடிப்போய் வாசிங்டனின் காலில் விழுந்துவிட்டது. வல்லவன் கைக்கு புல்லும் ஆயுதம். 200 வருடங்கள் 50 மாநிலங்களை கட்டியாளும் அமெரிக்கா, 60 வருடம் சொந்த காலில் எழுந்து நிற்க தடுமாறும் 20 மானில இந்தியாவை விட ராஜதந்திர முதிர்ச்சி உள்ள நாடு என்பதைக் காட்டிவிட்டது

 

இந்தியாவின் உண்மை இல்லாத, நாடகத்தனமான பிராந்திய கொள்கையால் இன்று இலங்கை பிரச்சணையிலிருந்து இந்தியா வெளியேற்றி விட்டது. இனி அமெரிக்கா மரியாதைக்காக இந்தியாவின் சொற்களை கண்டு கொண்டால் உண்டு. இல்லையேல் இந்தியா வெளியே நிற்க இலங்கைக்குள் விசாரணை நடத்தத்தக்க பிடி சர்வதேச நாடுகளுக்கு கிடைத்துவிட்டது.

 

இனி இலங்கை மீது சர்வதேச பொருளாதார தடை வர இடமில்லை. ஒரு பீரங்கி குண்டை கூட வீணாக்காமல் வெறும் பீரங்கிகளை சுட்டு இலங்கையை லோரென்சோடி அல்மெயிடா பிடித்த கதை திரும்ப நிகழ்த்தப்பட்டுவிட்டது. வாயால் மட்டும்  உலகத்தின் மூன்றாம் வல்லரசின் ராஜதந்திய பாச்சா பலிக்காமல். முதலாம் வல்லரசின் ராஜதந்திரத்தால் விழுத்தப்பட்டுவிட்டது. இதை கணக்கு பார்த்துதான் அமெரிக்கா GSP + நிறுத்த மறுத்தது என்றுதான் இப்போது எடுத்துக்கொள்ள வேண்டும். இனி அமெரிக்கா பிரேரணைகள் ஊடாக பொருளாதா தடை கேட்கும் சாத்தியம் இல்லை( இது நமக்கு நன்மையா தீமையா தெரியாது)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

வடகொரியா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது

 

நேற்று வியாழன் ஐ.நா பாதுகாப்பு சபையில் வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதும், அந்த நாடு ஏறத்தாழ உலக மன்றில் தனித்து விடப்பட்டதும் தெரிந்ததே.


இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பழிவாங்கலுக்கு பதிலடியாக வடகொரியா இதுவரை தென்கொரியாவுடன் செய்து வைத்திருந்த போர்த் தவிர்ப்பு ஒப்பந்தத்தை கிழித்து குப்பையில் வீசியது.

 

கடந்த 1953ம் ஆண்டு இரண்டு கொரியா நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றின் மீது மற்றயது தாக்குதலை நடாத்தப் போவதில்லை என்ற ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது.

 

இப்போது வடகொரியா அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளதால் தென் கொரியா வடகொரியாவின் அணு குண்டு தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் நெருங்கியுள்ளது.

 

தம்மீதுமட்டும் வடகொரியா தாக்குதல் நடாத்தினால் தற்போது ஆட்சியில் இருக்கும் கிம் உங்கின் கூட்டமே வேரோடு அழிக்கப்படும் என்று தென்கொரியா எச்சரித்துள்ளது.

 

கொரியக் குடாவில் ஏற்பட்டுள்ள பதட்டம் சீனாவிற்கு பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படாதவகையில் வட கொரியாவை தணிவான போக்கிற்குள் தள்ளும் பணிகளுக்குள் சீனா குதித்துள்ளதாக அந்த நாட்டின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

http://www.alaikal.com/news/?p=123940

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.