Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா: அடுத்துவரும் தினங்களில் நடைபெறப்போகும் காட்சிகள்! (சமகாலப் பார்வை)

Featured Replies

unhrc_09.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது.  வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி!

மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடும் இலங்கை தொட்பில் தமது நிலைப்பாட்டை  பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவை இரண்டாகப் பிளவுபட்டுப்போயிருப்பது வெளிப்படையாகியிருக்கின்றது. இந்தியா மட்டும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் தயங்கிக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் யோசனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வெள்ளிக்கிழமை உப மகாநாடு ஒன்று ஜெனீவாவில் நடத்தப்பட்ட போது இலங்கைக்கான ஆதரவு குறைவாகவே காணப்பட்டது. ஆதரவளித்த நாடுகளில் பெரும்பாலானவை வாக்களிக்கத் தகுதியற்றவை என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்கா முன்வைக்கப்போகும் பிரேரணையின் பிரதிகள் ஜெனீவாவில் இராஜதந்திர வட்டாரங்களில் விவாதங்களுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய செயல் திட்டம் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை குறித்து உரிய கவனம் செலுத்துமாறு இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

mahinda-samar.jpg

 

மேலும், இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது கவலையளிப்பதாக உள்ளது என அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழர் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புகூறலையும் மேம்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையை வரவேற்கும் இந்த தீர்மான வரைவு, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், மனித நேய சட்டத்தையும் மீறிய செயல்கள் குறித்து ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணைய கோரி ஆணையர் விடுத்த அழைப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.

 

இந்த ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவு கோருகிறது. அதேவேளையில், இலங்கை அரசு, ”ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்” மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி தருமாறும் இந்த வரைவுத் தீர்மானம் கோருகிறது.

 

எனினும், இது இறுதித் தீர்மானம் அல்ல. தற்போது இடம்பெற்றுவரும் ஆலோசனைகளையடுத்து இதில் மாற்றங்கள் இடம்பெறலாம். அந்த மாற்றங்களுடன் எதிர்வரும் 13 அல்லது 14 ஆம் திகதி இறுதி வரைவு முன்வைக்கப்படும். அது தொடர்பான விவாதம் 20 ஆம் திகதி நடைபெற்று வாக்களிப்பும் அன்றைய தினமே இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்களைச் செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே இருப்பதால் இலங்கை அரசாங்கம் ஜெனீவாவிலும், சர்வதேச அரங்கிலும் தமது இராஜதந்திர நகர்வுகளை விரைவுபடுத்தியிருக்கின்றது.

 

”ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்” மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி வழங்க வேண்டும் என வரைபில் தெரிவிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கைக்குப் பெரும் அதிர்ச்சியைக்கொடுக்கும் விடயமாக உள்ளது. இது தமக்கு ஆபத்தானதாக அமையும் என இலங்கை அரசு அஞ்சுவதற்கும் காரணம் உள்ளது. அமெரிக்காவின் நகல் தீர்மானம் கடுமையானது என மனித உரிமை அமைப்புக்கள் பலவும் குறிப்பிடுவதற்கு இதுதான் காரணம்.

navi-pillai.jpg

இது இலங்கை அரசு எதிர்பார்க்காத ஒன்றல்ல. ஆனால், இறுதிவரையில் வரட்டும் பார்க்கலாம் என்ற நிலையிலிருந்த அரசு இப்போதுதான் களத்தில் இறங்கியிருக்கின்றது. ஒருவகையில் இலங்கை அரசின் நகர்வுகள் காலங்கடந்தவையாகவே உள்ளன. அதேவேளையில் இந்தச் சரத்தை நீக்குவதற்காக எதனைச் செய்வதற்கும் இலங்கை இப்போது தயாராகவுள்ளது.  இதற்கான பதில் ஒன்றை அரசாங்கம் தயாரித்துக்கொண்டிருப்பதாகவும், இந்த விரிவான பதில் எதிர்வரும் தினங்களில் முன்வைக்கப்படலாம் எனவும் தெரிகின்றது.

 

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உப மகாநாட்டில் சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் எகிப்து என்பன இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தன. அமெரிக்காவின் இரண்டாவது வரைவு எதிர்பார்க்கப்பட்டதைவிட கடுமையானதாகவுள்ளதால் இதனை முறியடிக்க வேண்டும், அல்லது அதன் காரத்தைக் குறைக்க வேண்டும் என்ற நிலையில் இலங்கையும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. மேலே குறிப்பிட்ட நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் ஆதரவையும் பெற்று பிரேரணையில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிகின்றது.

 

மறுபுறத்தில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளுடன் கனடாவும் இணைந்துள்ளது. இந்தப் பிரேரணை போதுமானதல்ல இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்ததாகத் தெரிகின்றது.

 

இதேவேளையில், இந்தப் பிரேரணை தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்தும் தயக்கம் காட்டிவருகின்றது. இந்தியப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது, தீர்மானம் வரட்டும், அதன் வாசகங்களைப் பார்த்தபின்னர் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மௌனமாக இருப்பது தமிழகத்தில் சீற்றத்தை அதிகரித்திருக்கின்றது.  இப்போது மாணவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் எனத் தெரிகின்றது.

 

அமெரிக்கா முன்வைத்துள்ள நகல் பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பதும் இவ்விடயத்தில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும்தான் இந்த வாரத்தில் எழும்கேள்விகளாக உள்ளன. தீர்மானம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக இறுதியாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டியதாக இருப்பதால் அடுத்துவரும் சில தினங்கள் மிகவும் முக்கியமானதாக அமையும்.

 

- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.

 

http://tamilleader.com/?p=7406

Edited by ஊர்பூராயம்

இலங்கைக்கு ஆதரவு திரட்டும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

 

ஜெனிவா இராஜதந்திரச் சமரில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

தொழில்நுட்பக் காரணிகள், காலதாமதம் உட்பட முக்கிய சில விடயங்களைக் கருத்திற்கொண்டே பாகிஸ்தானின்
பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபை ஏற்க மறுத்துவிட்டது என அறிய முடிகின்றது.

பாகிஸ்தானின் இறுதிக் கட்ட முயற்சி கைகூடாமையானது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் இம்முறை வாக்களிக்கும் தகுதியை இழக்கின்றன.

எனவே, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகளையே இலங்கை இந்த முறை முழுமையாக நம்பியிருக்கின்றது.

இதனடிப்படையிலேயே இலங்கைக்கு ஆதரவாக மேற்படி நாடுகள் ஜெனிவாவில் களமிறங்கி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

இதன் பிரகாரம் இலங்கையைப் பாதுகாக்கும் வகையில் பிரேரணையொன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்மொழிவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசு நல்லிணக்கத்தை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.

எனவே, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும். இலங்கை இறையாண்மைமிக்கதொரு நாடு. எனவே, அதன் உள் விவகாரங்களில் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது ஆகிய சரத்துகள் உட்பட மேலும் பல விடயங்கள் பாகிஸ்தானின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன என அறியமுகின்றது.

இருப்பினும், பாகிஸ்தானின் பிரேரணையை மனித உரிமைகள் சபை தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்க மறுத்துவிட்டது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=864741891911642621

ஓ.. அப்ப இதுதான் இலங்கை வைத்திருந்த கடைசி இராமபாணமா?

 

அல்லது இன்னும் ஏதாவது மறைவில் அவிகிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.