Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரிஜாதம் - திரை விமர்சனம்

Featured Replies

கத்தி இல்லை... இரத்தம் இல்லை... அவனைப் போட்டுர்றேன்... அவன் கையை வெட்டு, காலை வெட்டு.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

.. இரைச்சல் இல்லை..... முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்.... ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்....

ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது.... சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா.... இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்.... தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்..... சொல்லுவதற்கு முன்பே உயிரை வேறு விட்டு விடுகிறார்..... உண்மை தெரிந்து கதாநாயகன் கதாநாயகியை கைபிடிப்பது என்ற ஒற்றை வரி கதை..... தன் ட்ரீட்மெண்டால் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார் பாக்யராஜ்....

குறிப்பாக ஹீரோயின் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களை தன் மகனாகவும், ஹீராயினாகவும் சீதா கற்பனை செய்து கொள்ள விஷுவல் ட்ரீட்மெண்ட் சூப்பர்.... ஹீரோயின் சரண்யாவைப் பொறுத்தவரை குத்துவிளக்கு மாதிரி இருக்கிறார்.... சினிமாவுக்கு ஏற்றத் தோற்றம் அவருக்கு இல்லை... ஹீரோ பிருத்வி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்..... இருக்காதா பின்னே? எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே?

இடைவேளைக்குப் பிறகே பாக்யராஜ் சம்பூர்ணம் என்ற கேரக்டராக உள்ளே நுழைகிறார் (விசு ஸ்டைல்?).... பாக்யராஜ் தான் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறாராம்.... பிரகாஷ்ராஜுக்கு ஏற்ற வெயிட் கேரக்டர் இல்லை.... அவருக்கு நடிக்க ஸ்கோப் ரொம்பவும் கம்மியாக இருக்கிறது.... ஹீரோ அப்படியே 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும் பாக்யராஜை இமிடேட் செய்கிறார்..... படம் முழுவதும் இழைக்கப்பட்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை படத்துக்குப் பலம்.....

படத்தின் ஒரிஜினல் கதையை விட ஹீரோயின் (எழுத்தாளராம்) எழுதும் பாரிஜாதம் கதை சூப்பராக இருக்கிறது... அந்தக் கதையின் முடிவு ரொம்பவும் சோகம்....

ரொம்ப நாளுக்குப் பிறகு காதுக்கு இனிமையான பின்னணி இசை.... புதுமுக இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.... ஒரு பாடல் ரொம்பவும் அருமை.....

பாரிஜாதம் - நன்றாகவே மணக்கிறது....

(www.madippakkam.blogspot.com)

டபுள்மீனிங் இருந்தால்தான்யா பாக்கியராஜ் கதை.. அது இல்லையெண்டால் இது பூர்னிமா மோளுக்காக எழுதிக்கொடுத்த கதை..

உங்களுடைய குடில் பார்த்தேன்.. சென்னைத்தமிழ் அகராதி என்னை மிகலும் கவர்ந்துள்ளது.. :idea:

எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே? :roll:

நல்ல படம் பார்க்க தவறவேண்டாம்

  • தொடங்கியவர்

டபுள்மீனிங் இருந்தால்தான்யா பாக்கியராஜ் கதை.. அது இல்லையெண்டால் இது பூர்னிமா மோளுக்காக எழுதிக்கொடுத்த கதை..

பெரியவரே.... உங்களைப் போன்றவர்கள் ஜொள்ளு விட இந்தப் படத்திலும் ஒரு "சமாச்சாரம்" உண்டு.... :D:D:D

ஜெனரேட்டர் உபயோகப்படுத்தியது உண்டோ? இல்லையென்றால் படத்தைப் பாருங்க....

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே? :roll:

ஆமாம் தூயா.... பிருத்விராஜன் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் நேரடி பேரன்.... இது நிறைய பேருக்கு தெரியாது.....

ஜேனறேற்றர் உபயோகிச்சாத்தான் லைற்று பத்தும் எண்ட நிலைக்கு இன்னும் போகேல்லை.. நச்சுறல் பவரியையே எல்லாம் பத்திது..

:P

பெரியவரே.... உங்களைப் போன்றவர்கள் ஜொள்ளு விட இந்தப் படத்திலும் ஒரு "சமாச்சாரம்" உண்டு.... :D:D:D

ஜெனரேட்டர் உபயோகப்படுத்தியது உண்டோ? இல்லையென்றால் படத்தைப் பாருங்க....

ஆமாம் தூயா.... பிருத்விராஜன் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் நேரடி பேரன்.... இது நிறைய பேருக்கு தெரியாது.....

ம்ம்ம்ம் எதிர்பார்க்கவேயில்லை...

ஏதோ ஒரு மலையால நடிகர் என நினைத்தேன்.

தகவலுக்கு நன்றி

நன்றி லக்கி தகவலுக்கு :P

மதி தாத்தாக்கு நீங்க கொடுத்த விளக்கம் காணாது அப்படியே கருணா(ய்) டக்கு தேனி ஜனநாயகம் என்ற வார்த்தை சேர்க்காமல் எது பேசினாலும் அவரது அறிவுக்கு எட்டாது :wink: :P

இனிமல் தாத்ஸூக்கு இந்த வார்த்தைகள் போட்டு விளக்கம் குடுங்க :wink:

  • தொடங்கியவர்

ஜேனறேற்றர் உபயோகிச்சாத்தான் லைற்று பத்தும் எண்ட நிலைக்கு இன்னும் போகேல்லை.. நச்சுறல் பவரியையே எல்லாம் பத்திது..

:P

அது சரி.... நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்.... :D:D:D

ம்.. பாக்கியராஜ் கதையிலை வேறையென்ன ஜெனறெட்டர் வரும்.. றெகமென்டேசன் செய்யுறீங்க.. கனகாலம் படம் பாக்கேல்லை பாத்துட்டாப்போச்சு..

அது சரி.... நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்.... :D:D:D

  • தொடங்கியவர்

பெரியவரே!

இந்த ஜெனரேட்டர் பர்ஸ்ட் நைட் ஜெனரேட்டர்.... :D க்ளூ போதுமா?

ம்.. பாக்கியராஜ் கதையிலை வேறையென்ன ஜெனறெட்டர் வரும்.. றெகமென்டேசன் செய்யுறீங்க.. கனகாலம் படம் பாக்கேல்லை பாத்துட்டாப்போச்சு..

படம் என்னவெண்டு ஞாபகமில்லை ஆனா கட்டம் ஞாபகமிருக்கிறதாலை சொல்லுறன்.. படத்தின்படி பாக்கியராஜ் ஏற்கெனவே படத்தை பாத்திட்டார்.. தங்கச்சி தம்பிமாரோடை ஆக்கினை தாங்கேலாமை அவையளையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்கப்போறார்.. செக்ஸ் கட்டம்வர அதுகள் பாக்காமலிருக்க சில்லறைக்காசை வேணுமெண்டு கொட்டிப்போட்டு தேடுங்கோ எண்டு சொல்லுறார்.. அதுகளும் தேடுதுகள்;..அவர் படத்தை ரசிச்சு பார்க்கிறார்.. இப்படி பார்த்து ரசிச்சு தன்னை மறந்து ஒரு கட்டத்துக்கு காசு கீழைபோட மறந்திடுவார்.. அப்ப ஒரு பெடி அவருக்கு ஞாபகமூட்டுது.. அதெல்லாம் பாத்து சிரிச்சதை நினைவுட்டியிருக்கிறியள்.. அது அந்தக்காலம்..

இப்ப என்னடாண்டா பிள்ளையள் டிவிடி ஹயர்பண்ணி கொண்டுவந்து பாக்குதுகள்.. அதுகள் போட நாங்கள்தான் விட்டிட்டு வெளியாலை போகவேண்டியாயிருக்கு.. அதுகளுக்கு கூச்சமில்லாட்டிலும் எங்களுக்கு கூச்சமாயிருக்கு..அதுகளோடையிர

ம்ம் படம் நல்லா இருக்கு..பிருதிவிராஜ் நல்லா நடிக்குறார்..கதையில் வரும் கதையில் அவரின் நடிப்பு ரொம்ப சிரிப்பா இருக்கும்..சரண்யாவும் நல்லா நடிக்குறாங்க..(அப்பா போல) குரல் சொந்த குரல் என்று நினைக்குறேன்..அது கூட நல்லா இருக்கு..அத்தோட பாட்டுக்களும் சூப்பர்..உன்னை கண்டேன் பாட்டு நல்லா இருக்கும் பார்க்க :P

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம் எதிர்பார்க்கவேயில்லை...

ஏதோ ஒரு மலையால நடிகர் என நினைத்தேன்.

தகவலுக்கு நன்றி

எம்.ஜி.ஆரின் தாய்மொழியும் மலையாளம் தான்... :( அவர் இலங்கையில் கண்டி என்ற ஊரில் பிறந்தவர் என்பதாவது தெரியுமா?

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகள் வயிற்றுப் பேரன் தான் பிருத்விராஜ்.... பிருத்விராஜின் தந்தை பிரபல மலையாள நடிகர் சுகுமாரன்....

இந்த விமர்சனத்துக்குத் தொடர்பில்லாத எம்.ஜி.ஆர் பற்றிய செய்தி :- எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம்.... தன் அண்ணன் குழந்தைகள் அனைத்தையும் செல்லம் கொடுத்து வளர்த்தவர் அவர் தான்.... எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது சொத்துக்களை காதுகேளா குழந்தைகள் இல்லத்துக்கும், எம்.ஜி.ஆரின் அண்ணன் வாரிசுகளுக்கும் தான் பிரித்து அளிக்கப்பட்டது....

எம்.ஜி.ஆருக்கு பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதே அவர் குழந்தைகள் மீது காட்டிய அன்புக்காகத் தான்.... அந்தப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்த திமுகவின் முக்கியஸ்தர் ஒருவர் டாக்டர் பட்டம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க முனைந்தார்.... இதுகுறித்து கலைஞரிடம் அவர் பேசியபோது கலைஞர் அவருக்கு செம டோஸ் விட்டார்.... "ஏன்யா அரசியல்ல வேணும்னா நாம எதிர் எதிர் துருவத்துலே இருக்கலாம்.... அதுக்காக உண்மைய மறைக்க முடியுமா? எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் மீது அன்பில்லைன்னு சொன்னா உலகத்துலே வேற எவனுக்குய்யா குழந்தைகள் மீது அன்பு" என்று கலைஞர் கேட்டார்.... கலைஞரின் மகள் கனிமொழி எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் செல்லமாம்...

  • தொடங்கியவர்

படம் என்னவெண்டு ஞாபகமில்லை ஆனா கட்டம் ஞாபகமிருக்கிறதாலை சொல்லுறன்.. படத்தின்படி பாக்கியராஜ் ஏற்கெனவே படத்தை பாத்திட்டார்.. தங்கச்சி தம்பிமாரோடை ஆக்கினை தாங்கேலாமை அவையளையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்கப்போறார்.. செக்ஸ் கட்டம்வர அதுகள் பாக்காமலிருக்க சில்லறைக்காசை வேணுமெண்டு கொட்டிப்போட்டு தேடுங்கோ எண்டு சொல்லுறார்.. அதுகளும் தேடுதுகள்;..அவர் படத்தை ரசிச்சு பார்க்கிறார்.. இப்படி பார்த்து ரசிச்சு தன்னை மறந்து ஒரு கட்டத்துக்கு காசு கீழைபோட மறந்திடுவார்.. அப்ப ஒரு பெடி அவருக்கு ஞாபகமூட்டுது.. அதெல்லாம் பாத்து சிரிச்சதை நினைவுட்டியிருக்கிறியள்.. அது அந்தக்காலம்..

பெரியவரே... அது "தாவணிக் கனவுகள்"

சிவாஜியும் அந்தப் படத்தில் நடித்திருந்தார்....

எம்.ஜி.ஆரின் தாய்மொழியும் மலையாளம் தான்...  :(  அவர் இலங்கையில் கண்டி என்ற ஊரில் பிறந்தவர் என்பதாவது தெரியுமா?...

இலங்கையில் பிறந்தவர் என்பது தெரியும்.... தகவலுக்கு நன்றி லக்கிலுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.