Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சிக்கும் பரவியது ஈழத்தீ - மகிந்த மற்றும் மன்மோகன்சிங்கின் உருவப்பொம்மைகள் எரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
thruchchi_protest-130313-seithy-150.jpg

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், ஈழத்தமிழர் படுகொலையில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே இன்று மதியம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் சபரி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கோவை சட்டக்கல்லூரி, புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி, நெல்லை சட்டக்கல்லூரி மற்றும் புதுவை சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்துமாறும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

thruchchi_protest-130313-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78018&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் எடுக்கும் மாணவர் போராட்டம்..வெல்க மாணவர் போராட்டம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v-saalaimariyalporaaddam%20%281%29.jpg

photo.gifvideo123.gifசற்று முன் திரிச்சியில் சாலைமறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் தெரிவித்துள்ளார்.

கீழ் வரும் காரணங்களை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று திரிச்சியில் சாலைமறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

> அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் வலுவற்றது, அது ஒரு மோசடித் தீர்மானம் - என்பது மாணவர்களின்  குற்றச்சாட்டு.

> இலங்கையில் நடந்தது போர் கிடையாது - அது, திட்டமிட்ட இனப்படுகொலை - என்கிற உண்மையை மாணவர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

> நடத்திய இனப்படுகொலைக்காக இலங்கைமீது சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை - என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

> நடந்தது இனப்படுகொலை - என்பதையும், அதற்காக சர்வதேச சுதந்திர விசாரணை தேவை - என்பதையும் வலியுறுத்தாத அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரித்து, இவற்றை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை இந்தியாவே ஜெனிவாவில் கொண்டுவர வேண்டும் என்பதே மாணவர்களின் நிலை.

> இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் - என்கிற தமிழக அரசின் நிலையை மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

> தனித் தமிழ் ஈழம் - அமைவதுதான் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதால், அதற்கான பொதுவாக்கெடுப்பு சர்வதேசத்தின் கண்காணிப்பில் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்பது மாணவர்களின் உறுதியான நிலை.v-saalaimariyalporaaddam%20%282%29.jpgv-saalaimariyalporaaddam%20%283%29.jpgv-saalaimariyalporaaddam%20%284%29.jpgv-saalaimariyalporaadda-par1m%20%282%29.v-saalaimariyalporaadda-par1m%20%285%29.v-saalaimariyalporaadda-par1m%20%284%29.v-saalaimariyalporaadda-par1m%20%283%29.

இதுதான் அது. மன் மோகன் சிங்கின் பாவைதான் எரிக்கப்படவேண்டும். மாணவர்கள் சரியாகத்தான் செய்கிறார்கள். இலக்கு மத்திய அரசு என்பதுதான் அதன் கருத்து. மத்திய அரசு தனக்கும் முள்ளியவாய்கால் போர் குறாத்தில் பங்கு என்பதால் அதை இலங்கையைத்தானும் விசாரிக்க விடாமல் மடக்க பார்க்கிறது. கஸ்மீரை வைத்து பிரேரணையை குழப்புகிறது. எனவே போராட்டம் மத்திய அரசுக்கு எதிராகத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமும் துனிவும் தெளிவான அறிவும் மாணவர்கள் இடம் இருக்கு..வெல்க்க உங்கள் போராட்டம் தோழர்களே

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஒவ்வொரு கவள உணவை எம் உதட்டருகில் கொண்டு செல்கையிலும் உங்கள் முகங்கள் தான் தெரிகிறது..எங்களுக்காய் பசி வலி பொறுத்து உயிர் துடிக்கும் உங்களது ஒப்பற்ற உங்கள் அர்பணிப்புடனான தியாகங்கள் எமது விழிகளை பிழிந்து வார்க்கின்றன.. நன்றிகள் சொல்ல மாட்டோம். உங்கள் திசை நோக்கி பூமிக்கு முத்தமிட்டு வணகுகின்றோம்..செல்வங்களே..

மாணவர்கள் என்பவர்கள் வெறுமனே கல்வி கற்க மட்டுமே அருகதையானவர்கள் என அவர்களை குறுகிய வட்டத்துள் வைத்து பார்ப்பது முட்டாள்தனம். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்.. நாளைய உலகம் தவறுகள் நீக்கி சரியான பாதையில் பயணிக்க வேண்டுமானால் மாணவ சமுதாயம் சமூக விழிப்புணர்வை பெறுவதோடு சமூகத்தை செதுக்கும் சிற்பிகளாக திகழ்ந்து ஆளுமையோடு போராடுவது காலத்தின் கட்டாயப் பணியே! மாணவப் புரட்சிகள் மட்டுமே அரசியல் சாயம் எதுவும் இல்லாத புனிதமான போராட்டமாக அமையும். அதற்க்கு சக்தி நிச்சயம் அதிகம். அதை இனி வரும் வரலாறுகள் காணும்!தடைகளால் எந்த ஒரு போராட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போர் என்றும் ஓயாது. விடுதலை காணும் வரை இறுதித் தமிழன் உள்ளவரையில் தமிழரின் போராட்டங்கள் தொடரும். இந்த மாணவர்கள் காட்டிடும் வழியில் உலக தமிழினம் தனது போராட்டங்களை தொடர வேண்டும். இன உணர்வு கொண்ட மாணவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

தமிழகம் கடந்து தமிழர் வாழும் இடமெல்லாம் தமிழ் மாணவர்கள் இந்த மாணவர் புரட்சி தீயை இதயங்களில் ஏந்தி எழுச்சி தீயை அணையாமல் உலகெங்கும் மூண்டு மூண்டு எரியும் வண்ணம் பரப்ப வேண்டும்.! ஒரு யுகப் புரட்சியை உலகத் தமிழினம் கையில் எடுக்க வேண்டிய காலம்! காலக் கடனை கண்ணெனப் போற்றிட உலகத் தமிழினமே மாணவர் பின்னால் அணி திரண்டு எழுகை கொள்ள வா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.