Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா சீனா புதிய போர்..! தீப்பற்றி எரிகிறது பிரச்சனை..

Featured Replies

உலகத்தின் நம்பர் வண் யார்… முதலிடத்தைக் கைப்பற்ற வான்வெளியில் வெடித்திருக்கிறது அமெரிக்கா – சீனா இரண்டு நாடுகளுடைய சைபர் யுத்தம்..


21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரவாதம் என்று வார்ணிக்கப்படும் சைபர்கிரைம் மோதல் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் அவசரமாகவும் அவசியமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அமெரிக்காவின் பேள்காபர் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கியதைப் போல இப்போது சீனா அமெரிக்கா மீது நடாத்தியிருப்பது சைபர் பேள்காபர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை சைபர்கிரைம் நடக்கிறது என்று பேசி வந்த அமெரிக்க அதிபர் முதல் தடவையாக சீனாவை நோக்கி கோபமாக கையை நீட்டியுள்ளார்.

 

சைபர் கிரைம் என்றால் என்ன..?

 

இது சற்லைற் போர்.. சற்லைற்றை பயன்படுத்தி இணையம் மூலமாக நடைபெறும் போர்.. அதாவது மாபெரும் அறிவியற் போர்… சைபர் வோர்..!

 

இந்தப் போர் நடக்கும் களம் எது..?

 

இன்றைய உலகத்தில் எல்லாமே இணைய மயமாக மாறிவிட்டது, ரயில் போக்குவரத்து, காஸ் பைப் நகர்வு, விமானப் போக்குவரத்து, வங்கி செயற்பாடுகள் தொடங்கி அணு குண்டை தட்டிவிடுவதுவரை எல்லாமே இணையம்தான்.

 

இந்த இணையத்தின் இரகசிய இலக்கங்களை உடைத்துக் கொண்டு, உள் நுழைந்து எல்லாத் தகவல்களையும் களவாடி, எல்லாவற்றையும் குழப்புவதுதான் சைபர் கிரைம்.

 

இதை நாடுகள்தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை அறிவிருந்தால் தனி நபர்களும் செய்யலாம்..

 

போர்க்களம் : இணையம்…! ஆயுதம் : அறிவு..! உலகத்தையே அழிக்கவல்ல ஆபத்தான போர்..
இதனால் எப்படி அழிவுகளை ஏற்படுத்தலாம்…?

 

சிக்னலை இரண்டு இடங்களில் பச்சையாக மாற்றி விழுத்தினால் இரண்டு ரயில் வண்டிகள் மோதிச் சிதறும்..

 

காஸ் பைப்லைனை உடைத்து சிதற வைத்து பேரழிவை ஏற்படுத்தலாம்.. ஏன் அணு குண்டுகளையே கிளப்பி விடலாம்…

 

நாடுகள் பரிசோதனைக்காக ஏவும் ஏவுகணைகளை தலை குத்தென கடலிலேயே விழ வைக்கலாம்..

 

வங்கியில் உள்ள பணத்தை கொத்தாக காவு கொள்ளலாம்.. இப்படி.. இப்படி.. இது நீண்டு செல்லும்.. இதுதான் சைபர்கிரைம்.

 

இது பயங்கரவாதத்தைவிட மோசமான குற்றச் செயல் என்று சற்று முன்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

 

சீனாவின் மீது அமெரிக்கா குற்றம் சுமத்த என்ன ஆதாரம்..?

 

இந்த சைபர் கிரைம் மோசடிகளை செய்யும் கட்டிடம் ஒன்றை அமெரிக்க சற்லைற்றுக்கள் கண்டு பிடித்துள்ளன.

 

சீனாவின் ஷங்காய் நகரில் 31398 வது இலக்கத்தில் இந்தக் கட்டிடம் இருக்கிறது, இங்கிருந்துதான் அமெரிக்கா மீதான சைபர் கிரைம் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறது.


இது சீன இராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் அரச ஆதரவுடன்தான் இந்த சைபர்கிரைம் நடாத்தப்படுகிறது.

 

கடந்த 2004 ம் ஆண்டு சீன பல்கலைக்கழகம் சைபர் கிரைம் நடாத்துவதற்கான விசேட கற்கையை பல்கலைக்கழகத்திலும் ஆரம்பித்திருக்கிறது என்ற செய்தி அடுத்த அதிர்ச்சியாகும்.

 

சரி சீனா நடாத்திய குற்றங்கள் என்ன.. ஓர் உதாரணம் தரமுடியுமா..?

 

அமெரிக்காவின் கொக்கோ கோலா நிறுவனத்தின் விற்பனை, உற்பத்தி உட்பட எல்லா இரகசியங்களையும் இணைய வழியால் களவாடிவிட்டார்கள் சீனர்கள்.

 

அதுமட்டுமல்ல அமெரிக்காவின் பெரிய கம்பனிகளின் இரகசியங்கள் எல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன..

 

இதனால் அமெரிக்காவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டு பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நஷ்டம் ஒரு ரிலியன் என்கிறார் பராக் ஒபாமா..
ஆகவேதான் இந்த மோசமான பிரச்சனையை உடன் நிறுத்த வேண்டும் என்கிறது அமெரிக்கா..
நிறுத்த முடியுமா..?
நிறுத்த முடியாது.. இது மேலும் மோசமாகும்.. சைபர் கிரைமால் ஒரு நாட்டின் யுரேனியத்தையே களவாட முடியும் என்கிறது டைகாட் 4 திரைப்படம். நம்பமுடியாத கற்பனை என்று கூறப்படும் இந்தக் கதையையே சைபர்கிரைம் சாத்தியமாக்கும்.
சீனர்கள் மட்டுமல்ல சைபர்கிரைமில் ஈரானியர்களும் பாரிய கெட்டிக்காரராக இருக்கிறார்கள், சென்ற ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தையே பிழையான தகவல் கொடுத்து தமது நாட்டிற்குள் இறக்கியவர்கள்.

 

இப்போது அதுபோன்ற விமானத்தை ஈரான் உருவாக்குகிறது.

 

அதுபோல அமெரிக்காவின் அராம்கோ நிறுவனத்தை சைபர் கிரைம் முறையில் செயற்பட விடாமல் தடுத்து அமெரிக்கக் கொடியையே தீப்பற்றி எரிய வைத்தார்கள் ஈரானியர்கள்..

 

மறுபுறம்…

 

ரஸ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவுடன் உறவு கொள்கிறது என்ற காரணத்தால் லெற்லான்டின் மீது ரஸ்யா நடாத்திய சைபர் யுத்தத்தில் லெற்லான்டின் தலைமைக் காரியாலயமே வெடித்துச் சிதறி எல்லா ஆவணங்களும் தீப்பற்றிய நிகழ்வு கடந்த 2007ல் நடைபெற்றது.
ஆக.. அடுத்து வரும் காலங்கள் ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு போருக்கு போகும் காலமல்ல சைபர்கிரைம் என்னும் ஆபத்தான போர் நடக்கப்போகும் காலம்.

 

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்..

 

இதுவரை எந்தப் போருக்கும் கதி கலங்காது இரண்டு உலகப்போர்களை சந்தித்த அமெரிக்காவையே கலங்கடித்திருக்கிறது சைபர் யுத்தம்.

 

ஆம்..! மிக விறுவிறுப்பான மந்திரக் கதைகளில் வந்த போர் நிஜத்தில் நடக்கப்போகிறது..!

 

நம்பாமல் நம்பப் போகிறான் மனிதன்..

 

http://www.alaikal.com/news/?p=124358

 

அட இது என்ன பெரிய செய்தியா? மேற்கிலே அமெரிக்கனுடைய கம்பூட்டர்களைமட்டும்தானே சீனாகாரனுக்கு கையாள முடிகிறது. கிழக்கே வந்தால் நாட்டுக்கையே புகுந்து கிந்தி காரனுடைய பிறேனையே கன்றோல் பண்ணுகிறானே சீனாகாரன்.  அவனிட்டை தொழில் செய்கிற சிவஷ்ங்கர் மேனன்தானே இந்தியாவை சீனா தாக்காது என்று உதரவாதம் கொடுக்கிறாரே. சீனாக்கரன் தன்னுடைய மிக ஒட்டான நண்பனான இலங்கையையே தாக்கி தொழில் சாலைகளை பறித்தெடுக்கிறான். ஆனால் சீனா தனது பயங்கர எதிரியாக கருதும்கிந்திய நாட்டு மேன்னின் தலைக்குள்ளே கம்பூட்டரை மாட்டி அதை கன்றோல் பண்ணி சீனா இந்தியாவை தாக்கது என்று கறண்டி கொடுக்க வைக்கிறானே. அதைவிடாவ இது பெரிய செய்தி என்கிறது அலைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.