Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய கூட்டங்கள்

Featured Replies

அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியாக நடத்திய கூட்டங்கள் [ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 00:07 GMT ] [ தா.அருணாசலம் ]

UNHRC-20th.jpgசிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்தியுள்ளன. 

ஆசிய குழுவின் சார்பில் ஜோர்தான் ஒழுங்கு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, போருக்குப் பிந்திய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். 

அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. 

அதேவேளை, இன்னொரு அறையில், அமெரிக்கா ஒழுங்கு செய்த கூட்டத்தில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

எலீன் சேம்பர்லைன் தலைமையிலான அமெரிக்க குழுவினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானம் குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளனர். 

அதேவேளை அமெரிக்கத் தீர்மானம் குறித்த முறைப்படியான பதிலை சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நாளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130314107938

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மீண்டும் பனிப்போர்காலம் ஆரம்பமாகிவிட்டது.. :D  இந்தமுறை அமெரிக்கா - இலங்கை.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அமெரிக்காவுடன் கியூபா கடும் சொற்போர்! - இந்தியா மௌனம்!! - எதிர்ப்பை மீறி பிரேரணை இன்று தாக்கல்!!!

                                             af195f15-d6d9-4a1b-8411-f5e26599349f1.jp

                                        

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வாஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது.

இவ்வாறு கியூபா பிரதிநிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகையில், கியூபாவுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்த சீனா, ரஷ்யா, இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டன.

இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டதுடன், அதில் கடுமையான முன்மொழிவுகளை உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதிகள் வழமையான பாணியில் மௌனம் காத்தனர். அமெரிக்கப் பிரேரணை விடயத்தில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் இராஜதந்திர சமர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று உத்தியோகபூர்வமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கின்றது.

இதனையொட்டி குறித்தப் பிரேரணையின் இறுதிவரைவு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரநிதிதிகளுக்கும் அவதானிப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விளக்கமளிக்கும் கூட்டமொன்றை அமெரிக்கா மனித உரிமை பேரவை வளாகத்தில் 27 ஆம் இலக்க அறையில் நேற்று நடத்தியது.

அமெரிக்காவின் சார்பில் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கான அந்நாட்டின் விசேட தூதுவர் எலின் சம்பர்லெய்ன் டொனஹே தலைமையிலான குழுவினர் பிரேரணை குறித்து பன்நாட்டு பிரமுகர்களுக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது, இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் தமது நாட்டின் அபிப்பிராயத்தை வெளியிட்ட கியூபாவின் பிரதிநிதி, குறித்த பிரேரணை முறையற்ற நடவடிக்கை என சுட்டிக்காட்டியதுடன், அதற்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டார்.

அத்துடன், பிரேரணையிலுள்ள இறுக்கமான முன்மொழிவுகளை தளர்த்துமாறு வலியுறுத்திய அவர், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது முறையற்ற செயற்பாடு என தெரிவித்து அமெரிக்காவின் செயற்பாடுகளை கடுமையான விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார்.

எனினும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா ஆகியன இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு பச்சைக்கொடி காட்டியதுடன், அதை மேலும் வலுவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணை விடயத்தில் 'மதில் மேல் பூனை' என்ற நிலைப்பாட்டில் இருந்துவரும் இந்தியா நேற்றைய கூட்டத்தொடரிலும் மௌனம் காத்தது. டில்லியின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பிரேரணையின் இறுதிவரைவு தொடர்பில் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.

அதேவேளை, அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில் இலங்கை பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கியூபா, சீனா, ரஷ்யா போன்ற இலங்கை சார்பு நாடுகள் பிரேரணையின் உள்ளடக்கங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருந்தாலும் அவ்வாறான திருத்தங்களை மேற்கொள்ளமுடியாது என அமெரிக்கப் பிரதிநிதி எலின் சம்பர்லெய்ன் டொனஹே இதன்போது திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

கடந்தமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக இலங்கை சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தாமல் அலட்சியப்போக்கில் செயற்படுகின்றது என்ற விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இலங்கை பிரேரணைக்கு எதிர்ப்பை வெளியிட்டாலும் அந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் பட்சத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு மேற்படி நாடுகளுக்கு இம்முறை இல்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சுழற்றி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் மேற்படி நாடுகள் 22வது தொடரில் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருக்கவில்லை. எனினும், அவதானிப்பு நாடுகளாக கூட்டத்தொடரில் பங்கேற்று கருத்துகளை வெளியிடலாம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவதுக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருந்த பிரேரணைக்கு சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ந்து வாக்களித்திருந்தாலும் அது 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=af195f15-d6d9-4a1b-8411-f5e26599349f

அமெரிக்காவுடன் மகிந்த கூட்டம் இணங்கிபோக முயலுகின்றதா? இல்லை எதிர்க்க எண்ணுகின்றதா?

 

அப்படி மகிந்த கூட்டம் எதிர்க்க உண்மையில் முயலும் என நினைக்கவில்லை. அதேவேளை அதை முழுமையாகவும் நிராகரிக்க முடியவில்லை.

 

மகிந்த கூட்டம் எதிர்க்க எண்ணினால் அதற்கு இரணில் எவ்வாறான ஆதரவை தருவார் என்பதில் அமெரிக்காவின் நிலைப்பாடு இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.