Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி கேட்டு ஐநா சபையில் கண்ணீர்: உலுக்கப்பட்ட உலகின் மனச்சாட்சி

Featured Replies

ஜெனிவா மாநாட்டில், மனித உரிமை தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மஹிந்த சமரசிங்கே மறுத்தாலும், உலகின் மனச்சாட்சியை அவை உலுக்கத் தவறவில்லை என்பதே உண்மை.

 

 

இலங்கையில் மனித உரிமை நிலை குறித்த காலமுறை ஆய்வறிக்கை ஐ.நா மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்யப்படும் இந்த அறிக்கையை இலங்கை அமைச்சரும், ஐநா.,வுக்கான இலங்கையின் சிறப்புத் தூதருமான மகிந்த சமர சிங்கே சமர்ப்பித்தார். மனித உரிமையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை இலங்கை அரசு செயல்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறுதிப் போருக்குப் பின்னர் 3 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தஞ்சமடைவோர் குறித்த விவரங்களைத் அந்தந்த தெரிவித்தால் காணாமல் போனவர்களைக் கண்டறிவது எளிதாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ல் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மறுவாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதாகவும், ஐநா அமைப்பின் பரிந்துரைகளைச் செயல்படுத்த காலக்கெடு நிர்ணயித்து இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காலமுறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சேனல் 4 வீடியோ காட்சிகளில் வெளியான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், போர்க்காலத்தில் நடைபெற்ற சித்ரவதை நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் வடக்குப் பகுதியில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதைத் தடுக்க பெண் காவலர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தரப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Kasipillai-manohar.png



இலங்கை அரசால் நீதி கிடைக்காது:

மனித உரிமையை நிலைநிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஜெனிவா மாநாட்டில் பேசிய இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்கே தெரிவித்தார். மேலும், மே 2009 முதல் நாங்கள் மறுசீரமைப்புப் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். மக்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து ராணுவத்தை அகற்றுவது, இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேலும், நாட்டில் அமைதியை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் தொடங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

 

ஆனால் இலங்கை அரசால் தங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என, விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் பிரதிநிதியும், இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டவருமான காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்தார். கண்ணீர் மல்க அவர் தெரிவித்த கருத்துகள் சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரையும் சோகத்தி=ல் ஆழ்த்தியது.

கண்ணீர்..... கடந்த 2006 ஜனவரி 2ம் தேதி, இலங்கை ராணுவத்தினர், எனது மகனை திரிகோணமலை கடலோரத்தில் சுட்டுக் கொன்றனர். அதுகுறித்து நீதி கேட்டதற்காக எனது குடும்பத்தினர் இலங்கையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கு மேல் இந்த அறிக்கையை என்னால் தொடர முடியவில்லை.... எனது மகனை இழந்ததால் ஏற்பட்ட வலி, வேதனையுடன் உங்களிடம் உதவி கேட்கிறேன்.... மனித உரிமை ஆணையம் இந்த கொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏனென்றால் இலங்கை அரசால் எனக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை

 

 

அமெரிக்க பிரதிநிதி குற்றச்சாட்டு:

 

இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரைகளை ஏற்று கொள்ள வலியுறுத்திய நாடுகளின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது.

 

மேலும் இலங்கையின் தேசிய நடவடிக்கை திட்டத்தில் உள்ள மனித உரிமை தொடர்பான வாக்குறுதிகளையும் அவர்கள் காப்பாற்றவில்லை. மேலும் உலகளாவிய காலமுறை ஆய்வறிக்கையில் உள்ள அம்சங்களை மாற்றுமாறு மற்ற நாடுகளுக்கு இலங்கை பிரதிநிதிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மற்ற நாடுகளின் அறிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் மற்ற நாடுகளின் வெளிப்படைத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க பிரதிநிதி குற்றஞ்சாட்டினார்.

 

http://puthiyathalaimurai.tv/amnesty-international-member-sheds-tears-demanding-justice

  • தொடங்கியவர்

இலங்கை ராணுவத் தாக்குதலால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதாக, ஆம்னெஸ்டி சார்பில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்த காசிபிள்ளை என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஐ.நா மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

  • தொடங்கியவர்

'அனைத்து தமிழர் கொலை குறித்தும் சர்வதேச விசாரணை தேவை'

 

திருகோணமலையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் ஏனைய அனைத்து தமிழர் கொலை குறித்தும் சர்வதேச விசாரணை தேவை என்று அந்தச் சம்பவத்தில் தனது மகனை இழந்த டாக்டர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஜெனிவாவில், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு 5 தமிழ் மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி டாக்டர் மனோகரன் அவர்கள் போராடி வருகின்றார்.

 

அவருடைய மகனான ரஜிகரும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

 

ஆயினும் இதுவரை அந்த கொலைகள் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறும் மனோகரன் அவர்கள், ஜெனிவாவில் நடக்கும் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக தனது கருத்துக்களை எடுத்துவைத்தார்.

 

இந்தக் கொலைகள் உட்பட, இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் குறித்து இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று அங்கு பேசிய மனோகரன் அவர்கள், ஆகவே இது குறித்து சர்வதேச குற்றவிசாரணை ஒன்று தேவை என்று கூறினார்.

 

அவர் இது தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130315_manoharaningeneva.shtml

  • கருத்துக்கள உறவுகள்

போரிற்கு முதலும் போரின் போதும் போரிற்குப் பின்னரும் சிறிலங்காவில்

அப்பாவிப் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டதை இவர் ஒருவரின் சாட்சியே 

உறுதிப்படுத்துகின்றது.

 

எங்களைப் போன்றவர்களுக்காகக் குரல் கொடுத்த மனோகரன் ஐயாவிற்கு நன்றிகள்  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.