Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவருக்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச சமூகம்: தமிழர் மனித உரிமை மையம் கண்டனம்

இனப்படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் செயற்படுவதற்கு பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெனீவாவில் 1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உப ஆணைக்குழவின், 50 ஆவது அமர்வில் உரையாற்றிய, அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும், "சர்வதேச கல்வி முன்னேற்றம் என்ற அரச சார்பற்ற அமைப்பின்" பிரதம பிரதிநிதியும், சர்வதேச சட்டத்தரணியுமான திருமதி கரன் பார்க்கர் கூறியதாவது:

"எமது அமைப்பின் முக்கிய கருத்து என்னவெனில், சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களை, இங்குள்ளவர்கள் யாரும் பெறுமதியுள்ள மக்களாக பார்ப்பதாக நாம் காணவில்லை என்பதுடன் இதைவிட வேறு எந்த அபிப்பிராயத்தை நாம் கொள்ளவில்லை?

சிறிலங்காவில் மீக நீண்டகாலமாக யுத்தம் இடம்பெறுவதையும் அங்கு தமிழ் மக்கள் திட்டமிட்டு, கொலை செய்யப்படுவதையும், ஐ.நா. மனித உரிமைப் பிரிவின் புள்ளி விபரங்களின் அடிப்படையில், உலகில் காணாமல் போவோர் பட்டியலில், ஈராக்குக்கு அடுத்தபடியாக சிறிலங்கா இரண்டாவது இடத்தில் உள்ளதை நீங்கள் யாரும் அறிந்திருக்கவில்லையா?

1987 ஆம் ஆண்டின் பின்னர், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவோ அல்லது உப ஆணைக்குழுவோ தமிழ் மக்கள் மீதான சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பொஸ்னியா மக்களை விட தமிழ் மக்கள் நாகரீகம் அற்றவர்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா?

இல்லையேல் தமிழ் மக்கள் சரித்திர பூர்வமாக (இந்துக்கள்) சைவ சமயத்தவர்கள் என்பது உங்களுக்கு பிரச்சனையாகவுள்ளதா?

பூகோள ரீதியாக சில வல்லரசுகள் தமது பிராந்திய ஆதிக்கத்தை செலுத்துவதற்காக திருகோணமலை துறைமுகத்தை தமதாக்க எண்ணியுள்ளது தான் காரணமாவுள்ளதா?

சிறிலங்காவில் உள்ள தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனை போல் காணப்படும் யூகோசுலாவியாவில் உள்ள கோசவா மக்களின் அரசியல் பிரச்னைக்காக, யூகோசுலாவிய குடியரசு மீது பொருளாதார தடைகளையிட்ட சர்வதேச சமூதாயம், சிறிலங்கா விடயத்தில் ஏன் மௌனமாகவுள்ளது?

என்று மிகவும் காரசாரமாக 1998 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், திருமதி கரன் பார்க்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் காரணங்கள் தவிர்ந்த வேறு ஏதாவது காரணங்களும் உள்ளதா என நாம் ஆராய்வோமானால், சிறிலங்கா அரசினால் பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் சர்வதேச மட்டத்தினாலான பிராச்சார வேலைகளுடன், சிங்கள இனத்தின் ஆதாரமற்ற மேற்கு நாடுகளின் "ஆரிய இன" தொடர்பு பற்றிய கற்பனைக் கதைகளும் காரணமாக அமையலாம் என நாம் எண்ணுகிறேம்.

சில வருடங்களுக்கு முன் கோசவா மக்களின் அரசியல் பிரச்சனைக்காக சர்வதேச சமூதாயம் பெரிதாக குரல் கொடுத்த போது கோசவாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை விட, பல மடங்கு மோசமாக சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு இடம்பெறுகின்றதே, அதற்காக நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என சில ஐரோப்பிய இராஜதந்திரிகளிடம் நாம் அவ்வேளையில் வினவிய போது, "கோசவா மக்களின் பிரச்சனைகள் எமக்கு அருகாமையிலேயே நடைபெறுகின்றன.

சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்கள் பூகோள ரீதியாக பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடைபெறுவது மட்டுமல்லாது, தமிழர் பிரதேசங்களில் எந்தவித சர்வதேச பொருளதார நலன்களும் காணப்படவில்லை என்றும" கூறினார்கள்.

ஆனால் உண்மை என்னவெனில், தமிழ் மக்களிள் அரசியல் பிரச்சனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடைபெறுவதானாலும், தமிழ் மக்கள் மீது சிறிலங்கா தனது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கான நவீன ஆயுத தளபாடங்கள் யாவும், இந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து தான் பெருமளவில் சிறிலங்கா அரசுக்கு கிடைக்கிறது என்பதும், இதன் காரணமாக 500,000 தமிழ் மக்கள் மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்கள் என்பதையும் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

நாம் அறியவேண்டிய ஓர் உண்மை என்னவெனில், இந்த சர்வதேச சமுதாயம் என்பவர்கள் யார்?

உண்மையைக் கூறுவதானால் இதற்கான ஓர் வரவிலக்கணம் கிடையாது.

அதேவேளை ஓர் சர்ச்சைக்குரிய நாடு தவிர்ந்த, உலகில் உள்ள ஏனைய நாடுகள் தான் சர்வதேச சமூதாயம் என்றும் நாம் கூற முடியாது.

தற்போது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஓர் தெளிவான உண்மை என்னவெனில்,

தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசினுடைய மனித உரிமை மீறல்களை காணதவர் போல் நடித்துக் கொண்டு, குருட்டுத்தனமான முறையில் ஒரு பக்கச்சார்பாக தமிழ் மக்களை குறை கூறுபவர்களையே சர்வதேச சமுதாயமாக நாம் பார்க்க முடியும்.

இல்லையேல் மற்றைய தேசிய இன மக்கள் மீது மிக கொடுமையாக நடந்து கொண்ட காரணத்திற்காக,

ஈராக்கில் சாதாம் குசைனையும்,

யூகோசுலாவியால் மிலோசிவிக்கையும்

குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இந்த சர்வதேச சமுதாயம், எப்படியாக 1948 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கைத் தீவில் தமிழீழ மக்களுக்கு நடப்பவற்றை தமது நீதியின் கண்களால் பார்க்க முடியாமல் இருக்க முடியும்?

இதே சர்வதேச சமூதாயம், ரூவண்டாவில் "ருட்சியின" மக்கள் மீது படுகொலை மேற்கொண்ட "கூட்டுஸ்" இன மக்களையா ஆதரித்தார்கள்?

இலங்கை தீவின் இனப்பிரச்சனையில் மட்டும் ஏன் இந்த வேறுபடுகள்?

சிறிலங்கா அரசினதும், அவர்களின் பணத்திற்கு மாரடிக்கும் கூட்டத்தின் கட்டுக்கதைகளையும், கற்பனைக் கதைகளையும் ஏற்றுக்கொண்ட, சர்வதேச சமுதாயம், எந்தவித ஆய்வுகளையும் செய்யாது மேற்கொண்ட முடிவுகளால் தான், இன்று இலங்கைத் தீவின் இனப்பிரச்சனை, மிகவும் மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவான உண்மை.

ஏப்ரல் 25 ஆம் நாள் திருகோணமலையில் ஆகாய, கடல், தரைப்படைகளால் தாக்குதல் நடத்த சிறிலங்கா அரச தலைவர் அனுமதித்த அடுத்த கணமே, 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நோர்வே அரசின் மத்தியஸ்தத்தினால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை வலுவிழந்துவிட்டது.

அப்படியானால் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறியது போல் இருவார முன்னறிவித்தல் ஏதும் கொடுக்காது, தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஆகாய, கடல், தரை மார்க்கமாக தாக்குதலை நடத்திகொண்டிருக்கும் ராஜபக்ச அரசு மீது, இந்த சர்வதேச சமுதாயம் என்ன நடவடிக்கை இன்று வரை எடுத்துள்ளார்கள்?

சிறிலங்கா அரச தலைவர், தமிழர் தாயக பிரதேசங்களில் கொடூரமான தாக்குதல்களை நடத்திகொண்டு, தாம் "யுத்தப்பிரகடனம்" செய்யவில்லை என்றும்

சிறிலங்கா அரசு என்றும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்றும்

கூறுவதும் அரசியல் இராஜதந்திரம் என்பதை இந்த சர்வதேச சமூதாயம் இன்னும் அறியவில்லையா?

யுத்தம் தொடங்கிவிட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டால், சிறிலங்காவுக்கு வெளிநாட்டு உதவிகள் தடைப்படலாம் என்பது தான் உண்மை.

சில வருடங்களாக சிறுபிள்ளைகளின் உரிமைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக நடித்து வந்த சர்வதேச சமூதாயத்திற்கும், அதனுடன் சேர்ந்த சில சர்வதேச நிறுவனங்களின் கண்களுக்கும், கடந்த சில வாரங்களாக சிறிலங்கா அரச படைகளினாலும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளினால் தமிழ்க் குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளும் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்படுவது பற்றி எதற்காக மௌனமாகவுள்ளார்கள்?

ஜனநாயக வாக்கெடுப்பில் மிக நம்பிக்கை கொண்டதாகக் கூறும் சர்வதேச சமுதாயம், தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக 1977 ஆம் ஆண்டில் பெரும்பான்மையாக வாக்களித்தார்களே, இதுவரையில் இந்த மக்கள் ஆணைக்காக சர்வதேச சமூதாயம் என்ன செய்தார்கள்?

அத்துடன் கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில், தமிழீழ மக்கள் "தமிழீழ விடுதலைப் புலிகள்" தான் தமது ஏகப்பிரதிநிதிகள் என்று வாக்களித்தார்களே, இதற்கு எதிர்மாறாக சர்வதேச சமுதாயம் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.

சர்வதேச சமூதாயத்தின் அலட்சியப் போக்கினால் தான் இன்று தமிழீழ மக்கள், படிப்படியாக தேர்தலில் நம்பிக்ககை இழக்கத் தொடங்கினார்கள்.

தமிழ் மக்களுக்கு தாம் செய்த அநியாயத்தை மறந்த சர்வதேச சமுதாயம், கடந்த தேர்தலில் எதற்காக தமிழீழ மக்கள் வாக்களிக்கவில்லை என்பது பற்றி வேடிக்கையாக தற்போது ஆராய்கிறார்கள்.

மிக அண்மைக்காலங்களில் சூடான் நாட்டில் தமது ஆதரவுகளைக் காட்டி, அங்கு ஓர் உடன்படிக்கை உருவாகுவதற்கு காரணமாக இருந்த சர்வதேச சமுதாயம், சூடான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைக்கும் இலங்கைத் தீவின் அரசியல் பிரச்சனைகளுக்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசங்களை கண்டார்கள்?

அப்படியானால் இலங்கைத் தீவில் ஏன் இவர்கள் ஒரு பக்கச் சார்பாக இயங்க வேண்டும்?

இலங்கைத் தீவில், தமிழீழ மக்களுக்கு எதிராக இடம்பெற்ற படுகொலைகளுக்காக சர்வதேச சமுதாயம் முன்பே குரல் கொடுத்திருந்தால், இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது மட்டுமல்லாது அங்கு ஓர் நிலையான அரசியல் தீர்வையும் நாம் கண்டிருக்கலாம்.

சர்வதேச சமுதாயம் திடீரென ஈழத் தமிழர்கள் மீது கபட நோக்கம் கொண்டு, ஓர் இரகசியத் திட்டத்துடன் சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு சார்பான முறையில் நடவடிக்ககைகளை மேற்கொள்வதை சர்வதேச அளவில் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஆனால் சிங்கள பௌத்த இனவாதிகள் யாரும், இலங்கைத் தீவின் இனப்பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் சமாதானமாக தீர்ப்பதற்கு சர்வதேச சமூதயத்தின் தலையீட்டை விரும்பவில்லை. இதை அவர்கள் தமது உரைகள், அறிக்கைகள் மூலம் அறிவித்துள்ளனர்.

சர்வதேச சமுதாயத்திடமிருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் எதிர்பார்ப்பது என்னவெனில், இடையிடை இடையே தமிழீழ விடுதலைப் புலிகளை மீது நெருக்கடிகளையும், கண்டன அறிக்கைகளையும் நவீன ஆயுதத் தளபாடங்களை மட்டுமே.

சிங்களத் தலைவர்களின் இந்த வெளிப்படையான அணுகுமுறையை, சர்வதேச சமுதாயம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாகவுள்ளது.

http://www.eelampage.com/?cn=27362

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.