Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சென்னையில் இருக்கும் இலங்கை துணை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற முடிவு?"

Featured Replies

சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்தை இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

 

 

எனினும் இது தொடர்பில் எந்தவித இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.


"சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் தற்போது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே உயர் ஸ்தானிகராலயத்தை இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது" என அவர் குறிப்பிட்டார்.

 

"இந்த ஆர்ப்பாடங்கள் தொடர்ந்தால் இலங்கை மக்கள் மற்றும் பிரதி உயர் ஸ்தானிகராலயத்தின் சொத்துக்கள் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படலாம். இதனை பாதுகாப்பதற்காகவே இடமாற்றம் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக" கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.


எனினும் எந்த பிரதேசத்திற்கு இடமாற்றுவது என்பது தொடர்பிலும் எந்த முவும் இதுவரை எற்றப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61566-2013-03-24-11-19-23.html

  • தொடங்கியவர்

தமிழகத்தில் எழுச்சி ஏற்படும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் கூறுவது "இலங்கைத்தூதரகத்தை முற்றுகையிடுங்கள். அதை அகற்ற சொல்லி கேளுங்கள்" என்பதுதான். ஏனென்றால் தமிழீழத்திற்கான முதற்படி அதுதான்.


அண்மையில் தமிழகத்தில் போராட்டம் தொடங்கியவுடனும் நாம் கேட்டது, அதைத்தான். "முடிந்தால், 1000 பேர் செத்தாவது அதை அகற்றிவிடுங்கள்" என்றுதான்..


இதற்காக வழமைபோல இனஅழிப்பு அரசின் விசுவாசிகளினதும் சில முட்டாள்களினதும் வசைக்கு ஆளாகவேண்டியிருந்தது. போதாததற்கு "போகாத ஊருக்கு ஏன் வழி தேடுகிறீர்கள்" என்ற கிண்டல் மொழியுடன் மத்திய அரசு- மாநில அரசின் அதிகாரம், வெளியுறவுக் கொள்கை, கொள்கை வகுப்பாக்கம், வர்த்தக நலன், பிராந்திய அரசியல் என்று நீண்ட வகுப்பெடுத்து தமிழகத்தில் இலட்சம் பேர் தீக்குளித்தாலும் இலங்கை துணை தூதரகம் அகற்றப்படமாட்டாது என்று வகுப்பு வேறு எடுத்தார்கள்.

 

ஆனால் இன்று நடந்தது என்ன? மாணவர்கள் சிங்கள தூதரகத்தை தூக்கி கடாசிவிட்டார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. நாளை என்ன நடக்கப்போகிறது என்று எந்த ஒரு மனிதனுக்கும் தெரியாது. நல்லதே நடக்கும் என்றே அவன் அடுத்த நாளை எதிர்கொள்கிறான்.


நாம் போராடும் இனம். நம்பிக்கையையும் முயற்சியையும் எந்தக்காரணத்தையும் கொண்டு கைவிடக்கூடாது. எமது கண்ணுக்கு தெரிய வேண்டியது இலக்கு ஒன்றுதான். நம்பிக்கையுடன் போராடினால் எதையும் சாதிக்கலாம்.

 

இலங்கை தூதரகத்தை அகற்ற முடியாது என்று நேற்று வரை சாதித்தவர்கள்தான் தமிழீழமும் சாத்தியமில்லை என்று சொன்னவர்கள். தூதரகத்தை அகற்றி பாதிக்கரியை அவர்கள் முகத்தில் இன்று பூசிவிட்டார்கள் மாணவர்கள். சிவப்பும் மஞ்சளும் கலக்குமிடத்தில் ஊடறத்து பாயும் புலியை சுமந்த தமிழீழ தேசியக்கொடியை தமிழீழ தலைநகர் கோணமலையில் விரைவில் ஏற்றி மீதிக்கரியை மாணவர்களுடன் சோந்து நாம் பூசுவோம்.


"தமிழரின் தாகம் தமிழிழ தாயகம்".

 

- முகநூல் - Parani Krishnarajani

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்றி, இது உங்களின் போரட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இது ஒரு மைல் கல். அடுத்தது IPL, காங்கிரஸ், ...

நல்ல விடயம்!
சென்னையில் செய்த சதி வேலைகளை இனி செய்ய முடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.