Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[காணொலி] தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கின்றோம் – ஈழத்தில் இருந்து ஒரு குரல்!

Featured Replies

உறவுகளுக்காக உறவுகள் எனும் இக் காணொலிக் கவிதை தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கும் ஈழத்தின் குரல்

 

http://youtu.be/bWfTECSsFN8

 

http://tamilleader.com/?p=8830

Edited by கலையழகன்

  • தொடங்கியவர்

இனி அழக் கண்ணீர் இல்லை - மே 2009 வன்னியில் இருந்து தமிழகத்தை நோக்கி வெளியிடப்பட்ட காணொலி

http://youtu.be/ldFm3IXequk

  • தொடங்கியவர்
மண்ணிருந்து
வானேறி வந்தது
போலொரு விஸ்வரூபம்...
 
எண்ணிலடங்கா
விண்ணர்களின் வானுயரும்
வீர கோசம்... 
 
தமிழன் வீரம் 
செத்ததென எவன்
சொன்னான்?
 
இந்தா பார்
எட்டுத்திக்கும்
ஆர்ப்பரிக்கிறது இடி போல
தமிழ் முழக்கம்..
 
தாயில்லையெனினும்
தாயின் சேய்கள்
‘உயிர் பாடிடும்
மந்திரம் தமிழ் என
சங்கெடுத்து முழங்குகின்றன.
 
 
 
ஊர் பிரிந்து,
உயிர் கருவறுத்து
தெரு நீளம்
நீளும் ஓலங்களுக்கு
விடை எதுவோ?
 
என்றோ ஒரு நாள்
உணர்வு பெறும்,
உயிர்ப்பு பெறும்
விடுதலைத் தாயின் கருவறை.
 
அப்பொழுது கல்லறைகள்
எல்லாம் எழுந்து நின்று
சன்னதமாடும்.
 
உங்கள் உயிர்த்
தியாகங்களுக்காய் கல்லறைப் 
பூக்களைக் காணிக்கையாக்குகிறோம்.
 
பென்னம் பெரிய சூரியன் சுடர்விட வைத்த
ஈழக்கனவை
சின்னஞ் சிறிய தீக்குச்சி,
தொப்புள்கொடி உறவுகளின் இதயத்தில்
தீ மூட்டி
அனல் வளர்த்திருக்கிறது.
 
பாலச்சந்திரன்கள்
ஒன்றல்ல இரண்டல்ல
ஆயிரமாயிரமாய்
அணி வகுத்து இருக்கிறீர்கள்.
 
இங்கே வீழ்ந்து பட்டதும்
ஒற்றைப் பாலச்சந்திரனல்ல!
ஓராயிரம் பிஞ்சுப் பாலகன்களுக்கு
இவனொரு சாட்சி மட்டுமே!
 
தொப்புள் கொடி மீது
உயிர் வளர்த்த
உறவான உன்னதங்களே
உங்களின் எழுச்சியால் 
இங்கே உருக்கொண்டெழுகின்றன
எமது உள்ளங்களும்..
 
ஆயினும் முட்சிறைகளுக்கு
நடுவில் நெரிபடும் இதயத்தால் 
என்னதான் இயலும்.
 
உங்களை மனதிருத்தி
விழிகளால் அர்ச்சிப்பதைத் தவிர..
 
மூ பத்து ஆண்டுகளுக்கு
முன்பாய்த்தானே
மாணவர் படை 
மார் தட்டி எழுந்ததாச் சொன்னார்கள்...
 
இந்தா ஈழதமிழனின்
இன்னல்களில் உயிர் நனைத்து
உணர்வெடுத்து,
உரமேற்றி, தினவெடுத்து நிற்கிறது
தமிழ் முறுக்கேறிய தமிழகத்துச் சேனைப்படை.
 
வீழாது எழுந்து
வானுயரம் ஏறி விண்ணதிர
வீரம் படைத்த தமிழ் குலத்து
இந்த நூற்றாண்டின்
விறள் கொண்ட வீரர்களே!
 
விடிவதற்காய் நீர் ஏற்றிய தீக்குச்சி தான்
திசையாவும் தீ மூட்டி
அனல் கக்கி
எரிகிறது.
 
நீர் மூட்டிய உணர்வுத் தீயில்
ஆயிரமாயிரம் தீப்பந்தங்கள்
கொழுந்துவிட்டு எரிகின்றன.
நன்றி என்ற ஒற்றைச் சொல்லுக்குள்
அடக்கிவிட முடியாது.
ஆயினும்,
மனங்களுக்குள் உங்களுக்காய் ஆராதிக்கிறோம்.
 
உம் போன்ற வீர உறவுகளுக்கு
தலைவணங்குகிறோம்..
 
நாம் தீயில் வெந்தபோதெல்லாம் 
நீங்களும் வெந்தீர்கள்..
 
உறவுகளே இன்னொரு உயிர்ப்பலி
உங்கள் வேகங்களுக்கு தடை போட அனுமதியாதீர்கள்..
 
சோகங்களால் உங்கள் வேகங்களுக்கு
அணை போடாதீர்கள்...!
 
உங்கள் உயிர் கொடுத்து
உரமேற்றிய போராட்டத்திற்கு
இனியும் ஒரு உயிர்ப்பலி வேண்டாமே!
 
உணர்வுகளுக்கு மட்டும் தீயிடுங்கள்..
உடல்களுக்கு தீ மூட்டாதீர்கள்.
 
 
உயிர்ப்பிரிவின் உயிர் வலி எங்களுக்கும் புரியும்..
 
ஆனாலும் உயிர்சிந்திய கொடைகளுக்காய் நாங்களும்
உங்கள் உறவுகளும் - சோகத்தின் சாயல்களை
பரவவிட்டு பரிதவிக்கிறோம்.
 
வாய்மைகளாலும், வல்லமைகளாலும்
அகிம்சைகளாலும் உலகம் போற்றிய 
புத்த தேசமும், காந்தி தேசமும் இன்று
புத்தரையும், காந்தியையும் கொன்று போட்டு,
கோர ஆயுதங்களோடு வெறித்தனம் கொண்டாடுகின்றன.
 
மூன்று வருடங்கள் 
மூடிக்கிடந்த முக்காட்டினை
கழற்றிவிட்டு தாயகத்து உறவுகளும்,
தொப்புள் கொடி உறவுகள் உங்களுடன்
உங்களுடன் சிறகடித்து
பறக்கத் துடிக்கின்றோம்.
 
எங்கள் சிறகுகளை நோக்கி
கொடுவாள்கள் இன்னமும்
நீட்டிக்கொண்டே இருக்கின்றன.
 
ஆனாலும், நீங்கள் மூட்டிய தீயில்
எங்கள் இறகுகளில் வீரியம் பெறுவதாய்
நிமிர்ந்து கொள்கிறோம்.
 
பெரியப்பன், சிற்றப்பன் 
பிள்ளைகளாய் தானே பார்த்தார்கள்.
இல்லை
நாமெல்லாம் ஒற்றைத் தாயின் 
வயிற்றுப் பிள்ளைகள் என்று உங்கள்
உதிரத்தால் உணர்த்திவிட்டீர்கள்.
 
அண்ணனுக்கு தம்பியும்
தம்பிக்காய் அண்ணனும்
நன்றிகள் எதற்கு,
நனைவோம் விடுதலை நெருப்பில்,
உருக்கொண்டாடும்
உணர்வுகளுக்கு
விடுதலையால் குளிர்தருவோம்.
 
உன்னதங்களின் உச்சங்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள்.
 
‘உயிர் பாடிடும் மந்திரம் தமிழ்;’ என ஒன்றாய் இணைவோம்..
‘உயிர் பாடிடும் மந்திரம் தமிழ்;’ என ஒன்றாய் இணைவோம்..
எழுவோம்.. எழுவோம்.. நிமிந்து செல்வோம்.. எம் பாதை வெல்வோம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.