Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதிச்சாக்கடையில் அணைந்துவிடுமா சகோதரா நம் புரட்சித்தீ ???

Featured Replies

சாதிச்சாக்கடையில் அணைந்துவிடுமா சகோதரா நம் புரட்சித்தீ ???


அசைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு வானம் நோக்கி வளர்ந்து நிறகும் ஒரு
பெரும் சுவரை நேர்கொண்டு மோதி இடித்தழிப்பதைவிட, அதன் அடியிலிருக்கும்
இரண்டொரு செங்கற்களை உருவிவிட்டாலே போதும், எவளவு பெரிய சுவரும் ஆட்டம் காண
ஆரம்பிக்கும்.

தன்னினத்தின் இழிவு கண்டு வெகுண்டெழுந்த மாணவர் புரட்சியை நேர்கொண்டு அடக்க அஞ்சும் நயவஞ்சகர் கூட்டம்
கையிலெடுத்திருக்கும் நரித்தனமான தந்திரம் இதுவேயாகும், அடம்பன்
கொடிகளானாலும் மிடுக்குடன் திரண்டவர்களை ஆளுக்கொரு திசையில் பிரித்துவிட
அவர்கள் கையிலெடுத்த கடைசி ஆயுதம்தான் "சாதி"................

அதுஏனோதெரியவில்லைஆண்டாண்டுகாலமாய்
சாதி என்ற சின்னஞ்சிறிய வட்டத்தினுள் தம்மை இறுக்கமாக
இணைத்துக்கொள்பவர்கள், மொழி என்ற பரந்த பரப்புக்குள் தம்மை வலுவாக
பிணைப்பதில்லை, ஒரு சாதி இளைஞன் இன்னோர் சாதிப்பெண்ணை காதலித்தால்
கொதிக்கும் பல சாதிப்பிரியர்களின் இரத்தம், தம் தமிழினத்தை கதறக்கதற
கருவறுத்துக்கொன்றபோது கொதிக்கவில்லை, தமிழன் என்ற ஓரணியில் திரண்டால்
மற்றைய சாதிக்காரனுடன் கை கோர்க்கவேண்டும் என்பதாலோ என்னவோ, சாதி என்ற
வரம்பை மீறி தமிழனுக்காய் குரல்கொடுத்தவர்கள் மிக சொற்பமே, அவ்வப்போது சில
அரசியல்வாதிகளும் தமது அரசியல் இருப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்ளும்
சுயலாப நோக்கத்துக்காய் "ஐயகோ தமிழா!" என்று அலறியதுண்டு, ஒரு சிலர்
உண்மையான உணர்விலும் குரல்கொடுத்ததுண்டு, ஆனால் அரசியலுக்கும்
சினிமாவுக்கும் அப்பாற்ப்பட்டு எழுந்த குரல்களெல்லாம் சாதி எல்லைகளுக்கு
உள்ளேயே முடங்கிவிட்டன.

ஆண்டாண்டு காலமாய் நிலவிய இந்த
அவலங்களுக்கெல்லாம் முடிவாக, எல்லா வரம்புகளையும் விலங்குகளையும்
தகர்த்தெறிந்து வீறுகொண்டெழுந்தது இளரத்தம்..... பயம் என்பதையே அறிந்திராத
புதுரத்தம்.... தமிழ் என்ற ஒற்றைக்கூரையின்கீழ் ஒன்றுதிரண்டெழுந்து
எட்டுத்திக்கும் இட்ட கர்ஜனை எதிர்த்தவர் செவிகளில் இடியென இறங்கியது,
ஏதிலிகளாய்ப்போன ஈழ உறவுகளை எழுந்திருங்கள் என்று இருகரம்கொண்டழைத்தது,
எங்கும் புரட்சி ஏகமாய் வெடித்தது, குனிய மறுத்தவர்களையும் கும்பிடவைத்தது,
எட்டெழுந்து நூறாகி கோடிகளாய் கரைபுரண்டது அந்த புரட்சி வெள்ளம், எங்கே
அந்த வெள்ளத்தில் தமது அற்பமான அரசியல் அடையாளங்கள் அழிந்து விடுமோ என்று
அஞ்சிய அரசியல் சக்திகள், ஆர்ப்பரித்து எழுந்த அந்த ஒளியை தமது பக்கம்
திருப்ப முயற்சித்து மூக்குடைபட்டுத்திரும்பின, சிலருக்கு செருப்படி
கொடுத்ததும் சீர்வரிசை செய்து அனுப்பினார்கள் நம் மாணவர்கள்.

இந்த
போராட்டத்தால் ஆதாயம் தேட எண்ணி ஏமாந்த அந்த அரசியல் சக்திகள்,
பழிக்குப்பழி வாங்கும் நோக்குடன் இப்போராட்டத்தை நசுக்குவதற்காக
மாணவர்களிடையே சாதி ரீதியான கருத்து முரண்பாடுகளை விதைக்கதொடங்கியிருப்பது
பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது, சும்மா உளறிக்கொண்டிருந்த
சுப்பிரமணிம்சுவாமியும் இன்று சாதியை கையிலெடுத்து,
இப்போராட்டப்பெரும்சுவரின் செங்கற்களை மற்றைய சாதிப்பிரிவினைவாதிகளுடன்
சேர்ந்து உருவ எத்தனிக்கிறார், சுப்பிரமணியம்சுவாமியின் அறிக்கையை விட
அவருக்கு பதில் கொடுக்கும் முகமாக "பார்ப்பனிய படையை நீ திரட்டு அதற்கு
நாம் பதிலடி கொடுப்போம்" என்ற சில மாணவர்களின் கருத்துப்பகிர்வுகளே மிக
ஆபத்தானவை, இது அந்த சமுகத்தை சேர்ந்த உண்மையான தமிழ் இன உணர்வாளர்களின்
மனதை புண்படுத்தி பிரிவினைக்கு வழிகோலும்.

சுப்பிரமணியம்சுவாமி
வெளிப்படையாக விதைத்த இந்த விஷ விதைகளை, வேறு சில சாதி அரசியல் வெறியர்கள்
மறைமுகமாக தூவத்தொடங்கியிருப்பதுவும் அந்த விஷ விதைகள் ஆங்காங்கே முளைத்து
தலைதூக்க முயற்சிப்பதுவும் மிக மோசமான அறிகுறிகளாகும்.

சாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளே! உங்களை கெஞ்சி கேட்க்கிறோம், உங்கள் அரசியல் ஆசைகளுக்கு அடிபணிய மறுத்ததால்

வஞ்சகமற்ற எங்கள் இள நெஞ்சங்களில் நச்சு விதைகளை தூவாதீர்கள், உங்களால்
எங்கள் பாட்டனும் அப்பனும் அனுபவித்த நரக வாழ்க்கை போதும், எங்களையும் அந்த
சாதிச்சாக்கடைக்குள் தள்ளி காசு பார்க்காதீர்கள், அந்தகார இருள்கிழிக்க
புறப்பட்ட இந்த அக்கினிக்குஞ்சுகள் மீது உங்கள் அழுக்கு அரசியலை வாரி
இறைக்காதீர்கள், யார் யாரோ வேற்று மாநிலத்தவனெல்லாம் எமக்காக குரல்
கொடுக்க, எம் இனத்தவர் நீங்களே எம் குரல்வளை நசிக்கலாமோ? சொந்த இனத்துக்கு
குழிதோண்டும் இந்த பாவச்செயல் ஏழேழு தலைமுறைக்கும் உங்கள் வம்சத்தை
வாழவிடுமோ? தயவு செய்து எம்மை விட்டுவிடுங்கள், சின்னப்பயல்கள்தானே என்று
சீண்டிப்பார்க்காதீர்கள், எமக்கு உங்கள் யார் ஆதரவும் வேண்டாம், எம்மை
நாமாக வெளிப்படுத்த விடுங்கள், மாற்றத்தை நாம் கொண்டுவருவோம்.


மாணவர்களே! எம் ஒற்றுமையை சீர்குலைத்து இப்போராட்டத்தை அடியோடு
அழித்தொழிக்க மேற்கொள்ளப்படும் இந்த சதி வேலைகளை முறியடிப்போம், எமக்குள்
ஊடுருவி இதமாகப்பேசி எம் சாதி உணர்வுகளை தூண்டி எம்மை பிரிக்க நினைக்கும்
எட்டப்பர்களை துரத்தியடிப்போம், இனி நாமாவது சாதி வெறி அற்ற ஒரு சமுகத்தை
கட்டி எழுப்புவோம், மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை இந்த உலகிற்கு
நிரூபித்துக்காட்டுவோம், எம்மால் ஒரு சாதியற்ற சமுதாயம் சத்தியமாய் மலரும்.
நாளைய சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள் நமது பெயர் அங்கிருக்கும்........

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

யாருய்யா இது அபச குணமா பேசறது ??? இப்போ எந்த ஜாதி காரனாவது குட்டையை கிளப்பினா அப்புறம் அந்த ஜாதிக்கே சங்குதான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.