Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புடன் யாழ்வாணன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


வேதனைக்கு வேதனை என்பதா?

அண்டவன் தந்த சோதனை என்பதா?

 

எது எப்படி இருப்பினும் யதார்த்தம் என்ற ஒன்றும் ஈழத் தமிழர் வாழ்வில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பது என்ற நிலைக்கு எம் ஈழத்தமிழினம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விடயமே.

எம் ஜி. ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், தமிழக அரசினதும், அரசியல் தலைவர்களினதும் உதவி எம் ஈழத் தமிழினத்திற்குக் கிட்டும் என்று எம்மவர்கள் நினைத்திருந்தால் அது தான் நாம் விட்ட மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்று கூறவேண்டும். 1987ல் எம். ஜி. ஆர் அவர்கள் மறைந்த பின், தமிழக ஆட்சி பீடத்தில் ஏறியவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” எனும் பதங்களைப் பயன்படுத்திய ஒவ்வொரு தடவையும் அதில் அவர்களது நலன் சார்ந்திருந்ததை அரசியல் அவதானிகள் நன்கு அறிந்திருப்பார்கள்.

90 களிலிருந்து எமது தேசியப் போராட்டம் கண்ட அதி துரித வளர்ச்சி,அதற்குப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவு - இவை இரைண்டிற்கும் மேலாக எமது போராட்டம் வெற்றி பெறும் என்று புலம் பெயர் தமிழர், தாயகத்து உறவுகள், மற்றும் சில தமிழகத் தலைவர்கள் ஆதியோர் கொண்டிருந்த அபார நம்பிக்கை என்பனதான் அவ்வப்போது தமிழக ஆட்சி பீடத்திலிருந்தவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” போன்ற பதங்களை உச்சரிக்கக் காரணமாயிருந்தன என்றால் அது மிகையாகாது.

1987முதல் 2009 வரை தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைப்பதற்காகவும், தமது அரசியல் நலன்களுக்காகவும் ஈழம் சம்பந்தப்படுத்திய பதங்களைப் பாவித்த போதேல்லாம் ஈழத் தமிழர்களாகிய நாம் அவர்களுடைய சுய ரூபம் தெரிந்திருந்தும் அவர்களுக்காக கரகோஷமிடும் அளவிற்கே அந்த கால கட்டத்து சந்தர்ப்ப சூழ் நிலைகள் எம்மை வைத்திருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது.

தமிழ் நாட்டில் இதே நிலை இன்றும் தொடர்வது தான் கசப்பான உண்மையுமாகும். இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்துச் சொல்கிறது கலைஞர் கருணாநிதி இன்று கேட்டிருக்கும் கேள்வி. 26 வருடங்கள் கழிந்த பின்பாவது நாம் கண் விழிப்போமா?

நாம் ஈழத் தமிழர்கள் எமக்கென்றொரு தனித்துவம் உண்டு. எம்மிடம் பணவளமும் அறிவு வளமும் நிறையவே உண்டு. நாம் ஒருவருக்கும் இரண்டாம் பட்சமானவர்கள் அல்லர் எமது பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக் கெதள்ளக்கூடிய ஆற்றல் எமக்குண்டு.

ஆனால் நாம் உணர மறுப்பது.......

“அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும” என்ற உண்மையைத்தான்.

கீழுள்ள இணைப்பைப் பார்த்த பின்பாவது உணர்ந்து செயற்படுவோமா உறவுகளே?

 

அன்புடன் யாழ்வாணன்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=677224

Edited by யாழ்வாணன்

 தமிழ் நாட்டில் இதே நிலை இன்றும் தொடர்வது தான் கசப்பான உண்மையுமாகும். இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்துச் சொல்கிறது கலைஞர் கருணாநிதி இன்று கேட்டிருக்கும் கேள்வி. 26 வருடங்கள் கழிந்த பின்பாவது நாம் கண் விழிப்போமா?

 

 

 

" தமிழ்நாட்டில் இந்த நிலை தான் இன்றும் தொடர்கின்றது " - இல்லை.

 

கருணாநிதி (திமுக) காங்கிரஸ் என்ற கூட்டமைப்பின் அஸ்தமனம் மட்டுமல்ல ஒரு புதிய அத்தியாயம் தமிழக மற்றும் உலகத்தமிழர் அரசியல் வரலாற்றில் ஆரம்பமாகி உள்ளது. இதை வரும்காலம் காட்டும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனைக்கு வேதனை என்பதா?

அண்டவன் தந்த சோதனை என்பதா?

 

எது எப்படி இருப்பினும் யதார்த்தம் என்ற ஒன்றும் ஈழத் தமிழர் வாழ்வில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பது என்ற நிலைக்கு எம் ஈழத்தமிழினம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விடயமே.

எம் ஜி. ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், தமிழக அரசினதும், அரசியல் தலைவர்களினதும் உதவி எம் ஈழத் தமிழினத்திற்குக் கிட்டும் என்று எம்மவர்கள் நினைத்திருந்தால் அது தான் நாம் விட்ட மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்று கூறவேண்டும். 1987ல் எம். ஜி. ஆர் அவர்கள் மறைந்த பின், தமிழக ஆட்சி பீடத்தில் ஏறியவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” எனும் பதங்களைப் பயன்படுத்திய ஒவ்வொரு தடவையும் அதில் அவர்களது நலன் சார்ந்திருந்ததை அரசியல் அவதானிகள் நன்கு அறிந்திருப்பார்கள்.

90 களிலிருந்து எமது தேசியப் போராட்டம் கண்ட அதி துரித வளர்ச்சி,அதற்குப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவு - இவை இரைண்டிற்கும் மேலாக எமது போராட்டம் வெற்றி பெறும் என்று புலம் பெயர் தமிழர், தாயகத்து உறவுகள், மற்றும் சில தமிழகத் தலைவர்கள் ஆதியோர் கொண்டிருந்த அபார நம்பிக்கை என்பனதான் அவ்வப்போது தமிழக ஆட்சி பீடத்திலிருந்தவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” போன்ற பதங்களை உச்சரிக்கக் காரணமாயிருந்தன என்றால் அது மிகையாகாது.

1987முதல் 2009 வரை தமிழக ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைப்பதற்காகவும், தமது அரசியல் நலன்களுக்காகவும் ஈழம் சம்பந்தப்படுத்திய பதங்களைப் பாவித்த போதேல்லாம் ஈழத் தமிழர்களாகிய நாம் அவர்களுடைய சுய ரூபம் தெரிந்திருந்தும் அவர்களுக்காக கரகோஷமிடும் அளவிற்கே அந்த கால கட்டத்து சந்தர்ப்ப சூழ் நிலைகள் எம்மை வைத்திருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது.

தமிழ் நாட்டில் இதே நிலை இன்றும் தொடர்வது தான் கசப்பான உண்மையுமாகும். இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்துச் சொல்கிறது கலைஞர் கருணாநிதி இன்று கேட்டிருக்கும் கேள்வி. 26 வருடங்கள் கழிந்த பின்பாவது நாம் கண் விழிப்போமா?

நாம் ஈழத் தமிழர்கள் எமக்கென்றொரு தனித்துவம் உண்டு. எம்மிடம் பணவளமும் அறிவு வளமும் நிறையவே உண்டு. நாம் ஒருவருக்கும் இரண்டாம் பட்சமானவர்கள் அல்லர் எமது பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக் கெதள்ளக்கூடிய ஆற்றல் எமக்குண்டு.

ஆனால் நாம் உணர மறுப்பது.......

“அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும” என்ற உண்மையைத்தான்.

கீழுள்ள இணைப்பைப் பார்த்த பின்பாவது உணர்ந்து செயற்படுவோமா உறவுகளே?

 

அன்புடன் யாழ்வாணன்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=677224

ஈழ தமிழர்களுக்கு தன்னை பற்றி மிகவும் உயர்வாக எண்ணுவதை பற்றி என்ன சொல்ல ..... ground  realities எப்பொழுதும்  புரிந்து கொள்ள மாட்டார்கள்/ மறுக்கிறார்கள் அதுதான் உங்களின் பலவீனம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.